| ADDED : ஜூலை 08, 2026 06:19 AM
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரத்தில் த.வெ.க.,வினர் கவனம் செலுத்துகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்காமல், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை மட்டும் தேடிப்போய் முதல்வர் விஜய் சந்தித்தது, 'ஆடு பகை, குட்டி உறவு' என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரை ராஜினாமா செய்ய வைத்து, அபத்தமான அரசியல் ஆட்டத்தை விஜய் ஆடிக் கொண்டு இருக்கிறார். இன்னும் 12 பேர் வரை ஆட்டத்தை தொடர்வார்கள் என, செய்திகள் வெளி வருகின்றன. அ.தி.மு.க.,வை சீண்டிக்கொண்டே இருந்தால், காலம் இப்படியே போய்விடாது. காலம் மாறும்போது அரசியலில் கடும் பின்னடைவை விஜய் சந்திப்பார். - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,