உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது!

மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று (ஜன.,03) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு, ரூ. 1,200 உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று (ஜன.02) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.7,180க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,03) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, ஒரு கிராமுக்கு, 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு, ரூ. 1,200 உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 03, 2025 10:30

தங்கம் விலையும் டாலருக்கு எதிரான ரூவாயின் மதிப்பும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுது. சூப்பர் வளர்ச்சி.


சமீபத்திய செய்தி