உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்

தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: திருவிடைமருதுார் அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வெளியான நாளில், இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டதால், அரசுக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் தகவலை மூடி மறைத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, 34 வயது பெண், கும்பகோணத்தில் உள்ள சிமென்ட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், குடவாசலை சேர்ந்த சண்முகபிரபு, 29, கும்பகோணம், பேட்டையை சேர்ந்தபாஸ்கர், 40, பாபநாசத்தை சேர்ந்தபிரகதீஸ்வரன், 40, ஆகிய மூவரும் வேலை பார்த்து வந்தனர்.மே 12ம் தேதி, பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அப்பெண்ணை, பின்தொடர்ந்த மூவரும், அவரது வாயை பொத்தி, உமாமகேஸ்வரபுரம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சேதமடைந்த கட்டட பகுதிக்கு துாக்கிச் சென்றனர். அங்கு காத்திருந்த சீனிவாசநல்லுாரைச் சேர்ந்த சரவணன், 48, இருந்துள்ளார். நான்கு பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, வெளியில் கூறக்கூடாது என, மிரட்டியுள்ளனர். இது குறித்து, அப்பெண் தன் சகோதரர்களிடம் கூறி அழுதுள்ளார்.மே, 13ம் தேதி அப்பெண், ஆடுதுறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட, சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன், சரவணன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அன்றைய தினம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த கூட்டு பலாத்காரம் நிகழ்வையும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட தகவலையும் வெளி வராமல், போலீசார் மூடி மறைத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரிடமும், 'இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது' என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால் தாமதமாக இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Padmasridharan
மே 20, 2025 07:39

இவங்க பாக்கறதே மொதல்ல பணம் எவ்வளவு தேறும்னுதான். இவங்க வீட்டு பெண்களுக்கு நடந்தால் இப்படியே நடந்துகொள்ளட்டும். வாழ்க இப்படிப்பட்ட தமிழ்நாடு காவலர்கள், அவர்கள் குடும்பங்களும்


Kanns
மே 18, 2025 20:12

04People Raping??? Only Medical Report can Confirm If its Rape or Molestation. There is No Dearth of False Cases & PowerMisuses. FastTrack Cases & Punish RealAccused, If there is Concrete Evidences & Circumstances most witnesses are Cookedup. If Not Equally Punish False Complainants, PowerMisusers & All Vested-Selfish Supporting Criminals. For Most World Maladies esp False Cases, Crl Case Hungry Criminals police & magistrates, NewsHungry Biased Media, VoteHungry Parties are Responsible. Sack & Punish All Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, PowerMisusing Rulers, their Stooge Officials & Vested False Complainant Gangs women, unions/groups, SCs, advocates etc.Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with postSelection Law Trainings & Promotions till SC purely on above Merits.


naranam
மே 18, 2025 16:05

இப்படி மூடி மறைப்பதால் யாருக்கு என்ன பயன்? குற்றவாளிகளுக்கு பயம் என்பதே இல்லாமல் போவதற்கு இது போன்ற மூடி மறைப்பு கண் துடைப்பு வேலைகளே காரணம். இவர்களைக் கைது செய்து என்கவுன்டர் செய்துவிட வேண்டும். அப்போதுதான் காவல் துறைக்கு நற்பெயர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


s.sivarajan
மே 18, 2025 13:36

மக்களிடம் வக்கிரபுத்தி அதிகரித்துக்கொண்டே வருவது அறியாமல் அரசியல் நோக்கமே பெரிதாகிவிட்டது


sankaranarayanan
மே 18, 2025 13:11

குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட தகவலையும் வெளி வராமல், போலீசார் மூடி மறைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரிடமும், இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதை சிபிஐயிடம் உடனே கொடுத்து முதலில் அந்த நான்கு நபர்களையும் அதற்கு உடன்சென்ற போலீசு அதிகாரிகள் யவனாக இருந்தாலும் அவர்களை கைது செய்து பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கியதுபோன்று அந்த போலீசு அதிகாரிகளுக்கும் சேர்த்தே தீர்ப்பு வழங்க வேண்டும் வேலியே ஓணானை மேய்ந்தாற்போலாயிற்றே


inamar
மே 18, 2025 13:08

பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று பேசித்திரியும் ஆண்களே.... அவர்களுக்கும் ஒரு உணர்ச்சி இருக்கிறது என்றும் மதித்து நடந்தால் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும்.... இந்த உலகம் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் பார்க்கிறது....அவளின் உணர்ச்சியை மதியுங்கள்....அவளை மதித்து நடந்தால் அந்த குடும்பத்துக்கு நல்லது....


SVR
மே 18, 2025 12:15

இந்த உலகம் இப்பொழுது இருக்கிறது போல் இல்லாமல் இருந்தது இல்லை. சரியான காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாவிடில் தொந்தரவுதான். பயாலஜி யாருக்காகவும் காத்துக்கொண்டு இருக்காது. அது தன் வேலையை செய்து கொண்டு தான் இருக்கும். ஆனால் நம்மவர்கள் தான் பல விதமான சட்டங்கள் இயற்றி இயற்கையை இயற்கையாக இருக்க விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளார்கள். விளைவு மக்கள் தொகை அதிகரித்து இன்று 140 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஏன் என்று எல்லோரும் கவனிக்க வேண்டும். இந்த மாபாதக செயலில் ஈடுபட்டவர்களை ஜாமின் கொடுக்காமல் பல வருடங்கள் சிறையில் அடைக்க வேண்டும். அது ஒரு முன் மாதிரி ஆகி குற்றம் நடக்காமல் தடுக்க உதவும் தீர்ப்பாக இருக்க வேண்டும். இதையெல்லாம் நடக்கும்படி செய்யுமா இந்த விடியாதவைகள்? காலம் தான் பதில் சொல்லவேண்டும். இந்த விடியாதவைகளினால் ஒன்றும் செய்ய முடியாது.


என்னத்த சொல்ல
மே 18, 2025 11:29

உடனே கைது செய்யப்பட்டார்களா... சபாஷ்.


Anbuselvan
மே 18, 2025 09:27

யாரு இந்த சாரு ?


Kjp
மே 18, 2025 09:01

மாடல் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு ஆஹா ஓஹோ பேஸ் பேஷ்.ரொம்ப நன்னாயிருக்கு.


புதிய வீடியோ