உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி கோ.சி.மணிக்கு சிலை அமைப்பு: அதிகாரி எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றம்

அனுமதியின்றி கோ.சி.மணிக்கு சிலை அமைப்பு: அதிகாரி எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை வைக்க தி.மு.க.,வினர் முயன்றனர். அனுமதி இல்லை என அதிகாரி கூறியதால், இரவோடு இரவாக தி.மு.க.,வினர் சிலையை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த அண்ணாதுரை சிலையை, புதிய பஸ் ஸ்டாண்டில் சாலையை நோக்கி இருக்கும் வகையில், அமைத்துக்கொள்ள தி.மு.க., சார்பில், பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பேரூராட்சி சார்பில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று (12ம் தேதி) இரவு 10:00 மணிக்கு தி.மு.க.,வினர் புதிய பஸ் ஸ்டாண்டில், அண்ணாதுரை சிலையை அமைத்தனர். அதே சமயம் எந்த முன்னறிவிப்பும், அனுமதியும் இன்றி முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை அமைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், 'அண்ணாதுரை சிலை வைக்க மட்டும் தான் பேரூராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி சிலை அமைக்க, எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. சிலையை அகற்றுங்கள்' என கூறினார்.திமுகவினர் மறுப்பு தெரிவித்த நிலையில், அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திருவிடைமருதுார் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.இரவு 11:30 மணிக்கு அங்கு வந்த போலீசார், முறைப்படி அனுமதி பெற்று சிலை வைத்துக்கொள்ளுங்கள் என, அங்கிருந்த முன்னாள் எம்பி ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். அனுமதி இல்லாத நிலையில், உடனடியாக சிலையை அகற்ற கூறினர். இதையடுத்து இரவோடு இரவாக கோ.சி.மணி சிலையை தி.மு.க.,வினர் மீண்டும் எடுத்து சென்றனர். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Premanathan S
செப் 13, 2025 17:21

நம்ப முடியவில்லை தமிழ்நாட்டில் ஆளும் கட்சி செய்யும் எந்த சட்டவிரோத செயலையும் யாரும் தடுத்ததில்லையே


Srivilliputtur S Ramesh
செப் 13, 2025 14:32

சிலை வைப்பது., சமாதி கட்டுவது, நினைவு வளைவுகள் வைப்பது, கட்டிடம் கட்டி கமிஷன் அடித்து கொள்ளையடிப்பது.. இது தான் தி. மு.க. வின் திருட்டு கொள்கை ..நாட்டை நாசமாக்கிய தி.மு.க.


s.sivarajan
செப் 13, 2025 12:07

இதிலிருந்து என்ன புரிகிறதுஎன்றால் நிரந்தரமாக பதவியிலிருக்கும் ஒவ்வொரு அரசு அதிகாரியும் நேர்மையாகவும் பொறுப்பாகவும் வாங்கும் ஊதியம் மட்டும் போதும் என்று பொதுநலன் கருதி உறுதியாக பணியாற்றினால் எந்த அரசியல்வாதிகளும் தவறு செய்யமுடியாது. சுயநலனுக்காக உடந்தையாக இருந்துவிட்டு அரசியல்வாதிகளின் மீது மட்டும் பழியை போட்டால் ஒருபோதும் சரியாகாது.


Rathna
செப் 13, 2025 11:49

சிலை பேசுமா என்று சொன்னான் - பொரி ஆனால் அதையே செய்கிறான் ஊருக்கு ஊர் ரவுடி.


Balaa
செப் 13, 2025 11:15

கோடி, கோடியாய் சம்பாதித்தவருக்கெல்லாம் மையப்பகுதியில் மணிமண்டபம். சிவாஜி கணேசனுக்கு எதற்கு அடையாரில் மணி மண்டபம். சுதந்திர போராட்ட வீரரா அவர்.


ஆரூர் ரங்
செப் 13, 2025 11:13

சட்ட விரோத 75 கோடி ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கில் கோ சி மணியின் மகன் மணி அன்பழகனுக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அவரது சிலையையும் அருகே வைக்கலாம்


Nava
செப் 13, 2025 11:40

அப்படி செய்வதுதான் சரியாக இருக்கும். மகனுக்கு கண்டிப்பாக சிலை வைக்கப்பட வேண்டும்


Balaa
செப் 13, 2025 12:50

அது அவரது மனைவியின் மகனா, இல்லை துணைவியின் மகனா.


Balaa
செப் 13, 2025 11:12

சிலை வை. அடுத்து மணிமண்டபம் கட்டு. இப்படியே ஊரை நாறடி.


Kasimani Baskaran
செப் 13, 2025 11:00

அங்கீகரிக்கப்பட்ட திராவிடக்கடவுள் ராமசாமி, பிக் பிரதர், முத்தமிழ் வித்தவர், அடுத்து வரிசையில் இப்பொழுதைய மூத்தவர் முதல்வர், அடுத்து சின்னவர், அடுத்து காதல் மன்னன் இன்பநிதி - அடுத்து வாழையடி வாழையாக வரும். வேறு யாருக்காவது ஆசிரியர் உட்பட சிலை வைத்தால் அதிகாரிகள் சம்மதிக்க மாட்டார்கள். இரவோடு இரவாக சிலை நீக்கப்படும். அதுவும் முடியவில்லை என்றால் நிதி மன்றம் சம்மதிக்காது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 13, 2025 10:35

கடவுள் சிலைகள் பகுத்தறிவு இல்லையாம். ஆனால் முக்குக்கு முக்கு சிலை வைப்பது பகுத்தறிவாம். பகுத்தறிவின் உச்ச கட்டம் பேனாவுக்கு சிலை கோடிக்கணக்கில்.


தியாகு
செப் 13, 2025 10:35

ஆசியாவின் பாதி பகுதியை ஆண்டு தமிழர்களின் கலை படைப்பை உலகெங்கும் கொண்டு சேர்த்த ராஜ ராஜ சோழனுக்கு தமிழகத்தில் ஒரு சிலையும் இல்லை, ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி தன் குடும்பத்திற்கு சொத்து சேர்த்த கட்டுமரத்திற்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் சிலை. விளங்கிடும் தமிழ்நாட்டின் எதிர்காலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை