உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சூழல் மாசில்லாமல் தீபாவளி கொண்டாட்டம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு

சுற்றுச்சூழல் மாசில்லாமல் தீபாவளி கொண்டாட்டம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கை: பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக சிறு குழந்தைகள், பெரியோர், நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகையன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:00 மணி வரையில் மட்டுமே, ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு நலச் சங்கங்கள் வாயிலாக முயற்சிக்க வேண்டும்.அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

N Sasikumar Yadhav
அக் 31, 2024 16:53

இந்துமத பண்டிகை மட்டும்தான் இந்த மானங்கெட்ட மாசுக்கட்டுப்பாடில்லாத வாரியத்துக்கு தெரியும் கனிமவளம் கேரள கழிவுகளை கொட்டுவது சிறுபான்மையினரின் பண்டிகைக்கு வெட்டப்படும் விலங்குகள் எல்லாம் தெரியாது


Jysenn
அக் 31, 2024 13:58

ஊழலின் உறைவிடம் இந்த டிபார்ட்மென்ட். திருடர்கள் கூடாரம் .


Ganapathy
அக் 31, 2024 10:45

அப்ப நான்கு புறமும் மூடிய சர்சுகளில் வருசம் முழுக்க மெழுகுவத்திய கட்டுகட்டா 24 மணிநேரமும் எரிச்சா நீங்க சொல்லும் ஆக்ஸிஜன் வளிமண்டலத்துல கூடுமா ஆபீசர்? சுற்றுப்புற சுழல்ல அப்படியே ஆக்ஸிஜன் கொப்பளிச்சுகினு வருமா ஆபீசர்? எலேய் கிறிஸ்தவ ஓட்டுன்னா எப்பவும் பொத்திகினு போவீகளே, அதே மாதிரி இப்பவும் பொத்திகினு போங்க. மக்களே நீங்க பாரம்பரியமுறைல இன்றைய தினத்தில் ஸ்ரீராமர் அயோத்தியாவில் 14 வருடங்கள் கழித்து மன்னராக முடிசூடிய நாளை வெடிவெடிச்சு கொண்டாடினாத்தான் வரிகட்டி தீபாவளி வெடிகள் செய்யும் தொழிலில் உள்ள 10 லட்சம் ஏழை தமிழர்களில் சமையலறையில் குறைந்தபட்சமாக ஒருவேளை சமைக்கமுடியும். மாசுக்கட்டுபாட்டை பலவித வியாதிகளுடன் வரும் பிணங்களை வருசம் முக்க புதைத்து நிலத்தை மாசுபடுத்தியும் மெழுகுவத்திகளை கட்டுக் கட்டாக எரித்து சுவாசிக்கும் காற்றை மாசாக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு போதிக்கட்டும் மொதல்ல.


Ganapathy
அக் 31, 2024 10:22

வந்துருவீகளே உடனே... மாசக்கணக்குல எரிக்கும் பஞ்சாப்புக்கும் ஹரியானாவுக்கும் உன்னோட மாசுகட்டுப்பாடு சட்டங்கள் பொறுந்தாதா? வருசம் முழுக்க மெழுகுவத்தி எரிக்கும் சரச்சுகளுக்கு மாசுகட்டுப்பாட்டு விதிகள் சட்டங்கள் பொறுந்தாதா? நாங்க வெடி வாங்கினாத்தான் 10 லட்சம் ஏழைத் தமிழர்களின் வாழ்வில் தீப ஒளி ஏற்று முடியும். அதனால, நீ எவ்வளவு கொடுமையான சட்டங்கள் போட்டு எங்க பாரம்பரிய தீபாவளி கொண்டாட்ட வழிமுறைகளை தடுக்க நினச்சாலும் நாங்க இனிமே வருசாவருசம் இன்னும் நிறையவெடி வாங்கி கட்டாயம் வெடிப்போம். தமிழில் தீபாவளி வாழ்த்து அவங்களுக்கு தெரிவிப்போம்.


Svs Yaadum oore
அக் 31, 2024 07:58

குமரி மாவட்டத்தில் ஒரு மாசத்துக்கு கிட்டத்தட்ட 40 லாரி வண்டி கோழி மீன் கழிவு கேரளாவிலிருந்து ஏற்றி வந்து குமரியில் கொட்டுகிறார்கள் ....இதுமாதிரி, 10 வருசமா நடக்குதாம் ..... அதற்குமேல் கேரளா மருத்துவ கழிவை 25 வருஷமாக தமிழ் நாடு எல்லையில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள் ....இதெல்லாம் கேட்க இந்த மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வக்கில்லை ....ஆனால் ஒரு நாள் ஹிந்து மத பண்டிகைக்கு மாசு மாசு என்று சுற்று சூழல் மேல் ரொம்ப அக்கறை போல இந்த மாசு வாரியம் ஒப்பாரி....


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 09:55

CPCB - Central n Pollution. Control Board, ஒன்றிய அரசின் கீழ் தான் இயங்குகிறது. அவர்களிடம் சொல்லிப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநில மக்களுக்கும் பிஜேபி எதிரி ஆச்சே? என்ன பண்ணலாம்??


Kalyanaraman
அக் 31, 2024 07:22

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் தான் ஒரு வருடத்திற்கு மேலாகவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வருடத்திற்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் போரும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பல நாடுகள் போர் பயிற்சிகள், கூட்டுப் போர் பயிற்சிகள் , போர் ஒத்திகைகள் ஆண்டு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற நிலையில் தான் நடைபெறுகிறது என்பதை நாம் அனைவருமே கண்ணை மூடிக்கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும். . ஆனால், உலகத்திலேயே இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியான ஒரே ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே அனைத்து மாசுகளும் ஏற்படுகிறது. இந்து மக்களே அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். உலகமே இந்துக்களுக்கும் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டுக்கும் எதிராக இருப்பது தெரிகிறது.


kantharvan
அக் 31, 2024 07:39

மங்களகரமான பெயர் என்ன செய்வது மண்டையில் மசாலா இல்லை. அடுத்த வீடு தீப்பிடித்து எரிகிறது எனில் அது அவர்களின் கவன குறைவு. நம் வீட்டை நாம் பாதுகாக்க வேண்டும் எதிர்கால சந்ததிக்கு சுத்தமான காற்றையும் நீரையுமாவது விட்டு செல்ல வேண்டாமோ?? இதில் எங்கே வந்தது பாரம்பரியம் பண்பாடு . பட்டாசு என்பதே சீனாவின் இறக்குமதி பொருள் . தீபாவளியோ கொண்டாட படுவது பல ஆயிரம் வருசங்கள். சிந்திப்பீர் அறிவுள்ளம் கொண்டவர்களே


sridhar
அக் 31, 2024 07:21

அதே போல் மிருகங்களை வதைக்காமல் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம் , சரியா .


Kasimani Baskaran
அக் 31, 2024 07:17

மாசடைந்த கூவத்தால் திராவிடத்துக்கு முதலை விட்டதில் பல கோடிகள் லாபம். அது கூட இந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியாமல் போனது துரதிஸ்டவசமானது.


Sathyanarayanan Sathyasekaren
அக் 31, 2024 06:53

அந்நிய நாட்டு மதத்தினர் பல்லாயிரக்கன்னக்கான விலங்குளை கொலை செய்து அதன் கழிவுகளை போட்டு மாசாகும் போது தூங்கிக்கொண்டு இருப்பார்கள்.


அப்பாவி
அக் 31, 2024 06:37

ரெண்டே மணி நேரத்தில் எல்லாத்தயும் வெடிச்சு மாசு படுத்திடுங்க.


sridhar
அக் 31, 2024 07:22

வருஷம் பூரா எல்லோரும் ac ஓட்டறாங்க , அதுல கெடாத சுற்றுச்சூழலா .


Ganapathy
அக் 31, 2024 10:26

நீ அப்பாவி இல்ல... அடப்பாவி... இன்னாமா புழுகுற... வருசம் முழுக்க மெழுகுவத்தி ஏத்துறவன பாத்தா ஏன் உனக்கு நாக்கு தள்ளுது? போய் உன்னோட நாறவாய அவன்கிட்ட காட்ட வேண்டியதுதானே.


புதிய வீடியோ