உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெரு நாய்களை கையாள்வதில் வெளிநாடுகளை பின்பற்றலாம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

தெரு நாய்களை கையாள்வதில் வெளிநாடுகளை பின்பற்றலாம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வெளிநாடுகளில் தெரு நாய்கள் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது; என்ன தீர்வு காணப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து, அதை நம் நாட்டில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் மற்றும் மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.அருண்பாபு ஆகியோர் ஆஜராகி, 'தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. தெரு நாய்கள் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என்றனர். இதையடுத்து நீதிபதிகள், 'தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து, அதே பகுதிகளில் விடும்பட்சத்தில், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்க போகிறீர்கள்' என, அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு பிளீடர், தனி காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், 'அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அவற்றுக்கு உணவளிக்க செல்ல யாருக்கு தைரியம் உள்ளது; அதுபோன்ற நாய்களை கையாள வேறு நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை சட்டத்தை சுட்டிக்காட்டி, தொண்டு நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்யும். 'அதனால், வெளிநாடுகளில் தெரு நாய்கள் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது; என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து, அதை நம் நாட்டில் பின்பற்றலாம்' என, யோசனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sasikumaren
செப் 06, 2025 02:32

வெளிநாட்டு நாய் வாழ்க்கை செலவு என்று சொல்லி அதற்கொரு ஐயாயிரம் கோடிகள் செலவு என்று பணத்தை சுருட்டி விடுவது


SP
செப் 06, 2025 00:02

அமெரிக்காவில் முன்பு ஒரு மிருக காட்சி சாலையில் சிங்கம் ஒருவரை தாக்கியது உடனே அந்த நிர்வாகம் சிங்கத்தை சுட்டுத் தள்ளியது. அதுதான் அதற்கு தீர்வு. நம்மவர்களாக இருந்தால் சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடத்துவார்கள்.


SP
செப் 06, 2025 00:02

அமெரிக்காவில் முன்பு ஒரு மிருக காட்சி சாலையில் சிங்கம் ஒருவரை தாக்கியது உடனே அந்த நிர்வாகம் சிங்கத்தை சுட்டுத் தள்ளியது. அதுதான் அதற்கு தீர்வு. நம்மவர்களாக இருந்தால் சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நடத்துவார்கள்.


Anantharaman Srinivasan
செப் 05, 2025 15:09

நாய்களை சமைத்து உண்ணும் நாடுகளுக்கு ஏற்மதி செய்ய உரிமம் வழங்குவது தான் சிறந்த வழி. அப்புறம் பாருங்க.. ஒரு நாய் என்ன. நாய் குட்டியை கூட தெருவில் பார்க்க முடியாது,நம் கவுன்சிலர் MLA போல..


Venkateswaran V
செப் 05, 2025 12:29

தெரு நாய் பராமரிப்பு சம்பந்தமாக நமது அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தயார்.


ganesha
செப் 05, 2025 12:09

பேசாம தெருநாய் களை அனுப்பிவெச்சுடலாம்


Ramalingam Shanmugam
செப் 05, 2025 11:51

நாய்களை காடுகளில் விட்டு விடலாம்


ஆரூர் ரங்
செப் 05, 2025 12:43

காட்டு மிருகங்களையும் கடித்து நோய் பரப்பினால் என்ன செய்ய முடியும்?


M Ramachandran
செப் 05, 2025 11:31

நீங்க இப்படி சொன்னதும் நிஜமான அக்கறையிலல்ல. தலையிலிருந்து பாதம் வரைய ஊர் சுத்த கிளம்பிடுவான்கள் உண்மையான அக்கறையுடன் அல்ல.


ஆரூர் ரங்
செப் 05, 2025 11:16

ஏற்கனவே ராபீஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி போட்டு அதே பகுதியில் விடுவது அர்த்தமற்றது. ஆபத்தானது. பறவைக் காய்ச்சல் பரவிய போது இலட்சக்கணக்கான கோழிகளை அழித்ததை கோர்ட் தடுக்கவில்லை.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 05, 2025 10:11

முஸ்லீம் நாடுகளில் தெரு நாய்களை கொன்றால் பணப்பரிசு வழங்கப்படும். கிழக்காசிய நாடுகளில் தெரு நாய்களை பிரியாணி செய்து உண்பார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நாய்கள் ஊமையாகவும், ஆண்மையற்றதாகவும் மாற்றப்படும். இப்படி பல வழிகள் உள்ளன. நம் நாட்டில் நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டதாக கணக்கெழுதி சம்பாதிக்க மட்டும் தெரியும். நாய்கள் அழிந்துவிட்டால் பின்னர் எப்படி ரேபிஸ் ஊசி மருந்து விற்பனை ஆகும்? எப்படி தொடர்ந்து நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டதாக கணக்கெழுதி சம்பாதிக்க முடியும்?