உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இறுதி கெடு

 அரசுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இறுதி கெடு

சென்னை: ''பழைய ஓய்வூதிய திட்டத்தை, டிசம்பர், 31க்குள் செயல்படுத்தாவிட்டால், போராட்டம் தீவிரமடையும்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், அதை செயல்படுத்த அரசு முன்வரவில்லை. எச்சரிக்கை மேலும், ஊதிய முரண்பாடுகளை களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட விடுப்பு எடுத்தால், ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, அரசு தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்து இருந்தார். அதையும் மீறி, சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றதால், அலுவலகங்களில் வருகை பதிவு குறைந்தது. ஆர்ப்பாட்டம் பல மாவட்டங்களில் எழுச்சியுடன், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, நான்கரை ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குழு, இன்னும் பரிந்துரைகளை முழுமையாக அரசிடம் அளிக்கவில்லை. தி.மு.க., ஆட்சி முடிவதற்கு, 100 நாட்கள் தான் அவகாசம் உள்ளது. எனவே, டிசம்பர் 31ம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும். அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றி, ஓட்டுகளை வாங்கலாம் என நினைத்தால், இனி அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

John John
நவ 20, 2025 11:24

அரசு ஊழியர் ஆசிரியர்களை ஏமாற்றிய தி மு க வை அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் போராட்டத்தில் 100 சதவீதம் அனைவரும் கலந்து நமது எதிர்ப்பை காட்ட வேன்டும் இவன் சி பி எஸ் ஆல் பணி நிறைவு பெற்ற ப ஆசிரியர்


cpv s
நவ 19, 2025 15:19

dismiss the post immidiatly, then appoint young people who ever ready to work without pension


SIVA
நவ 19, 2025 13:33

இதே திராவிட மாதிரி மாடல் ஆட்சி நடந்தால் நீங்கள் உங்கள் சம்பளப்பணத்திற்கே இது போன்று போராட்டங்கள் நடத்த வேண்டும்...


SIVA
நவ 19, 2025 13:27

பழைய ஓவ்யூ திட்டம் அறிவிக்கப்படலாம், பின் அதற்கு தடை கோரி இவ்ரகள் அல்லக்கைககள் மூலம் ஒரு வழக்கு போட்டு அதற்கு தடை வாங்கி அதை காரணம் காட்டி இந்த தேர்தலிலும் இவர்கள் அவர்களுடைய ஓட்டுக்களை பெறுவார்கள் ...


ganesan
நவ 19, 2025 11:09

இன்னுமா எங்களை நம்புறீங்க. face cut எ பார்த்தலே தெரிய வேண்டாமா


kjpkh
நவ 19, 2025 10:13

அதெல்லாம் ஒன்னும் கொடுக்க மாட்டாங்க.அப்புறம் எப்படி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் இன்னும் பல இலவசங்கள் ஓட்டு வாங்க கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.நாலரை வருடத்திற்குள் நாலே முக்கால் லட்சம் கடன் வாங்கியாச்சு.


V RAMASWAMY
நவ 19, 2025 10:07

போராட்டம் செய்யவிடுங்கள், செய்தால் பணி நீக்கம் செய்து வேலையற்ற திறமையுள்ள அறிவுஜீவிகளை புதிதாகத் தேந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள்.


V RAMASWAMY
நவ 19, 2025 10:06

ஓய்வூதியமே அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாத ஒன்று. வேலையே செய்யாமல் லஞ்சக்கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு மாத ஊதியமே அதிகம்.


முருகன்
நவ 19, 2025 09:52

எதற்கு எடுத்தாலும் அரசை போராட்டம் என்று மிரட்டும் இவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு படித்து விட்டு வேலை இல்லாத பட்டதாரி ஆசிரியர்களை இவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியில் வேலைக்கு அமர்த்த வேண்டும்


R.MURALIKRISHNAN
நவ 19, 2025 09:23

திமுக இனி வராது. ஏமாற்றுவதில் கெட்டி காரர்கள் திமுகவினர்.


சமீபத்திய செய்தி