உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடும் தண்டனை: மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடும் தண்டனை: மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். சமீபத்தில் சட்டசபையில், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள்; 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு துாக்கு; பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wm349u4t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண்ணை பின்தொடர்ந்தால் முதல்முறை ஐந்தாண்டு, இரண்டாம் முறை ஏழு ஆண்டுகள் வரை சிறை; அமிலம் பயன்படுத்தி காயம் ஏற்படுத்தினால் ஆயுள் அல்லது துாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மசோதா மீதான விவாதம் சட்டசபையில் நடந்த போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, வி.சி., - எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், கொ.ம.தே.க., ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் இச்சட்டத்தை வரவேற்றனர். அதை தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு வாயிலாக, இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று (ஜன.,23) பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டம் ஆகும். பின்னர் நடைமுறைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Selvaraj
ஜன 26, 2025 16:49

எப்படிப்பட்ட சட்டம் இருந்தாலும் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்குபவர்களாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீட்டிற்கு அடிபணிந்தால்..?


Kanns
ஜன 24, 2025 07:14

Always Many AntiMen GenderBiased Laws are Misused by Vested False Complainant& CadeHungry Criminal Gangs. Hence, Cheap & Irresponsible Political Stunts by VoteHungry Parties Without Punishment to Increasing Misusers


sankaranarayanan
ஜன 23, 2025 18:34

இந்த சட்டத்தில் ஒரு சிறிய திருத்தமும் கொண்டுவரவேண்டும் பாலியல் தொழிலுக்கு பாலியல் செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிற மறைமுகமாகவோ நேராகவோ உதவி செய்கிற சார் ,சார் போன்ற ஆசாமிகளையும் தண்டணைக்குள் கொண்டு வரவேண்டும்


GMM
ஜன 23, 2025 17:00

கிரிமினல் சட்டங்கள் அதிகம். உள்ள சட்ட குறைபாட்டை நீக்கி, புதுப்பிக்க வேண்டும். தேசிய அளவில் சட்டம் இருக்கும்போது, மாநில அளவில் சட்ட, எல்லை பிரச்னை எழும். அதிகாரம் போலீஸ், வக்கீலுக்கு மேல் பள்ளி, கல்லூரி, நிர்வாக அதிகாரிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். ஒழுக்கமற்று வாழும் பெண் புகாரை இரு பக்க குற்ற புகார் என்று கருத வேண்டும். ? திருமணம் ஆகாத கன்னிப்பெண் /குடும்பம் பெண் புகாருக்கு அதிக முக்கியத்துவம் சட்டம் தரவேண்டும். ஒரு நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்கவில்லை என்றால், அடுத்த நீதிமன்றத்திற்கு தானே மாறவேண்டும். உச்ச நீதிமன்ற தாமதம் பின், மத்திய உள்துறை முடிவு செய்ய வேண்டும். திராவிடம் தமிழகத்தில் இல்லாத பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யலாம்.


sankaran
ஜன 23, 2025 16:39

சினிமாவில் ஆபாச கட்சி கூடாது என்று சட்டம் கொண்டு வரலாமே... இன்டர்நெட் மற்றும் யூடுபில் போர்னோகிராபி கூடாது என்று சட்டம் கொண்டு வரலாமே... அப்படி கொண்டு வந்தால் அதை பெண்களே எதிர்ப்பார்கள்.. ஏன் என்றால் அவர்களுக்கு கோடி கணக்கில் பணம் வேண்டும்... அந்த ஆபாச காட்சியை பார்த்து விட்டு கற்பழித்தால் ஆம்பளைக்கு தண்டனை..


Naga Subramanian
ஜன 23, 2025 14:11

இந்த சட்டத்தை எமர்ஜென்சி காலத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும். மிக மிக தாமதம்.


Kasimani Baskaran
ஜன 23, 2025 14:03

என்னதான் சட்டம் போட்டாலும் ஞானசேகரன் போன்ற கேடிகளுக்கு காவல்துறையும், அந்த சார் போன்ற அரசியல் வாதிகளும் உதவி செய்யும் பொழுது உண்மையான குற்றவாளியை அணுகவே முடியாது.


Rengaraj
ஜன 23, 2025 13:29

சட்டம் எல்லாம் சரிதான். ஆனால் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 1.நீதிமன்றம் குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து நீதிவழங்க வேண்டும். 2.கைதுசெய்யப்பட்டு எப்.ஐ ஆர் போட்ட பிறகு கைதுசெய்யப்பட்டவர் யாராக இருந்தாலும், அவர் எந்தவித பதவியிலோ அதிகாரத்திலோ இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் வரை ஜாமீனில் வெளியேவிடக்கூடாது. 3. குறிப்பாக அப்பீல் என்ற பேச்சே இருக்கக்கூடாது. 4. தண்டனை பெற்ற குற்றவாளிக்கு அரசு தரப்பில் யார் உதவிபுரிந்திருந்தாலும் அவர் கைதுசெய்யப்படவேண்டும். அவர் அரசு பதவியில் இருந்தால் அவர் டிஸ்மிஸ் பண்ணப்படவேண்டும். 5. தண்டனை பெற்ற குற்றவாளிக்கு சாதகமாக வாதாடிய வக்கீல்களுக்கு பார்கவுன்சில் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கவேண்டும். பார்கவுன்சில் இந்தமாதிரி எச்சரிக்கப்பட்ட வக்கீல்களின் விபரங்களை இணையதளத்தில் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு வெளியிடவேண்டும். 6. இவையனைத்தும் தமிழக அரசின் புதிய சட்டத்தில் சட்டத்தின் உட்பிரிவுகளாக சேர்க்கப்படவேண்டும். 7. நம் தமிழகம் மாற்றமாநிலங்கள் அனைத்திலும் இந்தவிஷயத்தில் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.


Ramesh Sargam
ஜன 23, 2025 13:13

கடும் தண்டனை ஓகே. ஆனால், பாலியல் வழக்குகள் துரிதகதியில், அதாவது ஜாமீன் என்று அடிக்கடி கொடுக்காமல் நடந்தேறினால் சிறப்பாக இருக்கும். ஜாமீன் கொடுத்து, பிறகு அடுத்து hearing வருவதற்குள் குற்றம் செய்தவர்கள் இடைப்பட்ட காலத்தில் ஆதாரங்களை அழிக்க வழி ஏட்படுத்திக்கொடுக்காமல் நீதிமன்றம் செயல்படவேண்டும்.


radha
ஜன 23, 2025 11:36

RSS RAVI அவர்களே எப்படி உடனே ஒப்புதல் கொடுத்தீர்கள்? இது ஒங்க பா ஜ கட்சி கொள்கைக்கு விரோதேமான சட்டமா இருக்கே.


guru
ஜன 23, 2025 13:31

நீங்கள் ஒரு பெண் தானே?? அல்லது போலி பெயரா?


Naga Subramanian
ஜன 23, 2025 14:06

போலி பெயரில் ஒளிந்து கொண்டு என்ன ஒரு பிதற்றல்.


சமீபத்திய செய்தி