உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பள்ளிகளில் மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது: அரசு எச்சரிக்கை

 பள்ளிகளில் மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது: அரசு எச்சரிக்கை

சென்னை: 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும், அரசியல், மதம் மற்றும் ஜாதி அமைப்புகளின் கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளில், த.வெ.க., நிர்வாகிகள் 'ரீல்ஸ்' எடுப்பது சர்ச்சையானது. இதை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் எந்த கட்சியினரும் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இது தொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் வளாகத்தில், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், ஜாதி சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்களிலும், இது பொருந்தும் * எந்த காரணத்தை கொண்டும், பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத செயல்பாடுகளுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்கக் கூடாது * அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த வேண்டும் * பள்ளி சுவர் மற்றும் வளாகத்தில், அரசியல், மதம் சார்ந்த சுவரொட்டிகள், விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள், சின்னங்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது * பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள், அரசாணையை மீறி, அரசியல், மத நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பாரதி
ஜூலை 30, 2026 21:34

மிக மிக அருமையான சட்டம் ஆனால் இதை சிறுபான்மையினர் பள்ளிகளில் மட்டும் அமல் செய்யக்கூடாது ஏனென்றால் அவர்களின் மனம் புண்படும்


Perumal Pillai
ஜூலை 30, 2026 18:05

நான் படித்த அரசு நிதி உதவி பெரும் கிறித்துவ பள்ளியில் அரையாண்டு மற்றும் ஆண்டு விடுமுறையில் பாடம் சம்பந்தமான பயிற்சி எதுவும் கேòடுக்கமாட்டார்கள் .ஆனால் புதிய ஏற்பாட்டில் 4 புத்தகங்கள் கொடுத்து படித்து வர சொல்லுவார்கள் .


Chess Player
ஜூலை 30, 2026 15:47

கிறித்துவ கல்லூரிகளில் மதம் மாற்றும் தொழில் செய்யக்கூடாது


shakti
ஜூலை 30, 2026 13:40

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மத நிகழ்ச்சியா ??


DUBAI- Kovai Kalyana Raman
ஜூலை 30, 2026 13:08

இது அரசு பள்ளிகளுக்கு மட்டும் தானே .. அரசு உதவி பெறாத பள்ளிகளை , யாருக்கு வேணா கொடுக்கலாம் , லீவு நாட்களில் , வாடகை or பிரீ யா ..அரசுக்கு என்ன problem ..கிறிஸ்டின் பள்ளிகளில் ..ஜீசஸ் prayer , கிறிஸ்டின் பூஜைகள் டெய்லி உண்டு ..அது எல்லாம் நிப்பாட்டப்படுமா ? முஸ்லீம் பள்ளில குரான் சொல்லிக்கொடுக்கிறான்கள் ..அது நிப்பாட்டப்படுமா ? சட்டம் எல்லாம் ஹிந்து பள்ளிகளுக்கு மட்டும் தானா ? ஆர்டர் தெளிவா இருக்கனும் , அப்போ தான் , சட்டத்தை follow பண்ண முடியும்


ஆரூர் ரங்
ஜூலை 30, 2026 13:08

ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மதக்கூட்டங்கள் நிகழ்ச்சிகளுக்கு தடை என்பது சட்டத்திற்கு எதிரானது. மதசுதந்திரத்துக்கு எதிரானது. தனியார் சுயநிதி நிலையங்களில் நிகழ்ச்சிகளை நடந்த அரசு அனுமதி தேவையில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2026 13:05

மதரசா அரபு பள்ளிகளுக்கு அரசு உதவிகள் உண்டு. அங்குள்ள உஸ்தாத் எனும் ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவித் தொகை அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு நடப்பது முழுக்க முழுக்க மதவகுப்புக்கள்தான். அவற்றுக்கு இந்த விதி உண்டா?. மதசார்பற்ற அரசு என்றால் மதமற்ற அரசு என பொருளல்ல.


தத்வமசி
ஜூலை 30, 2026 12:37

இந்த ஆணை இந்துக்களுக்கு மட்டுமா ? இல்லை மற்ற மதத்தினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்துமா ? சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியவே தெரியாது. பல மதமாற்ற நிகழ்வுகள் நடந்தாலும் வெளிய தெரியவே தெரியாது. ஆனால் அதில் சில சமயம் அரசியல்வாதிகளும் கலந்து கொள்வார்கள். அதே சமயம் பல பள்ளிகளை இந்து அமைப்புகள் நடத்துகின்றன. அந்த பள்ளிகளில் விடுமுறை நாட்களில் அவர்கள் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அது கலை பண்பாடு அல்லது இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை விடுமுறை நாட்களில் நடத்துவார்கள். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்கள் மூலமாக பல பள்ளிகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன. அதில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கின்றனர். அதில் விடுமுறை நாட்களில் ஷாகா மற்றும் பயிற்சி நடைபெறும். இது இப்போது திராவிட ஆட்சிக்குப் பிறகு தவெக ஆட்சியிலும் இதே ராகம். மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு உருது பள்ளிகளுக்கு நிதி உதவி கொடுக்கிறது. இன்னும் உருது அங்கே நடத்தப்படுகிறது. உருது பள்ளிகளில் என்ன நடத்துவார்கள் ? உருது பள்ளிகளில் கணக்கும் அறிவியலுமா நடத்துகிறார்கள் ? அதே போல பாடசாலைகளுக்கும் நிதி உதவி அளிக்கிறது. அங்கு ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் தவிர சம்ஸ்க்ருதம் ஒரு மொழியாக பயிற்றுவிக்கப் படுகிறது. சம்ஸ்க்ருதம் நடத்துவதை தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையால் தடுத்து விட்டது. இது தான் தமிழக அரசின் மதசார்பற்ற தன்மை. இதில் ஒரு எச்சரிக்கை வேறு. விளங்கிடும்.


தமிழ்வேள்
ஜூலை 30, 2026 10:42

பள்ளி வளாகத்தில் சர்ச் வைத்துக் கொண்டு மத மாற்றம் செய்பவர்களை தடுக்க இந்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அரசு சம்பளம் பெறும் கிறிஸ்தவ பாதிரி வாத்தியார் எப்படி அங்கியோடு வகுப்பெடுக்கலாம்? காவி வேஷ்டி குடுமி/கொண்டை குங்குமப் பொட்டு உடன் ஹிந்து ஆசிரியர் பள்ளிக்கு வந்து வகுப்பு எடுத்தால் இந்த திராவிட அரசுகள் சும்மா இருக்குமா?


chinnamanibalan
ஜூலை 30, 2026 14:53

இந்துக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து முதலில் விழித்தெழ வேண்டும்!


Sivagiri
ஜூலை 30, 2026 10:22

ஹிந்துக்களுக்கு மட்டுமா ? சிஎம்ஸ், கத்தோலிக்க, முஸ்லீம், ஸ்கூல்களுக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை