உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி வழக்கு; மேலும் 150 பேருக்கு சம்மன்

செந்தில் பாலாஜி வழக்கு; மேலும் 150 பேருக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து துறை பணி நியமன மோசடி புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேலும், 150 பேருக்கு, 'சம்மன்' அனுப்ப, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - -15ல், போக்குவரத்து துறையில் பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.மொத்தமுள்ள நான்கு வழக்குகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மூன்று வழக்குகளிலும், முதல் நபராக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கில், எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்; அதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு ஒவ்வொரு விசாரணையின் போதும், 100 பேர், 150 பேர் என, மொத்தமாக ஆஜராகும் வகையில், சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அதேபோல, ஏற்கனவே சம்மன் பெற்ற, 145 பேர் ஆஜராகினர்.இதையடுத்து, இவ்வழக்கில் மேலும், 150 பேருக்கும், சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி, 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். மேலும், ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்டோர் ஆஜராகுவதால், நீதிமன்ற வளாகத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர்த்து, ஏற்கனவே ஆஜரான 149 பேர், அடுத்த விசாரணையின் போது ஆஜராக விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார்.

'தீவுத்திடலில் கேம்ப் கோர்ட்'

குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு சிலர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:வழக்கில் 2,000த்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட என் கட்சிக்காரர்களையும், போலீசார் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். குற்ற வழக்கை பொறுத்தமட்டில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து விசாரிக்க வேண்டும். அப்போது தான் நீதிமன்ற விசாரணை, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தெரியவரும்.அதற்கு வசதியாக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரு சேர ஆஜராகும் வகையில், வழக்கின் விசாரணையை விசாலமான இடத்துக்கு மாற்ற வேண்டும். நேரு விளையாட்டு மைதானம் அல்லது தீவுத்திடல் போன்ற இடங்களில், 'கேம்ப் கோர்ட்' அமைத்து, விசாரணையை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதற்கு நீதிபதி, 'கூடுதல் ஊழியர் உள்ளிட்ட பிற வசதிகள் கோரப்பட்டு உள்ளன. தற்போது இருக்கும் வசதிகளை வைத்து, வழக்கு விசாரணை தடையின்றி நடத்தப்படும். குற்றச்சாட்டு பதிவு போன்ற முக்கியமான கட்டங்களில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் ஆஜராகுவர். ஒவ்வொரு விசாரணையின் போதும், அனைவரும் ஆஜராகுவதில் சற்று சிரமம் உள்ளது. இருப்பினும், அது குறித்து வழக்கின் அடுத்தகட்ட நகர்வின் போது முடிவு செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

GoK
டிச 17, 2024 12:15

இவிங்க முன்னாலே, இவர் ஒரு பிக்பாக்கெட்டுதான்...விட்டுடுங்க பாவம்


Dharmavaan
டிச 17, 2024 11:55

உச்ச நீதி இந்த 2000 பேரை ஏற்றதே தவறு. இந்த அடிப்படை கிறுக்குத்தனத்தை புரியாத நீதி என்ன நீதி இது ஏமாற்று வேலை


Narayanan
டிச 17, 2024 11:26

ஜாமீன் ரத்தை தடை செய்யவே இந்த நாடகம் . இன்று செந்தில் பாலாஜி தரப்பினர் இதைத்தான் சொல்வார்கள், வழக்கு விசாரணை நடைபெறுகிறது . வழங்கிய ஜாமீனை ரத்துசெய்யாதீர்கள் என்று ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்து தப்பிப்பார் .


Narayanan
டிச 17, 2024 11:23

விரைவில் வழக்கு முடியவேண்டும் . 2000 பேரிடமும் விசாரணை செய்து முடியும் முன் பாதிபேர் மரணித்து விடலாம் . மீதம் உள்ளவர்கள் மந்திரியின் மிரட்டலில் பின் வாங்கலாம் . ஆகவே ஒருபானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் என்பதுபோல் ஒரு பத்து பேரிடம் விசாரணை செய்து தண்டனையை வழங்கிவிடலாம்.


sugumar s
டிச 17, 2024 11:18

conduct the case fast and give judgement to put this guy in place


ஆரூர் ரங்
டிச 17, 2024 10:53

ஒவ்வொருவருக்கும் தனித்தனி நேரம். சம்மன், சாட்சி விசாரணை. குறுக்கு விசாரணை. ஆவணங்கள் சமர்ப்பிப்பது, வாய்த? ஆக வழக்கும் முடியாது. கோர்ட் புண்ணியத்தில் அமைச்சராகவும் தொடருவாரா? இதுதான் விஞ்ஞான முறையில் தப்பவிடும் சாகசம்.


Madras Madra
டிச 17, 2024 10:38

இந்தியாவில் நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்பாடாத வரையில் வாழ்க ஜனநாயகம்


கூமூட்டை
டிச 17, 2024 09:56

வாழவேண்டும் ஊழல் வாதிதக்காளிகள் என்றாவது ஒரு நாள் ...


வைகுண்டேஸ்வரன். V Chennai
டிச 17, 2024 07:46

அந்த நெஞ்சு வலி, ஹார்ட் அட்டாக், ஆஞ்சியோ இதெல்லாம் என்ன ஆயிற்று...?


Indhuindian
டிச 17, 2024 07:38

கேசு முடிய வாய்ப்பே இல்லை. வாயிதா மேல வாயிதா அப்படியே இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு இஷுக்கும்


புதிய வீடியோ