உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சரிவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு கவர்னர் ரவி ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது: நமது இளைஞர்களில் 60 சதவீதம் பேர் அரசு நடத்தும் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலையில் இருப்பவர்கள். இந்தப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரநிலைகள் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட செய்ய இயலவில்லை. தமிழகத்தில் அரசுப்பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=70gapid5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தலைவிதி

வேலைவாய்ப்புகளின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களைப் பெற்றவர்களாக அவர்கள் வெளியேறுகிறார்கள். தரமான கல்வி இல்லாத நிலையில், அவர்களால் ஒருபோதும் சமூக மற்றும் பொருளாதார பாகுபாடுகளைக் கடந்து கண்ணியத்துடன் வாழ முடியாது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறி வருகிறது.

தற்கொலை

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது. அன்றாடம் 65 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் தற்கொலை செய்கிறார்கள் என்பதோடு, குழுவாகத் தற்கொலை செய்வதிலும் நமது மாநிலம் அதிக மோசமான நிலையில் இருக்கிறது. அதாவது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

போதைப்பொருள்

போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது. கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு இளைஞர்கள் மாறிவரும் போக்கு நிலவுகிறது. ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மிக, மிக அதிகமான கவலையை அளிக்கின்றன. இந்த கொடிய அச்சுறுத்தலை தேவை மற்றும் விநியோகம் என இரு தரப்பிலும் சமாளிக்க வேண்டும். எனினும், இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.

அச்சம்

சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்சோ) பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. 2024ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்சோ வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. நமது சகோதரிகளும் மகள்களும் தங்களின் வீட்டை விட்டு வெளிவர அச்சப்பட்டும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். அவர்கள், வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட்டால், அது நமது எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலைப் படரச்செய்து விடும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது மற்றும் இரும்புக்கரம் கொண்டுகடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

அப்பாவி
ஆக 15, 2025 11:01

ரிடையரானவங்களுக்கே பதவி நீட்டிப்பு. மற்றவங்க மேலே வரமுடியாம ஆப்பு.


ManiMurugan Murugan
ஆக 15, 2025 00:18

அருமை கவர்னர் அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்


Chandru
ஆக 14, 2025 23:24

Well said Right Said Governor Sir. Right thinking persons will salute you. As the Governor of Tamilnadu one can only talk about what is happening in this State. Bharath Mata ki Jai


Pandianpillai Pandi
ஆக 14, 2025 22:06

காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி அவர்களை ஊக்கப் படுத்தும் இந்த சுதந்திர திருநாளில்,உரை என்ற பெயரில் தமிழ்நாட்டை இகழ்ந்து பேசியிருப்பது ஏற்புடையதல்ல. குற்றங்கள் தடுக்கப்படுகிறது. குற்றங்கள் நடந்தாலும் தண்டனை நிச்சயம் என்ற விதையை முதலமைச்சர் விதைத்திருக்கிறார். போதைப்பொருளுக்கு எதிராக அவரே மீடியாக்களில் பிரச்சாரம் செய்கிறார். ஒரு மாநிலம் தனது அதிகாரத்திற்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்கிறார். இதை மக்கள் அறிவார்கள். இரவு பத்து மணிக்குமேல் பெண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்புகிறார்கள். சட்டத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்துகொண்டு அரசியல் நோக்கத்தோடு உங்கள் உரையை காணமுடிகிறது.நீங்கள் மத்திய அரசை திருப்திபடுத்துகிறீர்கள். எங்கள் முதலமைச்சர் மக்களை திருப்திபடுத்துகிறார்.


ديفيد رافائيل
ஆக 14, 2025 21:59

தமிழக ஆளுநருக்கு தைரியமிருந்தா மத்திய அரசிடம் complaint பண்ணி மாநில அரசை கலைக்க வேண்டியது தானே இதே காரணத்திற்காக.


மனிதன்
ஆக 14, 2025 21:58

குஜராத் துறைமுகத்திலிருந்து பிடிபட்ட பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் எங்கே சென்றது??? அது அலேக்காக அதானியிடம் சென்றது...அவர் என்ன அத கடல்லயா கரச்சாறு...இப்ப வந்து மாணவர்களாம் போதையாம் கலாச்சாரமாம்...


ஆரூர் ரங்
ஆக 14, 2025 22:09

போதை ரசாயனம் கடத்தவென்று தனியாக அயலக அணி துவக்கி நடத்திய ஓரே கோஷ்டி நம்ம திருட்டு முன்னேற்ற கழகம்தான்.


venugopal s
ஆக 14, 2025 21:29

இவர் பேச்சு தமிழக மக்கள் மீது உள்ள அக்கறை போல் தெரியவில்லை, ஒரு தமிழ்ப் பெண்மணியிடம் வாங்கிய அடியில் சித்தம் கலங்கி பேசுவது போல் உள்ளது. இவர் தமது சொந்த மாநிலமான பீகார் மக்களின் முன்னேற்றத்தைக் குறித்து கவலைப்பட்டு அங்கு போய் அவர்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம்! எங்கள் மக்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!


vivek
ஆக 15, 2025 08:00

சாம்பிராணி வேணு...நேத்து தான் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக மண்டியிட்டது...


Barakat Ali
ஆக 14, 2025 21:29

உண்மையைச் சொல்கிறார் அல்லவா ???? நாட்டாமை கிடைத்த குற்றவாளிகளுக்கு எரியத்தானே செய்யும் ????


Tamilan
ஆக 14, 2025 21:16

மத்திய அரசின் அலங்கோலங்களை சொல்லாமல் மறைத்துவைக்கமுடியவில்லை


Ramesh Sargam
ஆக 14, 2025 21:06

தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டிப்போடப்பட்டிருக்கிறது, அந்த இரும்புக்கரத்தினால் அந்த இரும்புக்கரம் இப்பொழுது துருப்பிடித்தும் போய்விட்டது. குற்றங்கள் அதிகரிக்க இவைதான் காரணம்.


முக்கிய வீடியோ