வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஒவ்வொரு கட்சியும் அதன் வளர்ச்சிக்காகவே பொதுக் கூட்டங்கள் நடத்துகின்றன. நடத்தச் சொல்லி அரசோ மற்றவர்களோ வலியுறுத்துவதில்லை. அதனால் அதற்கான பொறுப்பும் அந்தந்த கட்சிகளையே சார்ந்தது. ஒரு பொதுக் கூட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டால் அதில் உயிரிழப்பு, காயம் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்த கட்சியே ஏற்க வேண்டும் . உதவி, மற்றும் இழப்பு தொகையை அந்தந்த கட்சிகளே வழங்க வேண்டும். கண்டிப்பாக அந்த கட்சியின் தன்னார்வலர்கள் பெயரை 100 பேருக்கு 2 பேர் வீதம் வருவாய்துறை , காவல்துறையிடம் தர வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வருவாய் துறையால் வழங்கப் பட வேண்டும். அவர்களே குடி தண்ணீர் மற்றும் உணவுக்கு பொறுப்பாளர் ஆவார்கள். கூட்டம் முடிந்த பின்அவர்கள் ஏனைய கட்சிக் காரர்களுடன் இணைந்து பிளாஸ்டிக், மற்றும் பிற பொருட்களை அப்புறப் படுத்தி பழைய நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை ஒப்படைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர், செயலாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கழிவு மேலாண்மை மன்றம் குப்பை பராமரிப்பு மன்றம் என்றெல்லாம் அமைப்பை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை குப்பையை சரியான இடத்தில கொட்ட. ஒன்று நல்ல மக்கள் இல்லை நல்ல அதிகாரமுள்ள அரசு அலுவலம். இரண்டும் இல்லை என்றால் மூன்றாவது பூமி ஒரு சில மினிடம் நின்றால் போதும் குப்பையும் மனிதனும் கலந்து விடுவான் பாவம் இவர்களோடு சேர்ந்து பாவம் செய்யாது விலங்குகளும் சாகும்
நம்ம நாட்டில் பிளாஸ்டிக் பை உபயோகிக்க கூடாதுனு ஆஃபீஸ்ர் ஸ்ட்ரீட்டா இருக்கிறதா சொல்லுறாங்க, நீங்க என்னனா அரசியல் கூட்டத்தில் பிளாஸ்டிக் பை வருது என்றால் ஆஃபீஸ்ர் மீது நடவடிக்கை தேவை, கோர்ட் வழிகாட்டுதலில் நடவடிக்கை எடுக்கவும்.
RSS மற்றும் பாஜாக அவர்கள் போடும் போது கூட்டஙகுகளுக்கு பின் தொண்டர்கள் பிளாஸ்டிக் கழிவுகளியை மூட்டைய்யகளில் சேகரித்து வெளியில் உள்ள கிடங்கில் சேர்த்து விடுகிறார்கள். இந்த பழக்கத்தை எல்லா கட்சியினரும் பின் பற்றலாம்.
நல்ல யோசனை, கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்
ஏற்கெனவே நாங்க சுத்தப்படுத்திகிட்டு தானே இருக்கோம். பிளாஸ்டிக் சேரை எல்லாம் ரொம்ப கஷ்டப் பட்டு தலையில வச்சு வீட்டுக்கு கொண்டு போறோமே?
பாலீத்தீன் பைகளுக்கு தான் ஆல்ரெடி மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளனவே. அப்புறம் எப்படி பாலீத்தீன் பைகள் கிடைக்கின்றது.
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் முடிந்தபின் அங்கு சிதறிக்கிடக்கும் குப்பைகளை மட்டும் அகற்றினால் மட்டும் போதாது. அங்கு ஒருவேளை கரூர் போன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், நடக்கக்கூடாது, ஒருவேளை நடந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்துதரவேண்டும். அதற்கு ஒப்புதல் என்றால் மட்டுமே கூட்டம் கூட்டவேண்டும். இல்லாவிட்டால் கூட்டம் கூட்ட அனுமதி மறுக்கப்படவேண்டும். அது ஆளும் கட்சியே ஆக இருந்தாலும். வேண்டாம் மீண்டும் ஒரு கரூர் சம்பவம்.
தமிழகத்திற்கு தேவை அறிக்கைகள் மட்டுமே. .