உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: விஜய் அதிர்ச்சி

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: விஜய் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது'' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்ற பிரியாணிக் கடை வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலை வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rpalni
டிச 26, 2024 11:11

வாழும் வள்ளுவருக்கு குங்குமப் பொட்டு வைத்தது யாருங்கோ? அண்ணாமலை பொங்கியெழுந்தபின் கேரவன் தலைவர் தீடிர் அறிக்கை அடிவயிற்று அப்பா வும் தீடிர் அறிக்கை


Sriram Ranganathan
டிச 26, 2024 05:22

தெறி படத்தில் வருவதை போல் விஜய் செய்வாரா??


மோகனசுந்தரம் லண்டன்
டிச 25, 2024 22:31

இன்னும் பத்து நாட்கள் கழித்து அதிர்ச்சியை தெரிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கூத்தாடிகள் எப்போதுமே தும்பை விட்டு வாலை பிடிப்பார்கள்


rengarajan
டிச 25, 2024 21:56

அவர் நெத்தியில் என்ன பொட்டு?? யாரை ஏமாற்ற??


baratha bakthan India
டிச 25, 2024 21:53

உணக்கெதுக்குடா அதிர்ச்சி.... அனைத்து அவல செயல்களும் சினிமாவில் தான் கத்து குடுக்கறீங்க.... முதல்ல சினிமா, டிவி சீரியல் களை ஒழிக்க வேண்டும்


Ganapathy
டிச 25, 2024 21:02

கல்லூரிகளில் காதல் செய்யலாம். வகுப்புகளை புரக்கணிக்கலாம். மார்பகங்கள் தொடைகள் தெரிய தனி மனித சுதந்திரம் என்றதன் பெயரில் உடைகளை அணியலாம் ஆனா பசங்க மட்டும் கண்களைப் பார்த்துதான் பேசணும் என்ற நியதியை உருவாக்கலாம் ஆசிரியர்களை கிண்டல் செய்யலாம். கல்லூரிகளில் அரசியல் கட்சிகள் போல தேர்தல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடலாம். பெண்களை கிண்டல் கேலி செய்யலாம். ஹாஸ்டல்களில் குடித்து ராக்கிங் செய்து காமக்களியாட்டங்களில் ஈடுபடலாம். மாணவிகளின் வயற்றில் ஆம்லெட் போடலாம். ஹிந்துக்களை ஹிந்து மதத்தை கிண்டல் செய்யலாம். ஆனா இவையனைத்தையும் மற்றவர்களும் காவலர்களும் பெற்றவர்களும் கல்லூரி நிர்வகங்களும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்ற நியதியை கருத்துச் சுதந்திரம் உடையணியும் சுதந்திரம் தனிமனித சட்டரீதியான அடிப்படைச் சுதந்திரம் என்றதன் பெயரில் இவையெல்லா ஒழுங்கினங்களிலும் ஈடுபட மாணவ மாணவிகளுக்கு உரிமையுள்ளது என தனது சினிமாக்கள் மூலமாக கடந்த இருபது ஆண்டுகளாக கூறிவருவது இந்த விஜய் ஜோஸப். அந்த பணத்தில் கட்டிய பனம்பூர் பங்களாவில் இருந்துதான் இந்த அறிவுரையைப் பேசுகிறார்.


KRISHNAN R
டிச 25, 2024 20:49

சரி சரி...நுங்கம்பாக்கம் ரயில் நிலைய த்தில் ஒரு பெண் கொலை செயப்பட்ட போ து.. எத்தனை பேர் கூவினர்?


raja
டிச 25, 2024 20:34

மாடல் ஆட்சி மண்ணாங்கட்டி ஆட்சி எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று உருட்டாமல் உண்மையா சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றும் கூறி இருக்கலாம்..


m.arunachalam
டிச 25, 2024 20:13

கருத்து சொன்னால் போதாது . பாபா விமோசனம் தேட வேண்டும் .


m.arunachalam
டிச 25, 2024 20:11

சினிமாவால் தொடங்கி வைக்கப்பட்ட அவலம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை