உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் விபரம்: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தினை ரத்து செய்திட வேண்டும்.இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழக அரசின் கவலைகளை நீர்வளத் துறை அமைச்சர் ஏற்கெனவே மத்திய அரசுக்குத் தெரிவித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், தனது கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.இதனிடையே, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது.குறிப்பிட்ட அந்த பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம்,, ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அவற்றில், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம். இது குடைவரைக் கோவில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும்.மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தர விட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. சுரங்க அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Oru Indiyan
நவ 29, 2024 21:38

எல்லாம் தெரியும் தமிழ்நாடு அரசுக்கு. பொய் சொல்லும் முதல்வர்.. The Ministry of Mines has successfully conducted auction of 24 blocks of critical and strategic minerals in four tranche still date. The Nayakkarpatti Tungsten Block covering an area of over 20.16 sq. km. was proposed for the auction in the month of February, 2024. Inputs were taken from the Government of Tamil Nadu before the block was put up for auction. The State Government informed that land schedule details were unavailable. It was also informed that a quarry lease for granite over 47.37 hectares in Aritapatti Village, Melur Taluk, had been granted to TAMIN, a State PSU, on 19th September 2008 for a period of 30 years. Subsequently, TAMIN submitted a surrender proposal for the lease. Additionally, the State Government sent a notification from the Environment, Climate Change, and Forest Department notifying specific survey 379/1, 379/2 of Aritapatti village, and survey no. 137 in Meenakshipuram villages of Madurai District as a Biodiversity Heritage Site. As per the information available, out of the total area of 20.16 sq. km., only 1.93 sq. km within Aritapatti and Meenakshipuram villages has been notified as a Biodiversity Heritage Site. The block was successfully auctioned with Hindustan Zinc Ltd. being d as the preferred bidder on 07.11.2024. Since February, 2024 when the block was first put to auction till the declaration of result of auction on 07.11.2024, there was no communication from any quarter including State Government regarding any opposition to the auction. Nor did the State Government request the Central Government to the block from auction.


RAMAKRISHNAN NATESAN
நவ 29, 2024 17:29

நான் முதல்வராக இருந்தால் தகுந்த தரவுகளுடன் ஐ ஐ டி யில் இருந்து நிபுணரை வரவழைத்து ஐ ஏஎஸ் அதிகாரிகளுடன் பேச வைத்து இறுதி முடிவு எடுப்பேன் .... பாதகங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைப் பெற்று சாதக அம்சங்கள் அதிகமானால் மக்களுக்கு எடுத்துரைக்க ஆவன செய்வேன் .... குறைந்த பட்சம் சாதக, பாதக அம்சங்களை அந்த நிறுவனத்திடமோ, அமைச்சகத்திடமோ பெற்று விவாதம் நடத்துவேன் .... பாதுகாப்புத்துறையில் இந்த உலோகத்தின் பயன்பாடு அதிகம் .... ஆகவே சீன முதலாளிகளுக்கு அஞ்சுவதை விடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் .... இஸ்ரோவுக்கான விளம்பரத்தில் சீனக்கொடியைப் போட்டு அழைப்பிதழ் அச்சடித்தவர்கள் இவர்கள் .... தேசவிரோத கட்சியின் புலம்பலாகத்தான் பார்க்கப்பட வேண்டும் ....


ghee
நவ 29, 2024 16:46

வைகுண்டம்.... பிளீஸ் ஓடத்திங்க ...2023 தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி கேடத்தாம்.....பதில் சொல்லுங்க


karupanasamy
நவ 29, 2024 16:08

மக்கள் சட்டமொழுங்கு சந்திசிரிச்சுக்கிட்டு இருக்குறத பாத்து ஆத்திரத்துல பொத்திகிட்டு ..... னு சொல்லுறது இந்த எழவெடுத்த அரசுக்கு புரியலையே.


Kasimani Baskaran
நவ 29, 2024 16:07

எல்லாவற்றயும் ஏற்கனவே அள்ளிவிடத்தை கண்டுபிடித்து உலகுக்கு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கைதான் காரணம்.


jayvee
நவ 29, 2024 16:00

மத்தியஅரசு நான்குபுறமும் இழுக்கப்படும் குதிரை வண்டியாக மாறிவிட்டது .. பிரதமர் ஒருபுறம் தமிழ்நாடு, தமிழ் என்று சொல்லக்கொண்டிருக்க இது போல வேலைகள் தேவையா ? குறைந்தபட்சம் மாநில அரசுடன் கலந்து திட்டத்திற்கு அவர்களின் ஒப்புதலையும் பெற்றபிறகே இதை செயலாக்கப்படுத்தவேண்டும்.. அதேசமயத்தில் மாநில அரசும் இதை எதிர்ப்பதற்காக மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லாமல் அதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.. இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது.. அவியலும் செய்யக்கூடாது


Oru Indiyan
நவ 29, 2024 21:52

தயவுசெய்து பழைய செய்திகளை படியுங்கள். The Ministry of Mines has successfully conducted auction of 24 blocks of critical and strategic minerals in four tranche still date. The Nayakkarpatti Tungsten Block covering an area of over 20.16 sq. km. was proposed for the auction in the month of February, 2024. Inputs were taken from the Government of Tamil Nadu before the block was put up for auction. The State Government informed that land schedule details were unavailable. It was also informed that a quarry lease for granite over 47.37 hectares in Aritapatti Village, Melur Taluk, had been granted to TAMIN, a State PSU, on 19th September 2008 for a period of 30 years. Subsequently, TAMIN submitted a surrender proposal for the lease. Additionally, the State Government sent a notification from the Environment, Climate Change, and Forest Department notifying specific survey 379/1, 379/2 of Aritapatti village, and survey no. 137 in Meenakshipuram villages of Madurai District as a Biodiversity Heritage Site. As per the information available, out of the total area of 20.16 sq. km., only 1.93 sq. km within Aritapatti and Meenakshipuram villages has been notified as a Biodiversity Heritage Site. The block was successfully auctioned with Hindustan Zinc Ltd. being d as the preferred bidder on 07.11.2024. Since February, 2024 when the block was first put to auction till the declaration of result of auction on 07.11.2024, there was no communication from any quarter including State Government regarding any opposition to the auction. Nor did the State Government request the Central Government to the block from auction.


Oru Indiyan
நவ 29, 2024 15:46

மறதி முதல்வர்.. நீங்கள்2023 இல் மத்திய அரசிடம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டீர்கள். மக்களே, பழைய பத்திரிகைகளை பாருங்கள். 18 அக்டோபர் 2023 பத்திரிகையை பாருங்கள். பொய் பொய் ஆகாச பொய்.


Oru Indiyan
நவ 29, 2024 15:38

2023 இல் தமிழ்நாடு அரசு தான் மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. மறந்து விட்டதா முதல்வரே s://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Oct/18/tn-seeks-centres-approvalto-mine-two-critical-minerals-2624924.html


hari
நவ 29, 2024 16:44

வைகுண்டம். பிளீஸ் பிளீஸ் ஓடதிங்க.....இதுக்கு பதில் சொல்லுங்க


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 15:05

hari, kumzi, ரத்தினம் : CVC, CAG, CBI எல்லாம் பாஜக அரசிடம் தானே இருக்கிறது. யாராவது கட்டிங் கேட்டால் கைது பண்ண வேண்டியது தானே? டங்ஸ்டன் சுரங்கம் வேணுமா வேணாமா? சுரங்கம் கெடுதல் என்றால், பாஜக, சுரங்கத்தை தமிழ் நாட்டில் தான் நிர்மானம் செய்து வைக்கும். "


Barakat Ali
நவ 29, 2024 15:00

டங்ஸ்டன் என்பதை துக்ளக்கார் எப்படி உச்சரித்தார் ? யாராச்சும் கவனிச்சீங்களாப்பா .....


Anand
நவ 29, 2024 15:11

தங்கு சுடன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை