உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அமலுக்கு வரும் பவுத்தி பட்டா மாறுதல்: கலெக்டர்களுக்கு நில நிர்வாக ஆணையர் கடிதம்

மீண்டும் அமலுக்கு வரும் பவுத்தி பட்டா மாறுதல்: கலெக்டர்களுக்கு நில நிர்வாக ஆணையர் கடிதம்

சென்னை: 'பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால், உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்' என, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மாவட்ட கலெக்டர்களுக்கு, அவர் அனுப்பிஉள்ள கடிதம்:கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன.தொய்வுஇவற்றை பொது மக்கள், https://eservices.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக பார்க்கலாம். பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன.அவர்களின் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் அல்லது உரிமம் பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க, உரிய ஆவணங்களுடன், இ - சேவை மையங்கள் அல்லது தமிழ் நிலம் 'சிட்டிசன் போர்டல்' வழியாக விண்ணப்பிக்கலாம்.இவ்விண்ணப்பங்கள், ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.முன்னர் ஜமாபந்தி நடக்கும்போது, கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்படும்.வருவாய் கிராமத்தில் பட்டாதாரர் ஒருவர் இறந்திருந்தால், அவர் பெயர் நீக்கப்பட்டு அவரது வாரிசுகளின் பெயர்களை சேர்க்கும் நடைமுறை இருந்தது.இந்த நடைமுறை பவுத்தி பட்டா மாறுதல் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நடைமுறை சிக்கல்களாலும், வேலைப்பளுவாலும், பவுத்தி பட்டா மாறுதல் செயல்முறையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, அதை மீண்டும் செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.இ - சேவை மையம்இதற்காக, நில உரிமையாளர்களின் விபரங்களை, இணையதளத்தில் மேம்படுத்த, இறந்த நில உரிமையாளர்கள், பட்டாதாரர்கள் பெயரை நீக்கம் செய்து, நடப்பு நில உரிமையாளர்கள், பட்டாதாரர் விபரங்களை, சிட்டாவில் சேர்க்க வேண்டியது அவசியம்.எனவே, இறந்த பட்டாதாரர்களின் பெயர்களை நீக்கம் செய்து, தற்போதைய நில உரிமையாளர்களின் பெயரை சேர்க்க விரும்புவோர், உரிய ஆவணங்களுடன், இ - சேவை மையங்கள் வழியாக அல்லது தமிழ் நிலம் சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம். இதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.உரிய ஆவணங்கள் இணைக்காததால், பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.இதை தவிர்க்க, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இ - சேவை மைய பணியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அவர்களுக்கு உரிய தெளிவுரைகள் வழங்க வேண்டும்.பவுத்தி பட்டாவிண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பட்டியலை, இ - சேவை மையம் வெளியே ஒட்டி வைக்க வேண்டும்.பவுத்தி பட்டா மாறுதல் தொடர்பாக, ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காலதாமதமின்றி உரிய ஆணைகள் பிறப்பிக்க, தாசில்தார்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நல்லதை நினைப்பேன்
ஜூன் 11, 2025 07:44

Your connection isnt private Attackers might be trying to steal your information from eservices.tn.gov.in for example, passwords, messages, or credit cards. Learn more about this warning net::ERR_CERT_DATE_INVALID. I get this message while ing this site utsupra


Hussain Basha
மே 15, 2025 21:37

கருத்துகள் விதிமுறை உன்மை - ஆனால் வருவாய்துறையில் நிலம் நிர்வாக ஆனையர் வரை புகார்களை கையாள வைக்கும் கிராம அடிப்படை அலுவலர்/ பணியாளர் சுய லாபம் ஒன்றே குறிக்கோள்- இதனால் பொது சேவைக்காக சம்பளம் வழங்கியும் - பொது மக்கள் கோறும் கோறிக்கை மனுக்களுக்கு அடிப்படை ஆதாரம் முதல் தனிக்கைக்கு உரிய ஆவனம் கொடுத்தும் ஒப்பிட்டு பார்த்தும் சரியாக உள்ளது என பட்டா புரசீட் அலுவலர் கூறியும் VAO- லோகிங் செய்ய மறுப்பு, அளவர் ஆவனங்களை பெற்று தனிக்கைக்கு தரவே இல்லை என பொய்யாக கூறுவதும் வாவ் - மனுக்களுக்கு பொய்யான காரணம் எழுதி நிராகரிப்பது இந்த செயல்களுக்கு ஆதாரத்துடன் வட்டாட்சியர்,RDO,DRO, கலெக்டர் புகாரிட்டாலும் நடவடிக்கை இல்லாமல் மனுவின் தன்மையை கன்னக்கெதிரே மாற்றி TN -ரெவ், செகிரேட்டரி, தலைமை செயலாளர், நிலம் நிருவாக ஆனையர் வரை புகாரிட்டாலும் பட்டாதாரரின் மனுவுக்கு எதிராக வேன்டுமென்றே செயல் படும் வட்டாட்சியர் குழு இறந்தவர்கள் பெயரில் பட்டா மனுக்களுக்கு பதில் தருவதும் சட்டப்படி யான ஆவனத்துக்கு எதிராக செயல் படுவதை புகாரிட்டும் ஆனையர் தெரிவித்துதான் கடிதம் என்றால் அரசு சம்பளத்துடன் இவருக்கு கீழ் பணியாற்றுபவர் எதிர் அலுவலர்களின் செயலுக்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டாலாகாதா


Mayakannan Kannan
மே 15, 2025 15:16

வாய்க்கு அரிசி போடவில்லை என்றால் பிணம் ஹேகா து


N.Chinnachamy
மே 15, 2025 10:21

இணைய தளத்தில் விண்ணப்பித்தாலும் எந்த வேலையும் நடக்காது. விஏஒ, தாசில்தாரை பார்க்க வேண்டும். இல்லையெனில் தகுந்த காரணம் இல்லாமல் விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்வார்கள்.


V. Venkatesan
மே 15, 2025 14:16

இன்னும் நீங்கள் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளி வரவில்லை போல... இப்போது எல்லாம் பத்திர பதிவு நடந்த உடன் தானியங்கி பட்டா மாற்றம் நடைபெறுகிறது.


RSaminathan - Thirumangalam
மே 15, 2025 09:17

வி ஏ ஓ சர்வேயர் இந்த இரண்டு நாதாரிகளுக்கும் அவனுங்க குடும்பத்துக்கும் பணம் கொடுக்காமல் வாய்க்கரிசி போடாமல் ஒரு பட்டாவும் கிடைக்காது. பணம் கொடுத்தால் எந்த சேவையையும் செய்வானுங்க


rama adhavan
மே 15, 2025 08:16

பணமில்லாமல் பட்டா ஓரு கானல் நீர், மாய மான். இப்பணியை வருவாய் துறையிடம் இருந்து எடுத்து தனியார் வசம் விட வேண்டும்.


N Ganapathy Subramanian
மே 15, 2025 08:06

ஆன் லைன் அப்ளிகேஷன் போடுவதற்கே விட மாட்டேங்கிறாங்க. அதுக்கே ரெவின்யு இன்ஸ்பெக்டர் ஆள் அனுப்பி வாய்க்கரிசி வாங்குவாங்க. இதை மிகவும் சரியாக/ மாட்டிக்காம செய்வாங்க. நேரில் தா.. ஆபீஸ் போனா உங்களை கண்டுக்க மாட்டாங்க.


R Vijayaraghavan
மே 15, 2025 06:21

தமிழ் நாட்டில் துட்டு கொடுக்காம டெத் செர்டிபிகேட் கூட கிடைக்காது. பட்டவா கிடைக்கும் வாழ்க திராவிடம்


SANKAR
மே 15, 2025 06:34

please note death certificate process is very easy .once death is registered one can download from govt sites like Corporation FREE OF COST.


Kasimani Baskaran
மே 15, 2025 03:54

ஏதாவது ஒரு விதத்தில் வசூலிக்காமல் விட மாட்டார்கள்.


மீனவ நண்பன்
மே 15, 2025 03:45

பணம் தராமல் பட்டா கிடைக்கிறதா ..மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் ஆன உடனே பெயர் மாற்றம் செய்யப்பட்டு இனைய தளங்கள் மூலம் கிடைக்கிறது ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை