வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இரண்டு மாம்பழங்களும் தேவையுள்ள ஆணிகள் தேவையில்லாத ஆணிகள் என தன் கீழ் மட்ட தலைவர்களை பிரிக்கிறார்கள். பெரிய மாம்பழத்துக்கு வயசாயிட்டதால சின்ன மாம்பழத்தை நிலைநிறுத்த சின்ன மாம்பழத்தின் உண்மையான விசுவாசிகள் யார் என தெரிஞ்சுக்க இந்த ஆட்டம். உண்மையில்லாத ஆசாமிகளை பெரிய மாம்பழம் தன் பக்கம் இழுத்து கடைசியில தன பக்கம் வந்த அந்த தேவையில்லாத ஆணிகளை எல்லாம் கச்சியை விட்டு வெளியே தூக்கி போடப்போறார்
எப்படி யெல்லாம் பாடு பட்டு கட்சி ஆரம்பித்த ராமதாஸ், பாடு பட்டு கட்சியை வளர்த்த மகனுடன் கருத்து வேறுபாடு கொண்டு இப்படி வயதான காலத்தில் கட்சியை அழிக்கிறார். வன்னியர் குலத்திற்கு வந்த சோதனை. சந்தி சிரிக்க வைத்து விட்டார். நாறி வீணாகப் போகு முன் உணர்ந்தால் நல்லது.
நாறி வீணாகப் போகும் முன் உணர்ந்தால் நல்லது. நாறிப்போச்சே. மேலும் நாத்தமெடுக்க இன்னுமென்னயிருக்கு..??
இசுரேல் ஈரான் போர் முடிவுக்கு வந்தால் கூட இவங்க அக்கப்போர் முடிவுக்கு வராது என்று தெரிகிறது.
மொகலாய மன்னர் பரம்பரையில் விடுபட்ட நபரை போலவே தெரிகின்றார் ராமதாஸ். வயதான காலத்தில் இப்படி ஒரு குணம் இருப்பது அருவருப்பாக உள்ளது. மகன் மீதான பாசமே இல்லாமல் அவரது சொல்லும் செயலும் இறுதிக்காலத்தில் அவருக்கு இழுக்கை தான் தேடித்தரும். கருணாநிதியை பார்த்தாவது கற்றுக்கொண்டிருக்கலாம் குடும்பம் என்றால் எப்படி அடஜஸ்ட் செய்துகொள்வது என்பதை. ஒன்றை தெளிவாக நாட்டுக்கு செய்தியாக சொல்கின்றார்...குடும்ப காட்சிகளின் யோக்கியதை இவ்வளவுதான் இப்படித்தான் இருக்கும் என்பதை. சாதிக்கட்சிகளை தடை செய்வதுதான் ஆக சிறந்த முடிவாக இருக்கும். ராமதாஸ் போன்றோர் கைகளில் கட்சியே இருத்தல் கூடாது.
இச்சமயத்தில் தூள் படத்தில் பரவை முனியம்மா பேசும் காமெடி டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது... இந்த கருமத்தைத் தான் ராத்திரி பூரா உக்காந்து ஒட்டிக்கிட்டு இருந்தியா என்பது போல் இருக்கும் இந்த பாமக கட்சி மாதிரி அனைத்து ஓட்டை உடைசல் கட்சிகளை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு மெகா கூட்டணி அமைத்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தமிழக மக்களிடம் சீன் போட ரெடியாக காத்துக்கொண்டுள்ளனர் அதிமுகவும் பிஜேபியும்... அவர்களின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகும் நாள் 2026 தேர்தல் முடிவு வரும் நாள்...
மூன்றாம் நபர் ஒருவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரி விண்ணப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் இருவரும் வழிக்கு வருவார்கள்.
அருள் வசம் ராமதாஸ் வகையறாக்களின் ஏற்காடு சொத்துக்கள் பினாமி வடிவில் உள்ளன.
இந்த ஜாதி குடும்ப கட்சிக்கு பேசாமல் மூடுவிழா நடத்திவிடலாம்... இவ்வளவு குடும்பச்சண்டைகளை வைத்துக்கொண்டு பாமக இனிமேல் தமிழ்நாட்டில் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை...
ஒன்று விதைத்தால் அதுதான் விளையும். அன்று ராமதாஸ் விதைத்தார். இன்று அன்புமணி அறுவடை செய்கிறார். கர்மா வினை என்றும் சொல்லலாம். அப்பனும் மகனும் சண்டை போட்டு ஒரு வழியாக கட்சியை ஊத்தி மூடுங்கள்.
சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கூறாமல் ஏதேதோ பெயர்களை சொல்லி பெரியவர் புலம்பிக்கொண்டிருக்கிறார் இது இவருக்கு இப்போது தேவையா. பாட்டாளி மக்களை பரிதவிக்க விட்டு விட்டார் இந்த பெரியவர்...