உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து அக்.,23க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது கடந்த 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவிக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை, கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து அரசாரணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக அக்.,23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
அக் 06, 2025 17:36

கன்னத்தில கையை வைத்துவிட்டாராய்யா இனி என்ன கப்பலே கவிழ்ந்து விட்டது போலத்தான் எந்த சிறையோ எத்தனை நாட்களோ ஆண்டவனுக்குத்தான் தெரியம்


Vijay
அக் 07, 2025 06:50

single room


SUBRAMANIAN P
அக் 06, 2025 16:36

நல்லா ஊழல் செய்து அனுபவிச்சபிறகு சாகப்போற நேரத்தில சொத்துகுவிப்பு வழக்காம். நல்ல நாடு.. நல்ல சட்டம்.. நல்ல நீதிமான்கள்.. வெளங்கும்


Vasan
அக் 06, 2025 15:40

A sincere minister with clean hands, a old student refusing to pass to next class, as told by Rajinikanth Sir.


sundarsvpr
அக் 06, 2025 13:59

திராவிட கட்சியில் அமைச்சு பணியில் உள்ளவர்கள் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டால் விசாரணை தேவை இல்லை. நீதிபதி விசாரணை செய்யாமல் மனதில் எண்ணிய தண்டனை வழங்கலாம். ரத்த பரிசோதனை மட்டும் போதும் அடுத்து அண்ணாதுரை ராஜகோபாலாச்சாரி குமாரசாமி ராஜா காமராஜ் ஓமந்தூரார் சி சுப்ரமணியம் கக்கன் போன்றோர் திராவிட கட்சிகளில் இல்லை.


Manaimaran
அக் 06, 2025 13:44

விசாரணை வருவதுக்குள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை