உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கூட்டணியில் பங்கு கிடையாது :பழனிசாமி விளக்கம்

அ.தி.மு.க., கூட்டணியில் பங்கு கிடையாது :பழனிசாமி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை :'அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அரசு என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார்,” என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:அமைச்சர் நேரு, அவரது மகன் வீடுகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமைச்சர் பொன்முடி, பதவியேற்கும் போது அளித்த உறுதிமொழியை மீறி, ஹிந்து மதம் மற்றும் பெண்கள் குறித்து அவதுாறாகப் பேசி உள்ளார்.

வெளிநடப்பு

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசமுள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இக்காரணங்களுக்காக, முதல்வர் தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தோம். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றோம்; சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனால், வெளிநடப்பு செய்தோம்.பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஹிந்து மதத்தை அவதுாறாகவும் ஒரு அமைச்சர் பேசி உள்ளார். இது, முக்கிய பிரச்னையாக அரசுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. அமைச்சர் பொன்முடி பேராசிரியராக இருந்தவர். வேண்டுமென்றே திட்டமிட்டு, மதத்தை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பது தான், அ.தி.மு.க.,வின் கொள்கை.

பழி சுமத்த திட்டம்

மத்தியில், மாநிலத்தில், தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது, மாநில சுயாட்சி சட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இப்பிரச்னை இருந்திருக்காது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது, வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக, மாநில சுயாட்சி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்தபோது, தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்; அதை தவற விட்டு விட்டனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். தி.மு.க., அரசு மீது வெறுப்போடு உள்ள மக்கள், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர். அதை திசை திருப்ப, மாநில சுயாட்சி என்ற நாடகத்தை முதல்வர் அரங்கேற்றி உள்ளார்.அ.தி.மு.க., தொண்டர்களால் தான், தற்போது அமைச்சராக உள்ள ரகுபதி அடையாளம் காட்டப்பட்டார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, மாநில சுயாட்சி குறித்து தெரியவில்லை. இப்போது, எங்களை குறை கூறுகிறார். அவர் சரியான பச்சோந்தி. 'இண்டி' கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், மாநில சுயாட்சி இடம் பெறவில்லை. கடந்த லோக்சபா தேர்தலிலும், மாநில சுயாட்சி குறித்து முதல்வர் பேசவில்லை.

பல கட்சிகள் வரும்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியா, இல்லையா என்பது தேர்தலில் தெரியவரும். தி.மு.க.,வை வீழ்த்த விரும்பும் கட்சிகளை ஒருங்கிணைத்து, தேர்தலில் போட்டியிட முயற்சி செய்கிறோம். முதற்கட்டமாக பா.ஜ., இணைந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் வரும். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். தி.மு.க.,வுக்கு ஏன் எரிச்சல் என்றால், அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கூட்டணி அமைக்கிறோம். 'அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்' என, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார். விஞ்ஞான மூளையை பயன்படுத்தி, நீங்களாகவே ஏதாவது கூற வேண்டாம். கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 91 )

K V Ramadoss
ஏப் 24, 2025 22:08

பழனிசாமி சொல்வது ஒன்றும் புரியவில்லையே


M Ramachandran
ஏப் 24, 2025 19:52

ஆம் திருட்டில் பங்கு கிடையாது முழுவதும் பழனிக்கே. அரோராஹரா


Venkateswaran Rajaram
ஏப் 22, 2025 09:58

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல மக்கள் நல திட்டங்கள் போட்டு அதிலிருந்து கொள்ளை அடித்த செல்வங்களை நாங்களே எங்களுக்குள் பங்கு போட்டு பிரித்துக்கொள்வோம் அதில் சிறிது எங்கள் வாழ்நாள் கூட்டு திருட்டு தோழன் ஆகிய திருட்டு திராவிட மாடலுக்கும் வாயை அடைக்க கொடுத்துவிடுவோம். தமிழகத்தை கொள்ளை அடிக்க திருட்டு திராவிடர்களாகிய எங்களுக்கே தார்மீக உரிமை உள்ளது. இதில் ஆரியர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது


Ray
ஏப் 18, 2025 09:26

பங்கு கிடையாது. கப்பம் காரண்ட்டி.


Minimole P C
ஏப் 18, 2025 07:51

A big thief like EPS has no choice other than accepting dictats the of Amitshaw. For the last 12 years BJP is in power at central and Nitin alone spent 55 lakhs of crores for transport and road laiding . These DMK and AIADMK alone together looted more than 20 lakhs crores of public money of TN people. Like Amitshaw, they can catch hold of BJP for their loot if any, even by employing foreign detectives agencies for the big moneybags they have. But they cannot. Because there is no corruption at bigs of BJP.


Thetamilan
ஏப் 17, 2025 23:55

இங்கு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்


மதிவதனன்
ஏப் 17, 2025 23:43

உண்மையில் எடப்பாடி தில் உள்ள ஆள் தான் , அண்ணாமலை க்கு TIN கட்டியவர் , வீரன் எடப்பாடி


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 17, 2025 19:29

முதல்ல டெபாசிட் வாங்கு பாக்கலாம்


Bala
ஏப் 17, 2025 18:37

கூடா நட்பு கேடாய் முடியும். இவை காங்கிரஸ்ஸை பார்த்து திமுக சொன்னது. வைகோவை திமுகவிலிருந்து சதி செய்து வெளியேற்றியது. சொன்னது வைகோ. கலைஞரை அவமான படுத்த வேண்டும் என்றால் அவர் மகன் ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என்று சொன்ன கமலுக்கு இப்பொழுது ராஜ்ய சபை MP வழங்குவதாக வாக்களித்து திமுக கூட்டணி. திமுக கம்யூனிஸ்டுகளைம் விசிக வையும் பேசாத பேச்சுக்கள் இல்லை ஒருகாலத்தில். எல்லாமே மறக்கப்பட்டு இன்று கூட்டணியில் இருக்கும்போது. அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் தவறில்லை. முரண்பாடுகள் ஏதாவது இருந்தாலும் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் வரும் மாதங்களில் மேலும் பல கட்சிகள் இணையும்.


Kulandai kannan
ஏப் 17, 2025 18:27

பல்டிசாமியிடம் பாஜக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


மூர்க்கன்
ஏப் 17, 2025 23:13

கெட்ட பய சார்.. இந்த ப சாமி .??


சமீபத்திய செய்தி