உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அர்ச்சகர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்: பா.ஜ.,

 அர்ச்சகர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்: பா.ஜ.,

சென்னை: 'தேவையற்ற விவாதங்களும், எதிர்மறை சித்தரிப்புகளும் நிறுத்தப்பட்டு, நேர்மறையான சேவை செய்து வரும் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்களின் மரியாதையும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் அணி தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராமன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: திருச்செந்துார் கோவிலில் பொதுமக்கள் போல சென்று திடீர் ஆய்வு நடத்தி, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. தவறு நடந்திருந்தால், அது திருத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு தனிப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, முழு அர்ச்சகர்கள் சமூகத்தின் மீதும் சந்தேக நிழல் ஏற்படுத்தும் விதமாக, சிலர் தொடர்ந்து இந்த விவகாரத்தை பெரிதாக்க முயல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் மிக எளிய வாழ்க்கை நடத்தி, குறைந்த வருமானத்திலும் பக்தியுடனும், ஒழுக்கத்துடனும் தினமும் பூஜை செய்து வருகின்றனர். அவர்களின் ஆன்மிக சேவையும், அர்ப்பணிப்பும், ஒரே சம்பவத்தின் வாயிலாக அளவிட முடியாது. ஒருவரின் தவறை காரணமாக கொண்டு, முழு அர்ச்சகர் சமூகத்தையும், கோவில் மரபுகளையும் குறிவைத்து பேசுவது நியாயமில்லை. தவறை திருத்துவது அவசியம். ஆனால், அதை காரணமாக வைத்து பல நுாற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஆன்மிக மரபுகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் இழிவுபடுத்தும் அணுகுமுறை ஏற்க முடியாது. தேவையற்ற விவாதங்களும், எதிர்மறை சித்தரிப்புகளும் நிறுத்தப்பட்டு, நேர்மறையான சேவை செய்து வரும் ஆயிரக்கணக்கான அர்ச்சர்களின் மரியாதையும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V GOPALAN
ஜூன் 01, 2026 13:40

Severe Punishment should be given. So that Pazhani, Thiruvannamal priest will be cautious


GMM
மே 31, 2026 15:48

ராணுவ வீரர்கள் போல் கோவில் அர்ச்சகர் பணி மிக கடினமானது. பிராமின் சமூகம் மட்டும் தான் பக்தி உணர்வை கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஒரிரு குறை கொண்டு மொத்த பூசாரிகள் மீது மத மாறிகள் விமர்சிப்பர். நாஸ்திகர்கள் இந்து மதத்தில் இருந்து கொண்டு கூலி பெற்று கொண்டு கடும் விமர்சனம் புரிவர். பிஜேபி போல் மற்ற கட்சிகள் அக்கறை கொள்ள வேண்டும். கட்டண அடிப்படையில் சிறப்பு தரிசனம் கூடாது. முதியோர் விரைவில் வழிபட வசதி செய்து தர வேண்டும்.


veeramani
மே 31, 2026 09:31

செட்டிநாடு காரைக்குடியில் வசிக்கும் சீனியர் சிட்டிசனின் கருத்து ..... எங்கள் ஏரியாவில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் கோ விலுக்கு வாருங்கள். தரிசனம் செய்யுங்கள். கோவிலில் ஸ்பெஷல் தரிசனம் கிடையாது. வயதான சீனியர் தமிழருக்கு ஆதார் அடிப்படியில் தனி தரிசனம் அல்லது குறிப்பிட்ட நேரம் ஒதுக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை