உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எல்லோருக்கும் சுகர் இருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதங்கம்

 எல்லோருக்கும் சுகர் இருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதங்கம்

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்: அமைச்சர் அருண்ராஜ்: கடந்த ஆட்சிகளில், மக்கள் பயனடைய கூடிய நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், தவறுகளும் நடந்தன. சபாநாயகர் பிரபாபகர்: ஊழல் குறித்து அமைச்சர்கள் பேசும் போது, ஆதாரத்துடன் பேச வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது. தி.மு.க.,-ஓ.பன்னீர் செல்வம்: அமைச்சர் அருண்ராஜ், 3:30 மணிக்கு பேச தொடங்கி, 52 நிமிடங்கள் ஆகி விட்டன. உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலுரையாக தான் அவர் பேச வேண்டும். தேவையில்லாத பிரச்னையை பற்றி பேசக்கூடாது. நிறைய பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மயங்கி மயங்கி விழுகின்றனர். பயங்கர வேதனையாக இருக்கிறது; சமாளிக்க முடியவில்லை. இல்லையென்றால், அமைச்சர் பதிலுரையை, நாளை காலையில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
ஆக 18, 2026 16:22

பன்னீருக்கு முத்திப்போச்சு .... சுகரு ....


duruvasar
ஆக 18, 2026 13:46

ஹிந்து மதநீதிகளை பற்றி மூச்சு வராமல் பேசினால் திருச்சபையில் உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானுலும் பேசலாம். இந்த விஷயத்தில் அவைத்தலைவர் ரொம்ப ஸ்டிரிக்ட்டு.. சௌம்யா அன்புமணி கீதை என்ற பெயரை சொன்னவுடன் அவைத்தலைவர் டென்ஷன் ஆகி மணி அடிக்க ஆரம்பித்ததை பார்த்தோம். அதை ஒரு அறசீற்றமாகத்தான் பார்க்கமுடிந்தது.


Rathna
ஆக 18, 2026 11:46

கொள்ளை அடித்த சொத்தில் வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டியது தான்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 18, 2026 09:35

யார் சட்டசபைக்கு வரவில்லை என்று அழுதது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை