வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கட்டாயம் தேவை....
இம்பீரியல் சினிமா எதிரில் ஜிகர்தண்டாவுக்கு, அண்ணே சீக்கிரம் கொடுங்கண்ணே படம் போட்டுருவாங்கண்ணே என்று அவசரப்படுத்தி அருந்திய சுவை இன்னமும் மறக்கவில்லை.
1977க்கு முன்பிருந்தே தெற்குமாசி வீதி - நவபத்கானா கோர்ட்டு தெரு சந்திப்பில் சவராஷ்டிரா பெண்கள் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. அந்த பள்ளிக்கு அருகில் தெரு முனையில் தான் பாய் ஜிகர்தண்டா கடை வைத்திருந்தார். அந்த ஏரியாவில் வசிக்கும் பெருசுகளிடம் கேட்டால் கரெக்ட் என்பார்கள். அதே காலகட்டத்தில் தெற்குமாசி வீதி - மால் வடம்போக்கித் தெரு சந்திப்பில், அதாவது விளக்குத்தூண் அருகில் பாண்டி என்பவர் மாங்காய், தென்னங்குருத்து விற்பார். அவை எல்லாமே மாலைவேளையில் தான். கால் டீ ஸ்பூன் வறுத்த கடுகை செரட்டையில் போட்டு, ஒரு ஸ்பூனை வைத்து சரசர வென்று பொடித்து, அதில் கொஞ்சம் உப்பு, மிளகாய் பொடி போட்டு ஒரு கலக்கு, அப்புறம் ஒரு கீற்று மாங்காயை அரை சென்டிமீட்டர் க்யூப்களாக வெட்டிப் போட்டு சரக், சரக், சரக் என்று இன்னொரு கலக்கு. சின்ன தினசரி பத்திரிக்கை காகிதத்துண்டில் கொட்டி கொடுப்பார், பாண்டி அண்ணன். 3 பைசா என்று நினைக்கிறேன். கடுகு மணத்துடன் மாங்காயின் சுவை, இன்று நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. பாண்டி அண்ணனும் இதை பெரிய அளவில் பண்ணியிருந்தால் புவிசார் குறியீடு கிடைத்திருக்குமோ? அப்போது எல்லாமே அக்மார்க் ஆர்கானிக் தான். இந்தக்கால ஸவீட்கார்ன் சோளக்கருது, அஜினமொட்டோ கலவை கிடையாது.