உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் முக்கியம்: இபிஎஸ் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன், '' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.சென்னை தி.நகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள். உயிரோட்டமுள்ள கட்சி. இது இறைவனால் உருவாக்கப்பட்ட கட்சி. ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல. யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், கடவுள் மன்னிக்க மாட்டார்.அதிமுகவை எவராலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் எங்களுக்கு முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன். சிலரை கைகூலிகளாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறீர்கள். அவர்களை அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டுவோம்.சில பேர் அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள். அவர்களை மன்னித்து அரவணைத்து துணை முதல்வர் பதவியை கொடுத்தோம். அவர்கள் திருந்தவில்லை. அதிமுகவின் கோவிலாக இருக்கும், கட்சி தலைமையகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா?.இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்தி சென்றார். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அவர்களை யார் ஏற்றுக் கொள்வது.எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. உறுதியான மனநிலை உண்டு. எதற்கும் அஞ்சாத ஆற்றல் உண்டு. யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது. இதுவரை, அதிமுக ஆட்சி செய்யும் போதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் யாரும் எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நன்மை தான் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சில பேர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தனர். ஆட்சியை கவிழ்க்க பார்த்தனர். மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

கூத்தாடி வாக்கியம்
செப் 16, 2025 15:22

இவர் ஒரவரே கட்சியை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி முடித்து விடுவார் என்று நினைக்கிறேன். எதிலும் வெற்றி இல்லை இதில் வீர வசனம் மட்டும் குறை வதில்லை. இவரோடு சேர்த்து பிஜேபி யும் அழிய போகிறது. இன்னும் மக்களின் மன நிலை புரியாமல் பேசுகிறார். பிரிந்து போநவர்களை சேர்த்தால் தன் நார்க்காலி காலி என்று நினைக்கிறஆர்


Venugopal S
செப் 16, 2025 11:12

நம்மிடம் இல்லாததைப் பற்றி எல்லாம் பேசி என்ன பிரயோஜனம்?


எதிர்தமில்
செப் 16, 2025 08:54

தமிழ் நாடு அரசியல் மற்ற மாநிலத்தை விடஅறிவிற்குறைந்த அரசியல்வாதிகள் தங்கள் மனதில் தோன்றும் இலவசங்களை கூறி ஆட்சிக்கு வருகின்றனர் மீடியாவுக்கு. பணத்தை வாரி இறைத்து தங்களை முன்னிலை படுத்தி கொள்கின்றனர்.அண்ணாமலை போன்றவர்களை இருட்டடிப்பு செய்வது துரதிருஷ்டமானது அதை திரு குருமூர்த்தி மாதிரி. தேர்தல் அரசியலில் இல்லாதவர் செய்வது கேவலமானது..இவரின் திரு ரஜினி காந்த் அவர்களை அரசியலில் கொன்டு வர முயற்சி எவ்வளவு பெரிய கரியை முகத்தில் மோடி அமித்ஷா தமிழருவி மணியன் முகத்தில் பூசி கொணடனர் என்பது உலகமே அறிந்தது


கொங்கு மக்கள்
செப் 16, 2025 07:37

இந்த 2026 தேர்தலில் படி நிச்சயம்


ராமகிருஷ்ணன்
செப் 16, 2025 07:37

எடப்பாடிக்கு வலுவாக பணத்தை கொடுத்து திமுக விலைக்கு வாங்கி விட்டார்கள்.


Rajasekar Jayaraman
செப் 16, 2025 06:42

தன்மானத்த பத்தி தவழ்ந்தவர் பேசக்கூடாது.


Moorthy
செப் 16, 2025 06:37

இன்னும் கெட்டு போவேன், என்ன பந்தயம் கட்டுறே??


mano
செப் 16, 2025 06:14

அதிமுக ADMK ADMK WIN எடப்பாடி CM


pakalavan
செப் 16, 2025 05:39

தன்மானத்தை பற்றி பேச எடப்பாடிக்கு யோக்கியத இல்ல


GUNA SEKARAN
செப் 16, 2025 05:24

இந்த பழனிசாமி முருகக் கடவுளின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். துரோகத்தைத் தவிர வேறெதுவும் செய்திராத ஊர்ந்து சென்று முதுகில் குத்திய இந்தக் கேடு கெட்ட ஆள் தற்போது ஸ்டாலினின் கையாள் கொடநாடு ஒன்றே போதுமே....TASSMAC கொள்ளை கனிமவளக் கொள்ளை ஸ்மார்ட் சிட்டி கொள்ளை. ....


சமீபத்திய செய்தி