உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனை பிரிவுகளுக்கு ஓ.எஸ்.ஆர்., விதிகளில் தளர்வு அறிவிப்பு

மனை பிரிவுகளுக்கு ஓ.எஸ்.ஆர்., விதிகளில் தளர்வு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரன்முறை செய்யப்படும் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம் விடுவது தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது அதில், 10 சதவீத நிலம் திறந்த வெளி ஒதுக்கீடாக விடுவது கட்டாயம். ஆனால், அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளில் இந்த விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு இருக்காது. இத்தகைய மனைப்பிரிவுகள் தற்போது வரன்முறை செய்யும் போது திறந்தவெளி ஒதுக்கீடாக, 10 சதவீத நிலத்தை ஒதுக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே பெரும்பாலான மனைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திறந்தவெளி ஒதுக்கீடாக விடப்படும் நிலத்தின் அளவு, அமைப்பு பொது நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டு இருப்பதாவது: வரன்முறை திட்டத்துக்கு வரும், சிறிய அளவிலான மனைப்பிரிவுகளில் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம் தொடர்பாக சில நடைமுறை சிக்கல்கள் தெரியவந்தன. இதில், 50,819 சதுர அடி வரையிலான விற்பனையாகாத மனைகள் உள்ள திட்டங்களில், திறந்தவெளி ஒதுக்கீடு நிலம் விட முடியாத இடங்களில், அதற்கு ஈடாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும். இதன்படி, 10 சதவீத நிலத்துக்கு, வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலான தொகையை செலுத்தினால் போதும். இதற்கு மேற்பட்ட பரப்பளவுள்ள திட்டங்களில், 10 சதவீத நிலத்தை ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை