இலவச நோட்டு வழங்கல்
கோவை: கோவை சவுரிபாளையத்தில் உள்ள மகளிர் சேவா சங்கம் சார்பில் 16ம் ஆண்டு விழா நடந்தது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் சாரதா, சவுமியாவுக்கு பரிசுகளையும் பொருளாதார நிலையில் பின்தங்கிய 80 குழந்தைகளுக்கு இலவச நோட்டுகளையும் லயன்ஸ் கிளப் நிர்வாகி ராஜேந்திரன் வழங்கினார். அருகில், மகளிர் சேவா சங்க தலைவர் ரீனாபாலு மற்றும் பலர்.