உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது; உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்து விட்டது; உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்ததை மீட்டெடுக்க, அசல் பிம்பத்தை மீண்டும் பெற அதன் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது.திருநெல்வேலியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் 2007 முதல் 2009 வரை தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச்சதி செய்து ரூ.2 கோடி கடன் வழங்கியதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. இவ்வழக்கில் பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரத்திற்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் அம்மாமுத்து, செண்பகமூர்த்தி, சிவசுப்பிரமணியம், ஆழ்வார் சிவ சுப்பிரமணியம், ராமலட்சுமி, சண்முகவேலுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம் 2019 ல் உத்தரவிட்டது. ஐந்து பேரை விடுதலை செய்தது.தண்டனையை எதிர்த்து பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 8 பேர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ., தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மனுதாரர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சி.பி.ஐ., இந்நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பு. அதன் மீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். கடும் பிரச்னை எழும்போதெல்லாம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேர்மையானவர்கள் என நுாறு சதவீதம் மக்கள் நம்புகின்றனர். சி.பி.ஐ., விசாரணை கோரி மக்கள் உரத்த குரல் எழுப்புகின்றனர். பாரபட்சமின்றி தங்கள் கடமையை சி.பி.ஐ., அதிகாரிகள் செய்வார்கள் என நம்புகின்றனர்.தற்போது சி.பி.ஐ.,யின் பணி கலாசாரம், அவர்களின் தலைகீழ் சரிசமமற்ற விசாரணைக்காக அனைவராலும் விமர்சிக்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேண்டுமென்றே பிரதான குற்றவாளிகளை தவிர்த்துவிட்டு, சிலர் மீது மட்டுமே வழக்கு பதிவு மற்றும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். பல வழக்குகளில் வேறுபட்ட அளவுகோல்களை பின்பற்றுகின்றனர்.பெரும்பாலான வழக்குகளில், வலுவான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், உயர்மட்ட அதிகாரிகளை வழக்கிலிருந்து நீக்கிவிட்டு கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிகளாக சி.பி.ஐ., முடிவு செய்கிறது. பல வழக்குகளில் கையெழுத்து நிபுணர் மற்றும் பிற அறிவியல் நிபுணர்களின் கருத்தைக்கூட சி.பி.ஐ., பெறவில்லை.பல வழக்குகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஒரு வழக்கில், சி.பி.ஐ., அதிகாரி லஞ்சம் கேட்டதை நிரூபிக்க ஒருவர் மின்னணு சாதன ஆதாரங்களை சமர்ப்பித்தார். அந்த அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கையை துவக்கியது. இது வெறும் ஒரு துளி மட்டுமே.இது சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது.சிறப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் நேர்மையானவர்கள், பாரபட்சமற்றவர்கள், அவர்களின் நடத்தை தாய்ப்பாலை போல துாய்மையாக இருக்க வேண்டும் என நீதிமன்றங்களை விட மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.சி.பி.ஐ.,அதிகாரிகள் தங்களுக்கு உயர்ந்த அதிகாரங்கள் இருப்பதாகவும், அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும் கருதுகின்றனர். சி.பி.ஐ., மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அசல் பிம்பத்தை மீண்டும் பெறுவதற்காக, தங்கள் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய அதன் இயக்குனருக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை இந்நீதிமன்றம் வழங்குகிறது.எப்.ஐ.ஆர்., மற்றும் இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறுதல், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சேகரிக்கப்பட்டுள்ள, விடுபட்டுள்ள ஆவணங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி விசாரணை அதிகாரிக்கு அவ்வப்போது அறிவுறுத்த, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்க, முறையாக வழக்குப்பதிவு செய்வதை உறுதிப்படுத்த, தனி சட்ட நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். விசாரணை அதிகாரி தொழில்நுட்ப ரீதியாக நிபுணத்துவம் பெற இயக்குனர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

venugopal s
ஏப் 30, 2025 15:10

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி பி ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் பாஜகவின் அடியாட்களாகவே மாறிவிட்டன என்ற உண்மையை உரக்கச் சொன்ன உயர் நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்!


Minimole P C
மே 01, 2025 07:50

Sir please talk about TN police. We need not talk about their dependence. They are like licensed thugs robbers etc. Some 20 years back one of the Chief secreatary of TN govt. told that the liver of TN police is in rotton stage because of political cancer infected it.


Anantharaman
ஏப் 30, 2025 12:26

ஆமாம், நீதி மன்றங்கள் மீதும் நம்பிக்கை போய் விட்டது ஏன் தெரியாதோ, இல்லை மழுப்பலோ?


Varadarajan Nagarajan
ஏப் 30, 2025 11:37

இந்தக்காலத்தில் யாருக்கு யார்மேல் நம்பிக்கை உள்ளது? கணவன் ஊரிலில்லாதபோது மனைவி முன்னாள் காதலனுடன் தொடர்பு. தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்யுமளவிற்கு மனைவிக்கு துணிச்சல். எனவே கணவனுக்கு கட்டிய மனைவி மீது நம்பிக்கயில்லை & பயம். திருமணமானபிறகு முன்னாள் காதலியுடன் அல்லது பணியிலிருக்கும் சக பெண் ஊழியருடன் கள்ளத்தொடர்பு. குழந்தையும் உண்டு. எனவே மனைவிக்கு கணவன்மேல் நம்பிக்கையில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகாரளித்தால் அவர்கள் அதை விசாரிக்காமல் புகாரளித்தவரின் விவரங்களை குற்றம் செய்தவரிடமே அளிப்பதால் காவல்துறையிடம் புகாரளிக்கவே பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை & பயம். சாமானியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தீர்ப்பு கிடைக்க நீதி கிடைக்க என்று சொல்லமுயவில்லை குறைந்தது 10-20 ஆண்டுகள், பிறகு மேல்முறையீடு என நீதிகிடைக்க கால தாமதம். ஆனால் அதே நீதிமன்றங்கள் அரசியல்வியாதிகளின் மேலுள்ள சில & பல வழக்குகளில் தடை வாங்க அவரசர வழக்காக விசாரணை நடத்தி உடனே தடை. பல அரசியல்வியாதிகள் மற்றும் அமைச்சர்களின்மீதுள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளித்தாலும் தண்டனை நிறுத்திவைத்து மற்றும் அவர்கள் பதவியில் தொடர எந்த தடையுமில்லை போன்ற விசித்திரமான தீர்ப்புகளால் நீதிமன்றங்களின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை.


Minimole P C
மே 01, 2025 07:43

well said.


ram
ஏப் 30, 2025 11:24

இப்போது நீதிமன்றங்கள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சிதைந்து விட்டது, பணம் இருந்தால் போதும் சட்டத்தை விலை கொடுத்து வாங்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.


Keshavan.J
ஏப் 30, 2025 10:52

நேற்று நீதிமன்றம் தன்னுடைய தாயை கொன்ற குற்றவாளியை போதிய சாட்சி இல்லை என்று விடுவித்தது. அவனுடைய அப்பா பிறழ் சாட்சியாக மாறிவிட்டான். இந்த குற்றவாளி 8 வயது பெண் குழந்தயை கட்பழித்து எரித்தவன். அந்த கேசில் கூட விட்டாலும் விடலாம். கர்மம் புடிச்ச நீதி.


Ramalingam Shanmugam
ஏப் 30, 2025 10:35

எங்களுக்குத்தான் மக்கள் இந்த ஊழல் நிதிபதிகளின்மீதான நிதிமன்றங்களின்மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. ஒரு நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கணக்கில் வராமல் எரிக்கப்பட்டிருக்கிறது, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?


Sundar Pas
ஏப் 30, 2025 09:47

எங்களுக்குத்தான் மக்கள் இந்த ஊழல் நிதிபதிகளின்மீதான நிதிமன்றங்களின்மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. ஒரு நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கணக்கில் வராமல் எரிக்கப்பட்டிருக்கிறது, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஒரு தேர்வு ஆணையம்தான் நீட் போல தேர்வு வைத்து நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் என மத்திய அரசு ஏற்பாடு செய்யும்போது, இல்லை நாங்கள் நிதிபதிகளுக்குள் கூடிப்பேசி லஞ்சம் வாங்கிக்கொண்டு யார் அதிகம் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவரை நாங்களே தேர்வு செய்வோம் என கூரும் நீதிமன்றங்கள் தான நாட்டின் முதன்மையான குற்றவாளிகளின் கூடாரம்.


raja
ஏப் 30, 2025 08:58

மக்களுக்கு நீதிமன்ற நீதிபதிகள் மேலையும் கூட நம்பிக்கை சிதைந்து விட்டது... குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட தீர்ப்பை நிறுத்தி வைத்து மந்திரி பதவி ஏற்க சொல்லுகிறார்கள். ஒரு நீதிபதி வீட்டில் கோடி கணக்கில் பணம் அவரை இடமாற்றம் மட்டுமே செய்கிறீர்கள். வெளியில் இருக்கும் போது ஊழல்வாதிகளுக்கு வராத நெஞ்சு வலி கைது செய்து சிறையில் போடும்போது வருகிறது அது நாடகம் என்று தெரிந்தும் கூட அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு கொடுக்கிறார்கள். ஒரு சாமானியனுக்கு இரவில் நடக்காத நீதிமன்றம் ஒரு செத்த பிணத்தை புதைப்பதற்கு இடம் வேண்டிய வழக்கில் நள்ளிரவு வரை நடக்கிறது. கவர்னர் முதல் குடிமகனாம் ஜனாதிபதிக்கு மசோதாக்கள் மேல் நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யும் நீதிபதிகள் தங்க கீழ் வரும் மற்ற சாமானியர்கள் வழக்கை வருட கணக்காய் இழுக்கிறார்கள்...இதை எல்லாம் மக்கள் இங்கே போய் சொல்வது என்று நம்பிக்கை சிதைந்து போய் உள்ளார்கள்...


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:25

இப்போது நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு வழக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் எப்படி நம்பிக்கை வரும். இதில் இவர்கள் சிபிஐக்கு அறிவுரை கூறுகிறார்கள். இந்தியா சட்டங்களை திருத்த வேண்டும். ஆளுநருக்கு நேரம் குறிக்கும் நீதிமன்றங்களுக்கு நேரம் குறிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கும் ஒரு வருடத்திற்கு மேல் ஆக கூடாது. இதில் இவர்களுக்கு கோடை விடுமுறை வேறு. இதையெல்லாம் திருத்த வேண்டும்.


Barakat Ali
ஏப் 30, 2025 08:17

உங்களையும் நாங்க துளிக்கூட நம்பலை கனம் கோர்ட்டார் சாஹேப் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை