உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் இன்றைக்கு 41 பேர் பரிதாபமாக இறந்து போய் உள்ளனர். யார் மின்தடை ஏற்படுத்தினார்கள். யார் செருப்பை தூக்கி வீசினார்கள். போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m71t3uz1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே 30 ஆம்புலன்ஸ் வருவதற்கு காரணம் என்ன? முதல்வர் வந்தால், நல்ல இடத்தில் அனுமதி கொடுக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் அந்த இடத்தில் அனுமதி கொடுத்தார்கள். இதை எல்லாம் அவர்கள் சீர் தூக்கி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: பாஜ பிடியில் விஜய் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளாரே?நயினார் நாகேந்திரன் பதில்: விஜய் தன்னை பாஜவின் எதிரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் எங்கள் பிடியில் இருப்பதாக சொல்வது சரியில்லை. நிருபர்: பாஜ குழு கரூரில் ஆய்வு செய்து விட்டு சென்று உள்ளார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?நயினார் நாகேந்திரன் பதில்: அந்த குழு அறிக்கையாக ஆய்வு செய்ததை எழுதி கொடுத்து இருக்கிறார்கள். என்ன முடிவு செய்தார்கள் என்பதை பொறுத்து அதனை சொல்ல முடியும்.நிருபர்: திருவண்ணாமலையில் போலீசாரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்?நயினார் நாகேந்திரன் பதில்: இது ஏதோ இன்றைக்கு, நேற்று நடக்கும் சம்பவம் அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வேலியே பயிரை மேய்ந்தார் போல, காவல்துறையில் இதுபோன்றவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Easwar Kamal
அக் 03, 2025 18:13

சும்மா இருங்க நயினார் போலீஸ் ஸ்டாலின் கட்டுப்பாடில் இல்லை என்று சொன்னால் உடனே நம்ம அறிவாளி முதலவர் நான் தக்க பாதுகாப்பு கொடுக்க சொன்னேன். போலீஸ் தங்கள் வேலை செய்ய வில்லை என்று பாவப்பட்ட போலீஸ் மேல் பழி போட்டு விட போரானுவ. அடுத்த 5 ஆண்டு மீண்டும் வரணும் அதுக்கு என்ன வேலையும் செய்வானுவ.


ராமகிருஷ்ணன்
அக் 03, 2025 03:46

கரூரில் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது.


joe
அக் 02, 2025 20:04

காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது .யார் முதல்வராக வந்தாலும் இந்த காவல் துறையை சீரமைப்பது என்பது சற்று கடிமான வேலையே .உயர் திரு ஸ்டாலினை மட்டும் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை .ஆனால் ஆட்சிக்கு பாதகமாக பொருளாதார குற்றவாளிகளை முதல்வர் ஆதரிப்பது நாட்டுக்கு நல்லதல்ல . கரூரில் பேக்கேஜிங் அட்டை கம்பெனி வைத்திருந்த பழைய தி மு க விசுவாசி பழனிசாமிமணல் மாபியா -ஆற்று மணல் மாபியா முதல் இன்றைய பொருளாதார ஊழல்வாதி செந்தில் பாலாஜி வரை எல்லாருமே ஊழல்வாதிகள் தி மு க ஊழல்வாதிகள் . கரூரில் தின்னப்ப தியேட்டர் எதிரில் உள்ள இடம் யாருடைத்து சில வருடங்கள் முன்னாள் கேட்டால் அது செந்தில் பாலாஜியுடையது என்று சொன்னார்கள்.கரூரில் அமராவதி பாலம் அருகில் உள்ள தியேட்டரை இந்த செந்தில் பாலாஜிதான் வாங்கினாராம் .மேலும் அதன் அருகில் உள்ள தெருவில் உள்ள உன்னுடைய வாடகை வீடுகள் எங்கைய்யா என்று அந்த வீட்டுக்காரை கேட்டால் அதை செந்தில் பாலாஜியின் ஆட்கள் வாங்கிவிட்டார்கள் என்கிறார்கள் .ஊழல் ஊழல் எங்கேயும் எப்போதும் ஊழல் கரூரில் நாறிக்கிடக்கிறது .கலெக்டர் அலுவலகமே கரூர் அரசியல் வாதிகளின் ஊழல் அரசியல் கூடமாக இருந்திருக்கிறது .அதிகாரிகளை மிரட்டியும் லஞ்சம் கொடுத்தும் காரியம் சாதித்திருக்கிறார்கள.இதுதான் கரூர் வரலாறு .தமிழகத்தில் தி மு க வின் ஊழல் கூடம் கரூர் மாநகரமே .கலெக்டர் அலுவலகம் என்று சொன்னாலும் தகும் .விஷயம் இப்படி இருக்க காவல் .....?புரிந்ததா .


என்றும் இந்தியன்
அக் 02, 2025 17:50

இது மிக மிக தவறான குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் மட்டும் தான் உள்ளது, தமிழக காவல் துறையாக அல்லவே அல்ல.


Mariadoss E
அக் 02, 2025 15:47

பிஜேபி மட்ட ரக, அரசியலில் ஈடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது.....


vivek
அக் 03, 2025 05:40

உனக்கு மூளை முட்டியில் இருபது நன்றாக தெரிகிறது


GMM
அக் 02, 2025 14:49

தமிழக காவல் துறை தன் கட்டுப்பாட்டை திராவிட இயக்கம் வளர்ந்தவுடன் இழந்தது.


sekar ng
அக் 02, 2025 14:05

சேகர் பாபு,, செந்தில் பாலாஜிதான் தமிழக காவல்துறை இயக்குனர்கள்


Chandru
அக் 02, 2025 13:45

டம்மி பீஸ்


திகழ்ஓவியன்
அக் 02, 2025 13:31

நீர் சொல்லுவதில் உண்மை இருக்கு போல தான் இருக்கு


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 02, 2025 13:30

மாநில அரசுகளிடம் இருந்து காவல்துறை நிர்வாகத்தை பிரித்து கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஆனால் இதை பரிக்ஷார்த்த முறையில் சிறிய மாநிலங்களில் துவங்கி பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தலாம். யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் காவல்துறை கவர்னரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை ராணுவம், தேர்தல் ஆணையம் போல ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட, பாராளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்ட அதிகார மையமாக மாற்றலாம்.