உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில்களில் கொடிமரம் அமைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

 கோவில்களில் கொடிமரம் அமைக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவில்களில் புதிய கொடிமரம், 'பிரதிஷ்டை' செய்ய, அறநிலையத்துறை கமிஷனர் அனுமதி பெற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுஉள்ளது. கோவில்களில் பழுதடைந்த, சேதமடைந்த கொடிமரங்கள், கமிஷனர் அனுமதியுடன் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்வது, வழக்கத்தில் இருந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டு உள்ள கோவில்களிலும், புதிய கொடிமரம் ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது தொடர்பாக, அறநிலையத்துறை கமிஷனர் வினய், வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுஉள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய, கமிஷனர் அனுமதி பெற வேண்டும்  புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய் வதற்கு, குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாகவே, கமிஷனர் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்  சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர் தீர்மானத்துடன், கமிஷனர் அனுமதிக்கு, முன்மொழிவு அனுப்பப்பட வேண்டும்  புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, துறை சட்ட விதிகளுக்கும், ஆகம நெறிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும்  கோவிலுக்கு புதிய கொடிமரம் உபயதாரரால் வழங்கப்பட்டிருந்தால், அவரது சம்மத கடிதம் இணைக்கப்பட வேண்டும்  புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின், செப்பு, பித்தளை, தங்கம், தங்கமுலாம், தங்கமின் முலாம் பூசிய கவசங்களைப் பொருத்த, துறை அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
ஜூலை 24, 2026 21:00

அராஜகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்


ஊர்குருவி
ஜூலை 24, 2026 18:14

எல்லாரும் ஒருமித்த கருத்தைத்தான் எழுதுகிறீங்க . ஏன் எல்லோரும் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கக்கூடாது . சட்டம்பிரிவு 107 இல் இது எந்த வழிபாட்டு தலங்களையும் கட்டுப்படுத்தாது என்றுதான் இருக்கின்றது .இதை அரசும் அரசின் அதிகாரிகளும் படித்து புரிந்துகொள்ளவில்லை .தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் அறநிலைய துறை பற்றிய வழக்கு விசாரணையின் உள்ளது .பிரிவு 107 இல் உள்ள கருத்தை அரசின் வழக்குரைஞ்சர் உச்சநீதிமன்றத்தின் ஆய்வுக்கு எடுத்துரைக்க எல்லோரும் வலியுறுத்தவேண்டும் .அரசின் சட்டத்துறைக்கு மின்னஞ்சல்மூலம் வலியுறுத்தவேண்டும் .


சத்யநாராயணன்
ஜூலை 24, 2026 13:32

அறம் இல்லாத அராஜக துறை அதன் செயல்பாடுகள் இப்படித்தான் ஒரு தலை பட்சமாக இருக்கும்


M S RAGHUNATHAN
ஜூலை 24, 2026 08:17

இது ஹிந்து கோயில்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? அப்படியென்றால் இது மத சார்பற்ற அரசு இல்லையா ? கிருத்துவ சர்ச்களில் கொடி மரம், தேர் பவனி ஆகியவற்றை இந்த அரசு எப்படி அனுமதிக்கிறது ? ஹிந்துக்கள் ஒன்று கூடி இதை எதிர்க்க வேண்டும். நீதி மன்றம் இந்த உத்தரவு அறநிலைய சட்டப் படி உள்ளதா என்று உடனடியாக ஆராய்ந்து தீர்ப்பு வெளி இட வேண்டும். உயர் நீதி மன்றம் HRCE ஆணையர்கள், செயலாளர்கள் மற்ற உயர் அதிகாரிகளிடம் HRCE சட்ட விதிகளை அறிந்துள்ளனரா என்று பார்த்து வகுப்பு எடுக்க வேண்டும். செயல் அலுவலர் என்ற பதவி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் என்று சட்டம் சொல்கிறது. தக்கார் என்ற பதவியே கிடையாது. HRCE தானாகவே உருவாக்கிக் கொண்ட பதவி. சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதில் முதலில் இருப்பது HRCE. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள். டீஸ்டா செடல்வாட் அவர்களுக்கு என்றால் அவசர அவசரமாக அமர்வு அமைத்து பிணை வழங்கும் உச்ச நீதிமன்றம் இந்து கோயில்கள் விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றன. ஏனென்றால் டீஸ்டா செடல்வாட் ஒரு முன்னாள் attorney general. என்ன கொடுமை இது. இந்து கோயில்கள் விழா என்றால் நிபந்தனைகளுக்கு மேல் நிபந்தனை. அதே வேறு மத விவகாரம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு அனுமதி. ஹிந்துக்கள் இந்த இந்துஸ்தானத்தில் அடிமைகள் என்று தற்போதைய அரசும், முன்பிருந்த திமுக, அதிமுக அரசுகளும் நினைத்து அரசாட்சி செய்கிறார்கள்.


M S RAGHUNATHAN
ஜூலை 24, 2026 07:48

Blatant abuse of power by the HRCE department. It has nothing to do with the religious rituals pertaining to the temple, of which, the installation/ erection of DWAJHASTHAMBAM is a part. Who are the EOs , fit persons to decide this. HRCE has no role on this aspect at all. It should be decided by the Agama Pundits and the hereditary trustees. The rules of Agama are paramount and the rules of HRCE have no Place in erection.


Varadarajan Nagarajan
ஜூலை 24, 2026 06:36

அறநிலையத்துறை என்பது கோவில்களின் கணக்காளர் வேலையைமட்டுமே செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு. மற்றபடி பூஜை நடைமுறையிலோ வேறு விஷயங்களிலோ மூக்கை நுழைக்க அதிகாரம் இல்லை என பல நீதிமன்றங்கள் பலமுறை பல தீர்ப்புகளில் கூறியும் இன்னுமா இவர்களுக்கு புரியவில்லை? அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு பொறுப்பேற்க வேண்டிய வேலைகளைமட்டும் செய்யவேண்டும். கோவில்களுக்கு சொந்தமான பலகோடிரூபாய் சொத்துக்கள் எங்கு யாரிடம் உள்ளது? அவற்றிலிருந்து வரவேண்டிய வருவாய் பாக்கி எவ்வளவு? இவைகளுக்கு யார் பொறுப்பு? ஆலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களா?


kulanthai kannan
ஜூலை 24, 2026 06:30

சர்சுகளில் கொடி மரம் நிறுவும் பழக்கம் ஐரோப்பாவில் உள்ளதா? இங்கு மட்டும் திடீர் சர்சுகளில் திடீர் கொடி மரங்கள், ஈ அடிச்சான் காட்சியாக முளைப்பது எப்படி?


ManiK
ஜூலை 24, 2026 05:41

கோவில் கொடிமரம் வைக்க அனுமதி பெறவேண்டும். தவெக கொடிகம்பு வைக்க அனுமதி தேவையில்லை. கோவில் கொடிமரம் அருகில் நமஸ்காரம் செய்ய பக்தர்கள் டிக்கெட் அனுமதி வாங்க சொன்னாலும் சொல்லுவானுங்க.


Mani . V
ஜூலை 24, 2026 04:55

ஏன் ஆபீஸர்ஸ், அர்ச்சனை செய்வதற்கு, யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய இருக்கிறோம்? என்பதற்கெல்லாம் முன் அனுமதி வாங்க வேண்டுமா? மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய ஆயிரம் பிரச்சினைகள் நாட்டில் இருக்கிறது. அதையெல்லாம் கவனிக்கத் துப்பில்லை.


Kasimani Baskaran
ஜூலை 24, 2026 03:56

இது மத சார்பற்ற அரசா அல்லது இந்துக்களுக்கு மட்டும் எதிரான அரசா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை