உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதந்தோறும் மின் கணக்கீடு; அடுத்த ஆட்சி அதை செய்யும்

மாதந்தோறும் மின் கணக்கீடு; அடுத்த ஆட்சி அதை செய்யும்

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த விஷயத்தையும் செய்யாதது போல, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையையும் கொண்டு வரவில்லை. ஆட்சி முடிய 10 மாத காலம் உள்ளது. அதற்குள் அதை செய்யவில்லை என்றால், அடுத்து ஏற்படுத்தப்படும் ஆட்சி, அதை செய்யும். டாஸ்மாக் ஊழல் குறித்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பின்தான், வழக்கு எப்படி போகும் என சொல்ல முடியும்.கல்விக்காக மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கேட்டு, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் உண்மையான அக்கறை எதுவும் கிடையாது. தேர்தலுக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டுள்ளனர். ரெய்டு நடத்தி, அதனால் பயத்தை ஏற்படுத்தி, யாரோடும் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமோ, நிர்ப்பந்தமோ எதுவும் பா.ஜ.,வுக்கு கிடையாது.நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rengaraj
மே 24, 2025 13:55

இந்த அரசு அமைந்ததில் இருந்து எந்த திட்டத்தையும் ஒரு வெளிப்படைதன்மையோடு நடத்தவில்லை. எதை எடுத்தாலும் அதில் பல்வேறு குற்றம் சொல்லும்வகையில் நடத்துகிறார்கள். முதல்வர் அறிவிப்பிற்கு பிறகு அதற்குண்டான அரசாங்க ஆணை சரியான முறையில் வெளியிடப்படவில்லை. அப்படியே வெளியிட்டாலும் முறையான விளக்கங்கள் இல்லை. ஓட்டுக்காக பெயர் வாங்கும் வகையில் அறிவிப்பு செய்கிறார்கள். அதோடு சரி. மேற்கொண்டு முன்னேற்றம் இல்லை . பல திட்டங்களை சொல்லலாம். திட்டங்கள் அதற்கே உண்டான பயனாளிகளை நூறு சதவீதம் சென்று சேர்வதில்லை. எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி என்று மார்தட்டிக்கொள்ளகிறார்கள். உண்மை நிலவரம் முதல்வரை சென்று சேர்வதில்லை. அவரை சுற்றி உள்ள உயர் அதிகாரிகளே ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் சாமான்யனுக்கு வருவதில் வியப்பில்லை. நமக்கு எதற்கு வம்பு, இன்னும் கொஞ்சகாலம் தானே , தேர்தல் வந்துவிடும், பிறகு பார்க்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் மெத்தனம் நிலவுகிறது.


சிந்திப்பவன்
மே 24, 2025 08:45

என்னத்த அடுத்த ஆட்சி ???. .திமுக & அதிமுக ஆகிய இரண்டு புற்று நோய்களும் அழியாத வரை நம் மாநிலத்தில் ஒரு மாற்றம் கூட கொண்டு வர முடியாது .


Kasimani Baskaran
மே 24, 2025 07:41

கொள்ளை அடித்து பாத்தேக் பிலிப், ரிச்சர்ட் மில்லி வாச்கள் கூட போடலாம் என்பது விதி. ஆனால் மின்சாரவாரியம் மாதம் ஒருமுறை கணக்கெடுக்க வேண்டும் என்பது விதி விலக்கு


Svs Yaadum oore
மே 24, 2025 06:56

தமிழக மின் வாரியம் 2023&23ஆம் ஆண்டில் , சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வெளியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணி என்ன ??....இதை தனியார் களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் ...இதை மத்திய அரசின் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.93 விலைதான் ..அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் என்ன ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??......


Svs Yaadum oore
மே 24, 2025 06:49

தமிழக மின் வாரியம் 2023-24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. ....ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும்??...மின்தேவை மொத்தமும் வெளியிலிருந்து வாங்கினால் பிறகு இங்கு என்ன உற்பத்தி செய்கிறார்கள் ??....2023-24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.... சந்தனக்கட்டை எரித்து மின் உற்பத்தி செய்கிரார்களா ??....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை