உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து , ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பானது, மத்திக்கும் மற்றும் மாநிலங்களுக்கும் இடையில் சிறந்த அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது. இருப்பினும் பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து , ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் அதிகார சமநிலையை மத்திய அரசுக்கு சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன. மத்திய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள், மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள் மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் கட்டாயம். இந்த நோக்கத்தின் அடிப்படையில் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட உயர்நிலை குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துகளை பெறுவதற்கு ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது.இதனை ஆராய்ந்து விரிவான பதில்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

joe
ஆக 30, 2025 17:31

யோக்கியன் சொல்கிறார் நன்றாக கேட்டுக்குங்க


Thravisham
ஆக 30, 2025 11:14

சாத்தான் வேதம் ஒதுவதா


Subburamu K
ஆக 30, 2025 08:04

Stalin is the route cause and confronting the central government unnecessarily. He is the big hurdle for the implementation of major developmental projects in the state. He is doing dirty politics in unproductive issues. His party leaders have no visision for the future.They are developing their own kit and kin


Kasimani Baskaran
ஆக 30, 2025 05:00

முரண்பட்டால் வழக்குப்போடுவோம். ஜனாதிபதியை விட எங்களுக்கு அதிகாரம் என்று கூட உருட்டுவோம். விட்டால் மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூட சொல்வார்கள். இதற்க்கெல்லாம் அடிப்படைக்காரணம் இவர்களை மோசடி செய்யவிட்டு மத்திய அரசு கலைக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான். நீதித்துறையில் இருக்கும் கறுப்பாடுகளை தயங்காமல் தூக்கி வீசவேண்டும். இல்லை என்றால் இந்தியாவுக்கு வருங்காலம் உண்டா இல்லையா என்பதை நீதித்துறை நிதித்துறை போல செயல்பட்டு தீர்மானிக்கும்.


நரேந்திர பாரதி
ஆக 30, 2025 04:42

யோவ், அப்பாரு...அதைத்தான்யா நாங்களும் நாலரை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கோம் உங்களுக்கெல்லாம் கண் கெட்ட பிறகுதான் சூரிய உதயம் போல...நல்லாவே விடிஞ்சிருச்சி...கிளம்பு...கிளம்பு...


xyzabc
ஆக 30, 2025 03:16

வெட்டி பேச்சு. பெரிய வாய். முரன்பாடுகளை வேரூற்றுவது தி மு க, அதன் அமைச்சர்கள், எம் பி கள்.


இராம தாசன்
ஆக 29, 2025 23:07

என்ன திடீர்னு .. ராஜிவ் காந்தி பெயர் சொன்னவுடன் ஏதாவது பழைய சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டதா ஆட்சி களைப்பு - கவலை வேண்டாம். பிஜேபி அதை செய்யாது


Raj S
ஆக 29, 2025 22:53

அதுக்கு உங்களைமாதிரி திருட்டு திராவிடன் தமிழகத்தை ஆளக்கூடாது...


Manik
ஆக 29, 2025 22:48

மாத்தி மாத்தி பேசுற நீ... மாத்திமாத்தி யேசுறநீ...ஒன்றியனு சொல்லனும் அப்போதான் சாக்லெட் கெடைக்கும/


R.MURALIKRISHNAN
ஆக 29, 2025 22:47

தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு முதல்வர் தேவை. அடுத்த வருடத்திலிருந்து உமது ஆயுசு வரை உமக்கு விடுமுறை.


முக்கிய வீடியோ