உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலக்குழி மரணங்களில் தமிழகம் முதலிடம் என்பது அவமானம் இல்லையா: சீமான் கேள்வி

மலக்குழி மரணங்களில் தமிழகம் முதலிடம் என்பது அவமானம் இல்லையா: சீமான் கேள்வி

சென்னை: மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என வெளிவரும் புள்ளி விவரங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான அவமானம் இல்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் வரலட்சுமி தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.வரலட்சுமிக்கு காலணி வழங்கப்படாததன் விளைவாகவே தூய்மைப்பணி செய்யும்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கிறாரெனும் செய்தி பெரும் மனவலியைத் தருகிறது. தூய்மைப்பணியாளர்களுக்கு 35 வகை பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படி இருந்தும், மிகவும் அடிப்படையான காலணியும், கையுறையுமே வழங்கப்படாத இழிநிலை நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம். சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் எளிய மக்களான தூய்மைப்பணியாளர்களைப் பணிப்பாதுகாப்பும், உயிர்ப்பாதுகாப்பும் இல்லாத ஒரு கொடுஞ்சூழலில், பணிக்கு அமர்த்துவதும், தனியார்மயப்படுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதுமான ஆளும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டிப் படைக்கும் 21ம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தொடர்வதும், அதில் சாதியின் அடிப்படையில் உழைக்கும் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்குச்செயல்பாடா? மலக்குழி மரணங்களில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என வெளிவரும் புள்ளிவிவரங்கள் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான அவமானம் இல்லையா?மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, 10 ஆண்டுகள் மேலாகியும் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை?தூய்மைப்பணியில் ஈடுபடும்போதே இறந்துபோன வரலட்சுமி மரணத்துக்கான துயர்துடைப்பு நிதியாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும், அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்பதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

V RAMASWAMY
ஆக 24, 2025 08:36

இவர்களுக்குத் தெரிந்தது எந்த திட்டமானாலும் அதில் ஓட்டை போட்டு ஆட்டை போடவேண்டியது தான். ஆறடி நிலத்தில் அடங்கும் உயிரிருக்கும் இந்த அழுகும் உடலுக்கு எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் வேண்டும், மூடர்களே.


V RAMASWAMY
ஆக 24, 2025 08:30

சுத்தத்தமிழில் விஷம் என்பதை விடம் என்று குறிப்பிடுவதுண்டு. அந்த வகையில் திராவிடம் என்பது திரவிஷமே..


mohana sundaram
ஆக 24, 2025 06:43

எப்படி இருந்த சைமன் என்ற சீமான் ஆமை கறி இப்படி ஆகிவிட்டானே என்ன கொடுமை சரவணா.


Kasimani Baskaran
ஆக 24, 2025 05:22

திராவிட பாரம்பரியம் என்பது அதுதான் - அதாவது பேசுவதற்கும் நடந்துகொள்வதற்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது.


kamal 00
ஆக 24, 2025 05:18

லிப்ஸ்டிக் புகழ் பிரியா குட்டிஇந்த உபகரணங்களை பீரீயா குடுப்பாங்களா அவுங்க மாமா ஸ்னேக் பாபு கிட்ட கையெழுத்து வாங்கிட்டு தான் தருவாங்க.... வெயிட் பண்ணுங்க


Mani . V
ஆக 24, 2025 05:14

குறைகளை மட்டுமே பேசக்கூடாது. கள்ளச் சாராய சாவுக்கு பத்து லட்சம் தருகிறோமா இல்லையா? உலகத்திலேயே முறைகேடான செயல் மூலம் இறந்தவர்களுக்கு அதிக நிவாரணம் தருவது எங்களின் மாடல் ஆட்சிதான். இதெல்லாம் பெருமையான விஷயங்கள்தானே?


Padmasridharan
ஆக 24, 2025 05:07

காலனி இல்லாததனால இவரு இறக்கவில்லை சாமி. இன்னும் சிலரும் வெவ்வேறு இடத்தில இறந்துள்ளார்கள். இதற்கு காரணம் ஏனோ தானோனு வேலை செய்யும் மின்சார ஆட்கள்தான். மின் கசிவு நடந்த இடங்கள் இல்லையா என்ன. ஒரு இடத்தில் மின்சார பிரச்சனை என்றால் உடனே எவ்வளவு பணம் தேருமென்றுதானே வருகிறார்கள். எல்லா அரசு வேலையாட்களும் அரசு சம்பளத்தை விட அதிகார பிச்சையெடுப்பதில்தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவங்க மட்டும் நல்லா இருந்த போதும் யார் எக்கேடு கெட்டா என்று நினைப்பவர்கள்தான் அதிகம் தற்பொழுது


Natarajan Ramanathan
ஆக 24, 2025 01:30

மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்குத் தடைவிதித்துச் சட்டமியற்றி, 10 ஆண்டுகள் மேலாகியும் இன்னும் நடைமுறை படுத்தாத அரசுமீது வழக்கு போடலாமே?


Vasan
ஆக 24, 2025 00:16

What are electrical inspectors and their chief doing? Government is spending so much on them. Why they are keeping their eyes closed? Instead of going again and again to Industries, which are far better in electrical safety, the inspectors should inspect the domestic electrical lines and certify them. Government should completely change the scope of work of electrical inspector officers.


Pandi Muni
ஆக 23, 2025 23:16

ஓங்கோலுக்கு ஓட விடாதவரை தமிழன் தரம் தாழ்ந்துதான் நிற்பான்


சமீபத்திய செய்தி