உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து

பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கலாம்'' என அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்த நிருபர்கள் கேள்விக்கு காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் பதில் அளித்தார்.பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.ஆனால், தி.மு.க., தலைமை, பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து மட்டும் நீக்கியது; அவர் இன்னமும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார். இந்த விவகாரம் குறித்து காங்., எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: அமைச்சர், குறிப்பாக அவர் பேராசிரியர். அவர் அந்த மாதிரி பேசி இருக்க கூடாது. என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் ஒரு நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ஆனால் அந்த நடவடிக்கை பத்தாது என்பது பல பேருடைய கருத்து. அந்த கருத்து ஒரு நியாயமான கருத்து என்று எனக்கு தெரிகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kbje9twl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்னும் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இந்த மாதிரி பொது வாழ்கையில் இருப்பவர்கள், பொறுப்பு உள்ள பதவியில் இருப்பவர்கள் பொதுமேடைகளில் அத்தகைய கருத்துகளை சொல்ல கூடாது. அப்படி சொல்லி இருக்க கூடாது. என்னை பொறுத்தவரைக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிருபர்: உங்களுக்கு காங்., மாநில தலைவர் பதவி கொடுக்க உள்ளதாக பரபரப்பாக பேசுகிறார்களே?கார்த்தி சிதம்பரம் பதில்: எனக்கு கொடுக்கவே மாட்டார்கள். நான் வந்து ஒரு திசையில் கட்சியை எடுத்து செல்வேன். ஒரு ஸ்டைலில் நடத்தி செல்வேன். என்னை பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, டில்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ தயாராக இல்லை. அதனால் என்னை அந்த பதவியில் நியமிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Vasan
ஏப் 18, 2025 07:12

Karthi, when you were a young boy, your father used unparliamentary word "PARIAH" which refers to a particular sect of people and went on defend his way of using that word by referring to Oxford and Cambridge dictionaries. You may not know this because you were just born then. That issue d lot of ripples at that time when there was no social media except newspapers and TV channels, which do not talk more on these issues. In spite of that it d chaos. So all politicians must carefully use their vocabulary, without hurting the sentiments of any sect of people. This is what Indian people expect and Indian courts endorse. Let us all respect Indian Judiciary tem and move on smoothly.


Ramesh Sargam
ஏப் 17, 2025 20:57

சனாதானத்தை பற்றி தரக்குறைவாக பேசிய அவருடைய மகனுக்கே முதல்வர் ஒரு தண்டனையும் கொடுக்கவில்லை.


தாமரை மலர்கிறது
ஏப் 17, 2025 18:58

பொன்முடிக்கு தூக்கு தண்டனை கொடுப்பது சரியாக இருக்கும்.


Mohan
ஏப் 17, 2025 18:10

பார்த்து...அவரு உங்க எசமான்


VIDYASAGAR SHENOY
ஏப் 17, 2025 16:34

காங்கிரஸ் இப்படி பேசினால் அப்பா உங்களுக்கான சீட்டை குறைப்பார், அவர் சர்வாதிகாரி யாக நீங்கள் பார்த்ததில்லை அவ்வளவு தான் பார்த்து பேசுங்கள்.


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 16:18

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று திமுக தடை விதிக்கும்.


அப்பாவி
ஏப் 17, 2025 16:16

ஆட்டயப்போட்டு வெச்சிருக்கிற பணத்த பங்கு போட்டுக்க வாணாமா? அதான் குறைந்த பட்ச தண்டனை.


Narayanan
ஏப் 17, 2025 15:52

கார்த்திக் சிதம்பரம் எப்போதும் நியாமான கருத்தை உறுதியாக சொல்கிறார். தந்தையைப்போல் இல்லாமல் .வாழ்த்துக்கள்


Muralidharan S
ஏப் 17, 2025 15:45

கடவுள், இந்த திராவிஷா கும்பல்களுக்கே மொத்தமாக ஒரு கடும் நடவடிக்கை எடுப்பார்.. வெகு சீக்கிரத்தில்.... அதுவரை அரசியல் வியாதிகள் ஆடட்டும்..


selva kumar
ஏப் 17, 2025 15:36

சரியாக சொல்லியுள்ளார் தி மு க நிலைமையை சரி செய்து இந்துக்களின் கோபங்களை தவிர்க்க செய்த வேலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை