உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்

சென்னை: ''தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னையில் நடந்த பாஜ மையக் குழு கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: அக்டோபர் முதல் தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மாவட்டந்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, சமுதாய தலைவர்கள் சந்திப்பை நயினார் நாகேந்திரன் மேற்கொள்வார். நாள்தோறும் 3 இடங்களில் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.தினசரி இரண்டு இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்து 3 வது இடத்தில் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுவார். இபிஎஸ்யின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பாஜ தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அவர் பேச்சு பாஜவை பாராட்டும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

M Ramachandran
செப் 17, 2025 15:15

வறுத்த படும் வேணுகோபால் அண்ணனுக்கு 200 ஊபீ பீசு உங்களை போல் லாரி களில் காசு கொடுத்து கூட்டம் கொண்டு வர அவருக்கு தெரிய வில்லை வசதியும் இல்லையெ. அவரிடம் உங்களை போன்று மக்களிடம் கொள்ளையடித்த பணமும் இல்லை. அதனால்தானே வந்த கூட்டம் தான் அவருக்கு. வருத்த படாதீங்க.


M Ramachandran
செப் 17, 2025 15:08

அண்ணாமலையின் பேச்சு அது காலத்தின் கட்டாயம்.


Venugopal S
செப் 17, 2025 11:53

அண்ணாமலையின் பேச்சில் அவர் கூட்டத்துக்கு அத்தனை கூட்டம் வரவில்லை என்ற வருத்தம் தெரிகிறது!


தாமரை மலர்கிறது
செப் 16, 2025 23:32

எடப்பாடியின் சிரிக்கும் பல் அழகை கண்டு ரசிக்க, விஜய்க்கு வந்த மாதிரி ஒரு பெரிய கூட்டம் அலைமோதுகிறது. வேனில் ஏறுகிறது, டான்ஸ் ஆடுகிறது என்று அள்ளிவிட வேண்டியது தானே. ஒரு யானை பூனை ஆகிவிட்டது. குதிரை கழுதையாகி விட்டது. சிங்கம் சிறுத்து கழுதை புலியானது.


SP
செப் 16, 2025 21:13

இன்று அண்ணாதுரையாரை பாராட்டியவர் ஒவ்வொரு கூட்டத்திலும் சென்று கருணாநிதியாரையும் ஈ. வே. ராமசாமியாரையும் பாராட்டி விழா எடுக்கசொல்லுங்கள். தமிழக பாஜக அமோக வெற்றி பெறும்


Hindu
செப் 16, 2025 20:18

இத்தனை நாட்களுக்கு பின், எங்கிருந்து மிரட்டல் வந்தது?.


pakalavan
செப் 16, 2025 20:12

ஸ்டாலின் நன்றாக ஆட்சி நடத்துகிறார், உதயநிதி மக திறமையாக துணைமுதல்வராக இருக்கிறார் என்று அன்னாமலை சொல்லுவாரு, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா


கனோஜ் ஆங்ரே
செப் 16, 2025 19:54

“பேச்சா பேசுன...? இன்னா பேச்சு பேசுன... எடப்பாடிய பத்தி...? போச்சா... அண்ணாமலை எல்லாமே போச்சா..?”... அப்படீன்னு வடிவேல் காமெடிலதான் கமெண்ட் போட வேண்டியிருக்கு..? பாவம் அண்ணாமலை...? நான் இவர், அரசியலில் நுழைந்த உடனேயே சொன்னேன்... நான் 1976லந்து தமிழ்நாட்டு அரசியலை பார்த்து வருகிறேன்... இந்த தமிழ்நாட்டு அரசியல்... “நாய்களும், பேய்களும், நயவஞ்சப் பேய்களும், பேடித்தனமும், மோசடித்தனமும் நிறைந்ததுதான் அரசியல்... இதுல உஷாரா இல்லென்னா... நிஜார அவுத்துடுவானுங்க”...ன்னு சொன்னேன்... கேட்டாரா...அண்ணாமலை...? கேக்கலை... “வானத்தை வில்லா வளைப்பேன்”..னாரு...? இப்பப் பாரு...? இவர் வில்லா வளைஞ்சு... எடப்பாடிய.. நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு...ன்னு புகழ்ந்து பேசுறாரு...? நாம சொன்னா என்ன பைத்தியம் ...னு சொன்ன அண்ணாமலை..க்கு ஜே.. போட்ட கூட்டத்தையும், எடுப்பு எடுத்த எடுப்புகள் ஒருத்தரையும் காணோம்...? உத்தமபுத்திரன், அரிச்சந்திரன்...னு பட்டம் கொடுத்தவனுங்களையெல்லாம் காணோம்...?


Gnana Subramani
செப் 16, 2025 19:53

அடுத்த தேர்தலில் பிஜேபி இல் சீட் கிடைக்கா விட்டால் அதிமுக வில் சீட் வாங்க அண்ணாமலை முயற்சி செய்கிறார்


மாபாதகன்
செப் 17, 2025 12:52

ஒருவேளை இப்படியும் இருக்குமோ??


Gnana Subramani
செப் 16, 2025 19:47

எப்படியாவது எடப்பாடிக்கு ஜால்ரா அடித்து அவர் அமித் ஷாவுக்கு சிபாரிசு செய்து பதவியை பெற அண்ணாமலை துடித்துக் கொண்டு இருக்கிறார்