உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனித்துப் போட்டியிடுவது தான் வீரம்: சீமான்

தனித்துப் போட்டியிடுவது தான் வீரம்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் த.வெ.க., மற்றும் தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளார் என கேள்வி எழுப்பப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2vimhac&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு சீமான் அளித்த பதில்: அதை வரவேற்கிறேன். தி.மு.க., உடன் மோதி அழிக்கணும், அதை வீழ்த்தணும் என நினைக்கும் எனது தம்பி நிலைப்பாட்டை வரவேற்கிறேன். நிருபர்: தி.மு.க.,வை வீழ்த்தணும் என நினைப்பவர்கள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்களே?சீமான்: பிரிந்து எங்க இருக்கிறோம். நான் வந்து ஆள் சேர்த்து கொண்டு சண்டைக்கு போகிற மரபு எனக்கு இல்லை. எங்களது அண்ணனை உலக நாடுகள் படைகளை எதிர்க்க வந்தார்கள்.நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன். ஒரு நாய் நான்கு நாயை சேர்த்து கொண்டு வேட்டைக்கு சென்றால் சரியாக இருக்கும்.ஒரு புலி 10 புலிகளை சேர்த்து கொண்டு வேட்டைக்கு சென்றால் சரியாக இருக்காது. கூட்டத்தில் நிற்க வீரமோ, துணிவோ தேவையில்லை. தனித்து நிற்க தான் வீரம், துணிவு தேவை. நாங்கள் வீரர்கள், தனித்து நின்று மோதுகிறோம். அவர் செய்கிறார். நீங்கள் செய்யவில்லை என கேட்கிறீர்கள். 100 பேர் கேட்கிறீர்கள், கூட்டணி இல்லாமல் எப்படி என்று, ஒருவர் கூட கொள்கை இல்லாமல் எப்படி என்று கேட்பதில்லை. எதிரியை தீர்மானித்து விட்டு களத்திற்கு வந்தவர்கள் நாங்கள். யாரை வீழ்த்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டு போருக்கு வந்து இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை. தடுமாற்றமும் இல்லை. 4 மாதத்தில் யார் யாருடன் செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். நாங்கள் எங்கே நிற்கப்போகிறோம் என்று தெரிந்துவிடும். எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், தெளிவாக இருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

vijai hindu
மார் 31, 2025 10:06

தனியா கம்பு சுத்திட்டு இரு


Barakat Ali
மார் 30, 2025 21:25

திமுகவுக்கு உங்க உதவி எப்ப வரைக்கும் தேவைப்படும் தமிழர்களின் பாதுகாவலரே ????


Krishnamurthy Venkatesan
மார் 30, 2025 20:11

இன்றைய அரசியல் சூழலில் தனித்து போட்டி என்பது விவேகமாகாது. ஒரு பலம் வாய்ந்த அரசனை குறுநில மன்னர்கள் தனியாக எதிர்த்தால் என்ன ஆகும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற மூதுரையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒரு வலிமையான எதிரியை வீழ்த்த வேண்டுமானால் மற்றவர்களை அரவணைத்து செல்லுங்கள். உங்களின் இந்த வீரம் திமுகவிற்கு சாதகமே. வெற்றியே இல்லையெனில் கட்சி தொண்டர்கள் சோர்ந்துவிடுவார்கள். சிந்திக்கவும்.


SIVA
மார் 30, 2025 18:48

நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன் , அப்ப அப்பாதான் தான் என்ன ஏது என்று டீல் பேச முடியும் அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதை சரியாக செய்ய முடியும் .....


Sampath Kumar
மார் 30, 2025 17:47

உங்க வீரம் எல்லாம் விலை போகி பல நாளாச்சு. வீரத்தை பற்றி நீங்க பேசாதீங்க...


SIVA
மார் 30, 2025 17:44

ஒரு ஐ பி ஸ் அதிகாரியை ஒற்றைக்கு ஒற்றை வா என்று சவால் விடுகின்றார் , சமூக வலை தளத்தில் அந்த அதிகாரி குடும்பத்தை பற்றி விமரிசனம் செய்கின்றார் , வழக்கு விசாரணைக்கு அழைத்தால் வர முடியாது என்று என்று பேட்டி கொடுக்கின்றார் , வழக்கு விசாரணைக்கு வரும் போது அனுமதி இல்லாமல் சுமார் ஆயிரம் பேர் உடன் வருகிறார்கள் , இவர் தான் வீரர் ஆயிற்றெய் எதற்கு ஆயிரம் பேர் துணைக்கு , இது சம்பந்தமாக அவர் மீது எந்த வழக்கும் இல்லை , ஏன் என்றால் இவர் தீமூக்காவை உண்மையாக எதிர்க்கின்றார் .....


raghavan
மார் 30, 2025 17:17

இப்படியே போனால் 2026 க்கு பின் வீட்டிற்கு புளி வாங்க கூட கையில் காசு இல்லை என்று தம்பி புலிகள் கூட்டம் தெறித்து ஓடிவிடும்.


KR india
மார் 30, 2025 15:20

எதிர் வரும், தமிழக சட்டமன்ற தேர்தலில், இவரை எந்த கூட்டணியில் சேர்த்தாலும் பிரயோசனம் இல்லை. காரணம், பெங்களூரில் குடியிருக்கும், நடிகை ஒருவர் விஷயத்தில், இவர் பெயர், அதல பாதாளத்தில் சென்று விட்டது. அந்த நடிகையை யார் என்றே தெரியாது, என்று பல வருடங்களாக கூறி வந்தவர், சமீபத்தில் தான், அந்த நடிகை பாலியல் தொழிலாளி என்றும், தனக்கு அந்த நடிகையுடன் ஆறு மாதம் மட்டும் தொடர்பு இருந்ததாகவும், கூறி, தவறை ஒப்புக் கொண்டார். தன்னை பாலியல் தொழிலாளி என்று சீமான் கூறி விட்டாரே, என்று அந்த நடிகை அழுது புலம்பி, வீடியோ வெளியிட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால், என்ன செய்ய பழகுவதற்கு முன்பு, யோசித்திருக்க வேண்டாமா ? இரு தரப்பிலும் தவறு உண்டு என்பதை நியாயமாக ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும், திரு.சீமான் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் இவரது அணுகுமுறை பிடிக்காமல், கட்சியை விட்டு சென்று விட்டனர். நடிகர் விஜய், திரு.சீமானின் ஓட்டுக்களை பிரிப்பார் அ .தி.மு.க + பா. ஜ.க + பா.ம.க + தே.மு.தி.க + வாசன் + புதிய தமிழகம் + ஜான் பாண்டியன் + பிற உதிரி கட்சிகள் கூட்டணி சேர்ந்து அமைக்கும் பட்சத்தில், வெற்றி பெற வாய்ப்புண்டு.


Kjp
மார் 30, 2025 15:08

உங்களது வீரத்தினால் திமுகவுக்கு அமோக லாபம்.கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் சீமான் பேசுகிறார்.தமிழ் நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.நான் தனியே நின்று என் பலத்தை காட்டுவேன் என்று சொல்வதற்கு பெயர் வீரமா.அகங்காரம்.


இறைவி
மார் 30, 2025 15:05

இவர் தீயமுகவின் பி டீம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். தீயமுகவின் எதிர்ப்பு ஒட்டுக்களை பிரிக்கத்தான் இவர் வெகு காலம் முன்பே இறக்கப்பட்டு தன் விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார். இதை பேசு தமிழா பேசு அப்பட்டமாக வெளிக் கொண்டு வந்து விட்டது. அதையும் மீறி பதினைந்து வருடங்களாக ஓருவர் எந்தவித வெற்றியும் காணாமல் கட்சி நடத்த வேண்டும் என்றால் அதற்கான நிதி யார் தருகிறார்கள் என்ற பெரும் கேள்வி உள்ளது. இப்போது பிஜெபியும் அஇஅதிமுகவும் கூட்டணி என்றவுடன் விஜய் பதறுகிரார். என் எதிரி திமுகதான் என்கிறார். ஆனால் கொள்கை அத்தனையும் அப்பட்டமாக தீயமுகவின் கொள்கைகள். பின் விஜய் என்ன புதிய அரசியல் செய்யப் போகிறார்? தீயமுகவிற்கு தன்னை பலப்படுத்தவும் தெரியும். எதிரியை பலவீனப் படுத்தவும் தெரியும். அவர்கள் பாரம்பரியம் அப்படி. பதவிக்காக எதுவும் செய்வார்கள். எதிரிகள் தனியாக இருந்தால்தான் தீயமுகவிற்கு வெற்றி.


புதிய வீடியோ