உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்

சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது'', என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, போலீசார் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, போலீசாருக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

pmsamy
நவ 12, 2025 06:45

அண்ணாமலை டெல்லியில பாஜக ஆட்சியில் குண்டு வெடிப்பு நடத்தி பத்து பேர் செத்து இருக்காங்க அதுக்கு பதில் சொல்லு...


Kasimani Baskaran
நவ 12, 2025 04:13

திராவிட முட்டுக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் சேதம் இல்லை என்பதால் அடிமைகளாக தொடர்வது சோகத்திலும் சோகம்.


மணிமுருகன்
நவ 12, 2025 00:04

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்ணியே திருட்டு பித்தலாட்டக் கூடடம் பிறகு எப்படி சமுக விரோதிகள் பயப்படுவார்கள் எந்த ஊழல் வழக்கையாவது சரியாக நடத்த அனுமதித்திள்ளதா ஊழல் கட்சி கூட்டணி உச்ச நீதிமன்றம் போய் மக்கள்வரிப்பணத்தில் தடை கேவலம்


kamal basha
நவ 11, 2025 20:48

ஹாய் அண்ணாமலை


முதல் தமிழன்
நவ 11, 2025 18:54

டெல்லி மேட்டர்


S. Rajan
நவ 12, 2025 03:42

டெல்லி பயங்கரவாதிகள் யார்? அதை யோசித்து பார்த்தாயா ?


Sundar R
நவ 11, 2025 18:33

At present, huge number of Anti-social Elements are roaming in our Tamil Nadu State.


T.sthivinayagam
நவ 11, 2025 18:20

சமுக விரோதிகள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார்கள் அவர்களுக்கு இங்கு யார் ஆதரவு தருகின்றனர் என்பதை அண்ணாமலை சார் தெளிவாக சொல்ல வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.


Sundar R
நவ 11, 2025 18:12

AnnamalaiJis observation on the presence of Anti-social Elements in Tamil Nadu is absolutely correct.


Priyan Vadanad
நவ 11, 2025 18:08

போகிற போக்கை பார்த்தால் இவர் திரும்பவும் வெல்வெட் சவுக்கால் தன்னையே அடித்துகொள்வார் போல தெரிகிறது.


Bala
நவ 12, 2025 11:39

உங்க ஆட்சியில உட்கார வைத்ததுக்கு எல்லாரும் தான்


Priyan Vadanad
நவ 11, 2025 18:05

இவர் அறிக்கை அரசியல்வாதி.


முக்கிய வீடியோ