உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திரா இருந்திருந்தால் தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருப்பார்

இந்திரா இருந்திருந்தால் தி.மு.க., ஆட்சியை டிஸ்மிஸ் செய்திருப்பார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், நேற்று ஹிந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தை, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திறந்து வைத்தார். பின் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சியில் சுகாதார வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் மக்களுக்கு செய்து தரவில்லை.

மீண்டும் 'மிசா'

திங்கட்கிழமை தோறும், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ஆனால், எந்த மனுவுக்கும் தீர்வு இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஹிந்து மக்கள் கட்சி அலுவலகம் துவங்கி, ஹிந்து ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பணியை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் கூறி உள்ளது. ஆனால், ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது என, முதன்முதலில் சொன்னவர் அமைச்சர் தியாகராஜன். அதனாலேயே, அவருக்கு டம்மி துறை ஒதுக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்பட்டுஉள்ளார். அமலாக்கத் துறை வழக்கை நேர்மையாக எதிர்கொள்ள துணிவில்லாமல், கோர்ட் வாயிலாக தடை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ஜனநாயக முறைப்படி நடக்கின்றனர். அது தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. இதே, காங்கிரஸ் முன்னாள் பிரதமர் இந்திரா, இப்போது இருந்திருந்தால், பிரிவினைவாதம் பேசும் தி.மு.க.,வினரை முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்திருப்பார். மீண்டும் 'மிசா' சட்டம் பாய்ச்சப்பட்டிருக்கும்.

வழங்கக்கூடாது

இந்த சூழ்நிலையில், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து விட்டுத்தான், சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், ஊழலில் சம்பாதித்த கோடிகளை தேர்தலில் செலவு செய்வர். தமிழக அரசுக்கு, எப்போதும் போல் மத்திய அரசு, நிதி வழங்கக்கூடாது. முறையாக நிதி வழங்கினால், அதிலும் ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிப்பர். அதனால், மக்களுக்கு எவ்வித பயனும் இருக்காது. மக்களுக்கான திட்டங்களை, மத்திய அரசே நேரடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
மார் 25, 2025 19:44

அவர் மட்டும் இருந்திருந்தால் உங்களை எல்லாம் எப்போதோ முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்பார்! இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க விட்டு இருக்க மாட்டார்!


Apposthalan samlin
மார் 25, 2025 10:51

உதவாக்கரை என்று சம்பத் சொல்லுகிறார்


Matt P
மார் 25, 2025 10:50

இந்திரா இருந்திருந்தால் இப்போது அவருக்கு 105 வயது. கைத்தடியோடு ஸ்தாலினை சென்னை கோட்டையில் சந்தித்திருப்பார். ஸ்தாலினும் நேருவின் மகளே வருக என்று வரவேற்று இருப்பார். மிசா கால வலிகளை நினைவூட்டியிருப்பார்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 25, 2025 10:08

வாயா அர்ஜுன், எப்ப வந்த, ரொம்ப நாளாக ஆலயே காணோம்?


sribalajitraders
மார் 25, 2025 09:56

இவர் வேற அப்போ அப்போ வந்து காமெடி பண்ணிக்கிட்டு


Nallavan
மார் 25, 2025 09:41

அடுத்த இந்தியா பிரதமர் ஸ்டாலின், தமிழக முதல்வர் உதயநிதிஇதில் மாற்றம் இல்லை


SP
மார் 25, 2025 09:15

ஊழல் வழக்குகளை துரிதப்படுத்தி சட்டரீதியாக இவர்களை முடக்க வேண்டும்.


N Sasikumar Yadhav
மார் 25, 2025 09:00

திருட்டு திராவிட மாடல் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால் மத்தியரசு பழிவாங்குவதாக ஒப்பாரி வைத்து அனுதாப ஓட்டு வாங்கி மறுபடியும் ஜெயிப்பானுங்க


Mario
மார் 25, 2025 08:56

இந்திரா இருந்திருந்தால் பிஜேபி ஆட்சியே இருந்திருக்காது


Sampath Kumar
மார் 25, 2025 08:47

ஏன் இப்போ மட்டும் இந்திரா தேவையா? உங்க ஜி க்கு திராணி இருக்கா? அவர்க்கு இல்லை என்று நீ சொன்னதற்கு நன்றி போவியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை