உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 19, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; வார்னிங் கொடுத்தது வானிலை மையம்

இன்று 19, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; வார்னிங் கொடுத்தது வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,14) 19 மாவட்டங்களிலும், நாளை (நவ.,15) 7 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் தமிழகம், அரபிக் கடல் பகுதிகளில் காற்றத்தழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (நவ.,15)

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நவ.,20ம் தேதி வரை கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MARI KUMAR
நவ 14, 2024 15:39

வானிலை மையம் கணித்து சொன்னது போல் திருநெல்வேலி கொட்டியது கனமழை, விவசாய நிலங்கள் மீண்டும் பயிரிட வேண்டும் என்றால் நாளை அவசியம்


ராஜ்
நவ 14, 2024 15:35

இந்த வருடம் சென்னையில் மழையே இல்லை இனிமேல் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் இல்லை ஏரிகள் வறண்டு வெயில் காலத்தில் தண்ணீருக்கு பஞ்சம் வரப்போகிறது. நேற்றும் இன்றும் சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பில் சொல்லப்பட்டது எதுவுமே சரியில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை