உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி; அடித்து சொல்கிறார் இபிஎஸ்!

2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி; அடித்து சொல்கிறார் இபிஎஸ்!

சேலம்: 'வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் இருக்கும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சேலம், ஆத்தூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: அ.தி.மு.க.,வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும். அ.தி.மு.க., வில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான்; அ.தி.மு.க., உங்கள் சொத்து.அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி அ.தி.மு.க., அ.தி.மு.க.,வை முடிக்கப் பார்த்தார்கள், முடக்கப் பார்த்தார்கள். ஆனால், முடியவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும், மன்னராட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என்று நினைக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் இருக்கும். அ.தி.மு.க., வலுப்பெற்று இருக்கிறது. தி.மு.க., தேய்கிறது. மக்களின் பணத்தை தி.மு.க., வீணடிக்கிறது. உதயநிதி, இன்பநிதி என எல்லாருக்கும் நிதி என பெயர். நிதி தான் அவர்களுக்கு முக்கியம். எம்.ஜி.ஆர்., அம்மா இருக்கும் போது கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல எப்போதும் துணை நிற்க வேண்டும். தமிழக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை அ.தி.மு.க.,தான் போராடிப் பெற்றுத் தந்தது. ரூ.1,500 தருகிறோம் என அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் சொன்னார்கள் என்பதற்காக தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டீர்கள். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

ஒரே எதிரி தி.மு.க.,!

பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: சேலத்துக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க., என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன். மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கச்சத்தீவை யார் தாரை வார்த்து கொடுத்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை பகுதி தெரியாததால் தான் மீனவர்கள் தாண்டி செல்கின்றனர். தி.மு.க.,வை வீழ்த்துவது தான் எங்கள் குறி. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான்.யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் ஆறு மாதத்தில் தெரியும். அதை மறைக்க முடியாது. தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., தயாராக இருக்கிறது. ஒரே எதிரி அ.தி.மு.க., தான். மற்ற கட்சிகள் இல்லை. சிதறி கிடக்கும் ஓட்டுகளை சேர்த்து தி.மு.க.,வை வீழ்த்துவோம். இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்தார்.

பிரச்னை வந்துவிடும்!

முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் 'அப்பா அப்பா' என அழைக்கிறார்கள் என கூறுவதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'முதல்வராக இருப்பவருக்கு எதை பேசணும், பேச வேண்டும் என தெரிய வேண்டும். அப்பா என சொன்னால் குடும்பத்திற்குள் பிரச்னை வந்துவிடும்' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tamil Inban
மார் 05, 2025 06:04

எப்படி சசிகலா ஜெயலலிதா சமாதிமேல அடிச்சி சொன்னதே அப்படியா, உங்களுக்குள்ள உள்ள அடிதடிய முதலில் முடிவுக்கு கொண்டுவாங்க


Vijay D Ratnam
மார் 04, 2025 22:05

முதலில் நீங்கள் அதிமுகவில் வாரிசு அரசியலை ஒழித்துக்கட்டுங்கள். கங்காரு குட்டியை தூக்கிகிட்டு திரியிற மாதிரி ஜெயக்குமார் மவன இழுத்துக்கிட்டு திரியிறாரு. அதிமுகவுக்கு உள்ளே எப்படியாவது மீண்டும் புகுந்துவிடவேண்டும் என்று முயற்சிக்கும் துரோகிகளுக்கு நிரந்தரமாக சாவுமணி அடிக்கவேண்டும். எதிரியை விட ஆபத்தானவர்கள் இந்த துரோகிகள். ஓபிஎஸ் மட்டுமல்ல தனியா கட்சி தொடங்கி நடத்தும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் விட்டால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கொதித்து போய் விடுவார்கள். அந்த விஷயத்தில் எடப்பாடி அவர்களே நீங்கள் செய்வது நூறு சதவிகிதம் சரி. அதேசமயம் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டதால் இஸ்லாமிய, கிருஸ்தவ வாக்குகள் உங்களுக்கு பெருமளவு வரும் என்று உறுதியாக சொல்லமுடியாது. பிகாஸ் இஸ்லாமிய வாக்குகள், கிருஸ்தவ வாக்குகள் என்பது காங்கிரஸ் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் இருக்கும் திமுக கூட்டணிக்குத்தான் செல்லும். அதுமட்டுமல்ல அரசு ஊழியர்கள் குடும்ப வாக்குகள் திமுக கொத்தடிமைகள் வாக்குகள் போல சிந்தாமல் சிதறாமல் விழும். தவிர கூலிக்கு கூவும் மீடியாக்கள், யூட்யூபர்கள், நடுநிலையாளர் போல பேசும் கூலிகள், சினிமா நடிகர்கள், சப்போர்ட்அவர்களுக்கு அதிகம். தவிர காவடி தூக்க தயாராக இருக்கும் கூட்டணி கட்சிகள் ஆதரவும் உண்டு. தவிர திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு வராமல் தடுக்க பாஜக, கமிஷனுக்கு கம்பெனி நடத்தும் நாம் தமிழர் என்று இரண்டு கட்சிகள் இதையும் தாண்டி அதிமுக தமிழ்நாட்டின் பெரிய கட்சி. திமுக கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்காதீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டைஇலை, அண்ணா உருவம் பொரித்த அதிமுக கட்சிக்கொடி. இவை நான்கும் தமிழக மக்களுக்கு மிக நெருக்கமான சக்ஸஸ் பிராண்ட். அது ஒன்றுதான் உங்களுக்கு ப்ளஸ் பாய்ண்ட். போஸ்டர், பேனர், கட் அவுட்களில் உங்கள் படத்தை பெரிதாக காட்டாமல் எம்ஜிஆர் ஜெயலலிதா போட்டோவை பெரிதாக போடுங்கள். மேடைகளில் கனிமொழி அமித்ஷா கள்ளக்கூட்டணியை, பாஜக திமுக கள்ள உறவை தைரியமாக விலாவாரியாக எடுத்து பேசுங்கள். சில விஷயங்களை திரும்ப திரும்ப பேசி மக்கள் மறக்காமல் செய்ய வேண்டும். கனிமொழி ஆண்டிமுத்து ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், தயாநிதிமாறன் ஊழல், பொன்முடி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு அடித்த கொள்ளைகள், அவர்களின் பாஸ் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் பற்றி பேசுங்கள். இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் துடிக்க துடிக்க கொண்றுகுவிக்க உறுதுணையாக இருந்த மாபாதக செயல்கள் குறித்து பேசுங்கள், தலைவிரித்தாடும் மது, கஞ்சா போதைப்பொருள் விற்பனை, அதனால் நடக்கும் ரவுடித்தனம், திருட்டு, கொலை, கொள்ளை, குழந்தைகளை கூட விட்டுவைக்காத பாலியல் பலாத்காரங்கள் குறித்தெல்லாம் பேசுங்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் 2026 ல் இல்லையென்றால் பிறகு எப்போதும் இல்லை.


Sundaran
மார் 04, 2025 20:23

பிரிந்தவர்களை சேர்த்து கொள்ளாவிடில் ஆட்சி கானல் நீர்தான். பிடிவாதம் சர்வ நாசத்துக்கு கொண்டு சென்று விடும்


T.sthivinayagam
மார் 04, 2025 19:31

ஐயா நீங்கள் அண்டார்டிகா கண்டத்தில் தான் அரசியல் செய்ய முடியும்


Laddoo
மார் 05, 2025 07:07

200ரூவா இருந்தாதான் ஒனக்கு பதில் கொடுக்க முடியும்


அரவழகன்
மார் 04, 2025 18:24

அப்போ பன்னீர் செல்வம் நாடு திண்டாட்டம் தானா...?


Madras Madra
மார் 04, 2025 16:33

வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல அதற்காக எதையும் விட்டு தர தயாராக இருக்க வேண்டும் உன்னால் உன் வறட்டு கௌரவத்தை விட்டு தர முடியாவிட்டால் தோல்வி உறுதி வெற்றி பெரும் விஷயத்தில் திமுக செயல்பாடு குற்றம் சொல்லும் விதத்தில் இருந்தாலும் அவர்களின் முனைப்பு பாராட்டுக்குரியது


Kumar Kumzi
மார் 04, 2025 16:01

நீ ஓங்கோல் துண்டுசீட்டு கைக்கூலி என்பது எல்லாருக்கும் தெரியும்


அன்பு
மார் 04, 2025 21:06

பங்காளி அரசியலுக்கு ஆதரவு தருவார். திமுகவுடன் கள்ள உறவு கொண்ட நல்ல மனிதர்.


V K
மார் 04, 2025 15:58

உனக்கு அதற்குள் அ தி மு க வில் முற்றுபுள்ளி வைத்து விடுவார்கள் போல் இருக்கு பழனி


V K
மார் 04, 2025 15:49

2026 அதுவரைக்கும் நீ அ தி மு க வில் இருப்பாயா பழனி


Nallavan
மார் 04, 2025 15:42

முதலில் கட்சியில் ஒற்றுமை இல்லை, நான்காக பிரிந்துள்ளது, சரியான கூட்டணி இல்லை, மக்களிடத்தில் தி மு க வை குறை மட்டுமே சொல்லபடுகிறது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக வை விட அதிகம் செய்வோம் என்ற வாக்குறுதி இல்லை,


MUTHU
மார் 04, 2025 16:59

சாமி. எப்படியோ அதிமுக ஒழிஞ்சா சரி. திரும்பவும் வந்து தொலைச்சிடாம. செல்லூர் ராஜு, வளர்மதி போன்றோர்களின் கோமாளி நிர்வாகம் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.


புதிய வீடியோ