திருச்சியில் கொள்முதல் செய்தும் சாலையில் தேங்கி கிடக்கும் நெல்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுடன், விவசாயிகள் சாலையில் காத்திருக்கின்றனர். திருச்சி மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, சாக்குகளில் மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவற்றை குடோன்களுக்கும், அரவை ஆலைகளுக்கும் கொண்டு செல்ல லாரிகள் வராததால், நெல் மூட்டைகள் சாலையிலேயே தேங்கி கிடக்கின்றன. கடந்த, மூன்று தினங்களாக, மழை குறைந்து, வெயில் நிலவுவதால், வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்துள்ளதால், அறுவடை செய்த நெல்லையும், கொள்முதல் நிலையங்களுக்கு துாக்கி வந்துள்ளனர்.