கரூரில் ஜவுளி சோதனை ஆய்வகம்
கரூரில் நடக்கும் ஜவுளி பொருட்களுக்கு ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தேவை இருக்கிறது. மேலும் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டும். ஜவுளி தொடர்பான சோதனைகளுக்கு திருப்பூர், குரு கிராம் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர். எனவே, கரூரில் ஜவுளி சோதனை ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி பொறுப்பேற்ற போது, 10 நாடுகளில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இருந்தது. தற்போது, 56 நாடுகளில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி அதிகரிக்க முடியும்.