உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் நெரிசல் சம்பவ வழக்குகளை இன்று விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்

கரூர் நெரிசல் சம்பவ வழக்குகளை இன்று விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான எட்டு வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், செப்., 27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர். விதிமுறைகள் இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள், தலைவர்கள் நடத்தும், 'ரோடு ேஷா' போன்றவற்றை ஒழுங்குபடுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருகுமரன் மற்றும் பொன் காந்திமதிநாதன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிடக்கோரி, விழுப்புரத்தை சேர்ந்த ராஜன் என்பவர், மனு தாக்கல் செய்துள்ளார். கலெக்டர், எஸ்.பி., - டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, த.வெ.க., தொண்டர் கார்த்தீபன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். சிறப்பு அமர்வு கரூர் சம்பவத்தை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அவர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது. கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அமர்வு நியமனம் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளார். சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார். நெரிசல் பலி தொடர்பான வழக்கில், முன் ஜாமின் கோரி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த எட்டு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன. இந்த வழக்குகளில், பரபரப்பான உத்தரவுகள் பிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
அக் 27, 2025 07:40

ஊருக்கு வெளியே ஊர்வலம், கூட்டம் என்று விதிமுறைகளை ஏன் வகுக்க கூடாது.? முன்னெச்சரிக்கை அளவிட முடியாது. கலெக்டர் ,SP போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை. ஏன் தலைமை செயலர், துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர் விரும்பவில்லை? . நடிகர் விஜயின் பொது ஒழுங்கு பொறுப்பு என்ன? கட்சி அங்கீகாரம் பெறவில்லை? சிறப்பு அமர்வு அமைக்க பதிவாளர் உத்தரவு? பதிவாளர் பணி என்ன? உண்மை தன்மை மூடி மறைக்க திரைமறைவு மனுக்கள்? ஆரம்ப நிலை நீதிமன்ற விசாரணை உண்மை மறைக்க பட்டு நீதியை வழி மாற்றி விடும். பொது நல வழக்கு என்பதால், பொது மக்கள் நேரடியாக விசாரணையில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.


Kasimani Baskaran
அக் 27, 2025 04:02

ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் டாஸ்மாக் ஊழலை மாநில அரசே விசாரிக்க வேண்டும் என்று உருட்டும் நீதிமன்றம் 41 பேரை கொலை செய்ததை மட்டும் ஏன் எடுத்து விசாரிக்க வேண்டும்? ஒருவேளை சிறுபான்மை தலைமை வேண்டும் என்று சர்வதேச அழுத்தம் வருகிறதா? இபிகோ வுக்கு சிறுபான்மை / பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது என்று யார் நீதிமன்றத்துக்கு சொல்வார்கள்?


முக்கிய வீடியோ