உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை கிடுகிடு உயர்வு; சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

தங்கம் விலை கிடுகிடு உயர்வு; சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. வார துவக்க நாளான, மார்ச் 17ம் தேதி (திங்கள் கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று (மார்ச் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ