உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு

வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: தேர்தலில் பண பட்டுவாடா தொ டர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ வந்த தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார்.வேலுார் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, வேலுார் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ அவர் வந்ததால், நீதிபதி அது குறித்து கேள்வி எழுப்பினார்.'நீதிமன்றத்திற்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூடாது' என, எம்.பி.,யை கண்டித்தார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி சக்திகுமார், இவ்வழக்கில் கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் எ ன, உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Anandhan Vijayan
நவ 14, 2025 19:45

வாழ்த்துக்கள்


நடராஜன்
நவ 14, 2025 17:00

இந்த வக்கீல் கூட்டம், எம்பி, நீதிபதி எல்லோரையும் ஒரே நேரத்தில் தண்டிக்க வேண்டும்


K V Ramadoss
நவ 13, 2025 20:34

நீதி அரசர்களுக்கு வெட்கமே கிடையாதா ? காலம் கடந்த வழக்குகள் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்று மக்களுக்குத் தெரியும். நீதிமன்றமும் குற்றவாளிகளும் நாடகம் ஆடுகின்றனர் என்றும் தெரியும். தங்களின் தலையெழுத்து என்று தாங்களே சமாதானம் சேய்துகொள்ள வேண்டியதுதான்.


நீதி டா நியாயம் டா...நாட்டாமை
நவ 13, 2025 20:33

அப்பாடா கண்டிச்சாச்சு. போ போ. இடத்தை காலி செய். காத்து வரட்டும்...


kumarkv
நவ 13, 2025 17:46

சுடுகாட்டிற்கு படைசுழத்தான் போவார்கள். அதை இப்போதே ஒத்திகை பார்க்கிராகள்


Rathna
நவ 13, 2025 16:21

நாடு பிரியாணியில் இருந்தும் டெய்லி பேட்டாவில் இருந்தும் எப்போது வெளியில் வருமோ?


தத்வமசி
நவ 13, 2025 16:07

தற்போதைய மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக பேசும் போது வேகமாக பேசும் நீதிபதிகள், மற்ற கட்சிகளின் வழக்குகளில் எப்போதுமே மந்தம் தான். வழக்கு நடப்பதாக ஒரு மாயை தான். திருவாளர் பொன்முடி அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவாயிற்று ? இது போல பல தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் எல்லாம் புஸ்வானம் தான். சோனியா, ராகுல், லாலு, ராஜா, கனிமொழி, சிதம்பரம் என்று பெரிய பட்டாளமே உள்ளனர். இது இந்த நீதிபதிகளுக்கு புரியாதா ? ஆர்எஸ் பாரதி நீதிபதிகள் பற்றி கூறியது இன்னும் இவர்களின் காதில் சென்று சேரவில்லை போல.


S Kalyanaraman
நவ 13, 2025 12:35

2019ல் நடந்து முடிந்த தேர்தலில் பண விநியோகம் சம்பந்தமாக இப்போது வழக்கு வேலூரில் நடந்து கொண்டு இருக்கிறது. 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு எம் பி ஆகி விட்டார். 2929 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம் பி ஆவார். அதன் பிறகும் கேஸ் நடந்து கொண்டு இருக்கும்.


Sun
நவ 13, 2025 12:21

வழக்கு பணம் பதுக்கிய வழக்கு. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி 20 பேர் புடை சூழ என்னவோ பெரிய தியாகி மாதிரி உரியவர் நீதி மன்றம் வருகை. ஆண்டவா இந்த தமிழ் நாடு எதை நோக்கி போய்க்கிட்டு இருக்கு?


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 13, 2025 11:55

கோர்ட் விசாரிக்காமல் இருக்க நடந்த நாடகமாக இருக்கலாம். திராவிட மாடல். விஞ்ஞான ரீதியான திட்டமிடல்.


Raghavan
நவ 13, 2025 13:17

நீதிபதியும் அவர்களும் முன்பே பேசி இப்படி செய்யுங்கள் என்று திட்டமிட்டு இருப்பார்கள். புடைசூழ வருகிற வக்கீல் எல்லாம் ரோடு சைடு பாரதி சொன்னது போல் வந்தவர்களாக இருக்கலாம் யார் கண்டது. ஒரு வக்கீலுக்கு 1000 ரூபாய் என்று வைத்டுக்கொண்டாலும் வந்திருக்கிற கூட்டத்துக்கு குறைந்தது 20,000 ரூபாய் கொடுத்திருப்பார்கள். உழைத்து சம்பாதித்ததாக இருந்தால் பணத்தின் மதிப்பு தெரியும் இது கள்ளத்தனமாக வந்தது


கல்யாணராமன் சு.
நவ 13, 2025 17:39

குறைந்தது 20,000 ரூபாய் கொடுத்திருப்பார்கள்..... அய்யயோ , தப்ப புரிஞ்சுக்கிட்டீங்க . ... அவங்களெல்லாம் 200 ரூபாய் உபிகள் .. சினிமால வர்ற மாதிரி வக்கீல் கோட்டை போட்டுக்கிட்டு கூட்டிட்டு போயிருப்பாங்க ...


புதிய வீடியோ