வாசகர்கள் கருத்துகள் ( 6 )
துண்டுசீட்டு இந்நேரம் எதிர் கட்சியாக இருந்தால் சென்னை முழுவதும் குப்பை கூட்டி அதகளம் பண்ணி போராட்டம் செய்திருப்பார்.
கூலித்தொழிலாளர்கள் சம்பாதிப்பது சொற்பமான தொகை. அதிலும் பொறுக்கிகள் புகுந்து ரத்தம் உறிஞ்சி விடுகிறார்கள். மீதி அவர்களுக்கு கிடைப்பது டாஸ்மாக்குக்கே போதாது. அவர்கள் ஞாயமான சம்பளம் கேட்டால் அடக்குமுறை. இதுதான் திராவிட சமூகநீதி.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராட்டத்திற்கு தூபம் போடுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பதவி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி தருவதும் தவறான போக்காகும். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதீத சலுகைகள், குறுக்குவழியில் பதவிஉயர்வு, தகுதி தேர்வு ரத்து போன்ற வாக்குறுதியும் தவறான போக்கே. மாறிவரும் கால சூழலிலும், பொருளாதார மாற்றத்திலும், இனி தனியார்மயம் என்பது தவிர்க்க முடியாது. பெரிய பெரிய ஜாம்பவான் நிறுவனங்களெல்லாம் இந்த மாற்றத்தில் சிக்கி தவித்து, உயர்கல்வி படித்தோரும் வேலையே இழப்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில், அரசியல்வாதிகள் தனியார்மயம் கூடாது, அரசு ஊழியராக்க போராடுவதற்கு ஆதரவளிப்பதும், தவறான முன்னுதாரணமாகும். நாளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்கள் வைத்த ஆப்பு, இவர்களுக்கே எதிராக வேலை செய்யும் என்பதே உண்மை. தமிழக பா.ஜ.க. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது முற்றிலும் தவறு. ஏனெனில், மத்தியில் காங்கிரஸ் அறிமுகப்படுத்திய தாராளாமாயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், மத்தியில் பா.ஜ.க. நஷ்டத்தில் இயங்கிய BSNL / AIR INDIA போன்றவற்றை தனியார்மயமாக்கிவிட்டது. மேலும், insurance துறையிலும் நூறு சதவிகிதம் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது வெறும் ட்ரைலர் மட்டுமே. இனிமேல் தான், மெயின் பிக்சர் உள்ளது. எனவே, மீண்டும் அரசுமயம் என்ற பின்னோக்கி செல்வது என்பது நடக்காத காரியும். இதை உணர்ந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., இதுபோன்ற போராட்ட எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் இருப்பதே நல்லது. இனி தனியார்மயத்தை தவிர்க்கவே முடியாது.
கொஞ்சம் பொறுங்க தமிழ் மக்கா... திருட்டு திராவிடம் நான் 2026 ல் தோற்று உங்களுடன் உங்களுக்காக வந்து மறுபடியும் ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று போராடுவேன்...
இந்த சமூகத்தின் மிக வறிய நிலையில் உள்ள கடை நிலை ஊழியர்கள் இவர்கள் . இவர்களிடமா அரசு தங்கள் வீரத்தை காட்ட வேண்டும்?
தொடரட்டும் போராட்டம்.