உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடராஜர் கோயில் நிலம் 2000 ஏக்கர் விற்பனை

நடராஜர் கோயில் நிலம் 2000 ஏக்கர் விற்பனை

சிதம்பரம்:'சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை விற்று விட்டதாக தங்கள் மீதான அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' என, தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோயில் கமிட்டி செயலர் வெங்கடேச தீட்சிதர் மற்றும் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யவும், சட்ட விரோத கட்டுமான பணிகளை நிறுத்தவும், அறநிலையத் துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது, சென்னை ஐகோர்ட் சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது.வழக்கில், 2014 முதல் 2024 வரை, கோயிலின் வரவு செலவு கணக்கு விபரங்கள் பொது தீட்சிதர்களால் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கோயிலின் அறக்கட்டளைகள் வாயிலாக தினசரி பூஜை, மாத பூஜை விழாக்கள் நடைபெறுவது, கோயில் பராமரிப்பிற்கு தீட்சிதர்கள் பங்களிப்பு, வரவு செலவு கணக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோயில் நிலங்கள் அரசாணை எண் 835/1976ன் படி, தனி தாசில்தார் பராமரிப்பில் உள்ளன. 3,000 ஏக்கருக்கு மேல் உள்ள கோயில் நிலங்களிலிருந்து வரும் வருவாயில் கோயிலுக்கான மின்கட்டணம் மின்துறைக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், வருவாய் குறைவாக இருப்பதால் மீத தொகையை தனியார் வங்கி நன்கொடை மற்றும் பொது தீட்சிதர்கள் தங்களுக்குள் வசூல் செய்து ஈடுகட்டி வருகிறோம்.ஏற்கனவே, 2024 செப்., 5ம் தேதி கோர்ட் விசாரணையில், கோயில் வருமானம் தற்போது 2 லட்சம் ரூபாய் என, வரவு செலவு கணக்கு விபரம் தாக்கல் செய்யப்பட்டது. கோயில் நிலங்களிலிருந்து மிக குறைவாக குத்தகை வசூல் செய்யப்படுவதாக ஆதாரப்பூர்வமாக பொது தீட்சிதர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எவ்வித ஆதாரமும் இல்லாமல், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டனர் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளாக பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமில்லாமல் அரசு தரப்பு உதவியுடன் கோயில் எதிர்ப்பாளர்கள் சிலரது ஏற்பாட்டில், பொய் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.தற்போது உச்சக்கட்டமாக, கோயில் இடத்தை விற்று விட்டதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், தீட்சிதர்களுக்கு ஈடுசெய்ய முடியாத களங்கம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரமின்றி பொது தீட்சிதர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு, மறுப்பு தெரிவிக்கவில்லை எனில், பொது தீட்சிதர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ponssasi
செப் 25, 2024 19:46

இருபுறமும் உண்மை இல்லை, ஆனால் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் என்பதை அந்த நடராசர் பெருமான் கூட நம்பமாட்டார். இதில் தீஷிதர்மீது எனக்கு நம்பிக்கை இல்லை, கோவில் திருப்பணிக்கு பொது தீஷிதர்கள் எப்படி பணம் கொடுக்கிறார்கள், அந்த பணம் எங்கிருந்து வருகிறது. பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது அவர்கள் கடமை


Dharmavaan
செப் 22, 2024 15:41

திருட்டு திராவிட கூட்டத்திற்கு கொள்ளை அடிக்க முடியவில்லை கை அரிக்கிறது பொய் புகாரை உண்டாக்கி திருட்டுத்தனம்


புதிய வீடியோ