உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின் விசாரணை துவங்கியது!: ஐ.ஜி.,க்கு உதவ 10 போலீஸ் அதிகாரிகளும் குழுவில் சேர்ப்பு

உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின் விசாரணை துவங்கியது!: ஐ.ஜி.,க்கு உதவ 10 போலீஸ் அதிகாரிகளும் குழுவில் சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்:கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவின்விசாரணை நேற்று துவங்கியது. அந்த குழு, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தது. சிறப்பு குழுவுக்கு தலைமை வகிக்கும் ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிற்கு உதவ, 10 போலீஸ் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, “கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், அதுபற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது,” என, வடக்கு மண்டல ஐ.ஜி.,யும், சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி., விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q3kic7mq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த மாதம், 27ம் தேதி இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பெண்கள், 13 ஆண்கள், ஐந்து சிறுவர்கள், ஐந்து சிறுமியர் என, 41 பேர் பலியாகினர். மேலும், 110 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், 106 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது திருச்சி, மதுரை அரசு மருத்துவமனையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த, 3ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர், வேலுச்சாமிபுரத்துக்கு நேற்று மதியம், 1:30 மணிக்கு வந்தனர். இதில், விஜய் பிரசார பஸ் நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடம், சாலை இருபுறமும் நெரிசல் ஏற்பட்ட பகுதி, ஒடிந்து விழுந்த மரக்கிளை, திறந்தநிலை சாக்கடை போன்றவற்றை, 45 நிமிடம் பார்வையிட்டனர். கரூர் சைபர் கிரைம் எஸ்.ஐ., சுதர்சன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு மோகன்ராஜிடம், அஸ்ரா கார்க் விளக்கம் கேட்டறிந்தார். ஆய்வு குறித்து ஐ.ஜி., அஸ்ரா கார்க் நிருபர் களிடம் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்துள்ளோம். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால், இதுபற்றி வேறு எதுவும் கூற முடியாது. சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்.பி.,க்கள், ஒரு ஏ.டி.எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி.,க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பஸ் ஓட்டுநர் மீது வழக்கு த.வெ.க., தலைவர் விஜய், செப்., 27ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அங்கிருந்து பிரசார பஸ்சில், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார். கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியில், பிரசார பஸ் சென்ற போது, த.வெ.க., தொண்டர்கள் சென்ற டூ - வீலர்கள் மீது மோதியது. அதில், தொண்டர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பான வீடியோ பரவியது. இந்நிலையில், பிரசார பஸ் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பிரசார பஸ் ஓட்டுநர் மீது, இரு பிரிவுகளில், வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2025 10:57

காரணம் வெட்ட வெளிச்சம் ஆயிருமோ ?


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:34

அடுத்த நிகழ்வு ஏதேனும் வந்தால் இது மறக்கடிக்கப்படும். இதுதான் வரலாறு.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2025 07:55

விசாரணை அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை தேவையில்லை ன்னு கிம்ச்சை டீம் உச்சம் போகலையே ஏன்


Palanisamy Sekar
அக் 06, 2025 07:26

சம்பவம் நடந்த பிறகு அரசாங்கமே ஒரு நபர் கமிஷன் அமைப்பதை எதிர்த்திருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்தமாக அமைதி காப்பது அதிசயமாக இருக்கிறது. சி பி ஐ விசாரணை கேட்டு போராடியிருக்க வேண்டாமா? அரசாங்கம் அமைத்த ஒரு நபர் கமிஷனின் தராதரம் எப்படி இருக்கும் என்பதை முந்தைய விசாரணை அறிக்கையை அறிந்தும் கூட அதனை மௌனமாக ஏற்றுக்கொண்ட விதம் எதிர்க்கட்சிகளின் சோர்வையே காட்டுகின்றது. நீதிபதியின் விசாரணையும், அவரது விமர்சனமும் ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அதனை எதிர்க்காமல் இருப்பதும் அதிசயமே. ஒரு நபர் கமிஷன் எப்படி விசாரிக்கும் என்பதை ஆளும் தரப்பினரின் தொடர் பேட்டிகளும் அதன் சாராம்சங்களும் ஒரு நபர் கமிஷனுக்கு கொடுக்கும் செய்திகள். அப்படி இருந்தும் கூட ஏன் எதிர்க்கட்சிகள் அறிக்கைகளோடு எதிர்ப்பினை நிறுத்திவிட்டு பேசாமல் இருக்கின்றன?


அருண், சென்னை
அக் 06, 2025 07:13

மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்க ஒரு வழி... உப்பு சப்பு இல்லாத ஒரு ரிப்போர்ட் வரும்...அதுக்கு எதுக்கு 10 பேர், 1 ஐஜி? திரு. மணி சொல்வது போல், இந்த பாடல் நினைவுக்கு வருது...என்ன விலை அழகே... எதுவென்றாலும் .?


Krishna
அக் 06, 2025 06:13

Ruling Party Biased Judges Shielding Main Accused Mass Murder Conspirators DMK men Ministers & Police incl SP dig IG investigators


Barakat Ali
அக் 06, 2025 05:31

ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ???? இதன் ஆய்வறிக்கை செல்லுபடியாகுமா ???? அப்போ எதுக்கு அந்த பாட்டி அருணாம்மா ????


selvi
அக் 06, 2025 06:54

CASE CHANGE TO CBI


குடிகாரன்
அக் 06, 2025 05:28

இனி உண்மை வெளிவராது குற்றவாளிகள் பயமின்றி உல்லாசமாக உலவலாம் மாமூலாக கொள்ளையடிக்கலாம்


Mani . V
அக் 06, 2025 05:21

அப்பா, துணை அப்பா, ஐந்து கட்சி அமாவாசை என்ன சொல்கிறார்களோ, நினைக்கிறார்களோ அது இந்த அறிக்கையில் இருக்கும் என்று நம்புவோம். இளவரசர், குட்டி இளவரசர் அரியணை ஏறுவதற்கு இடையூறாக யார் வந்தாலும், எந்த சக்தி வந்தாலும் அதை என்ன விலை கொடுத்தாகினும் வாங்கி எங்களுக்கு பணிவிடை செய்ய வைத்து விடுவோம் அல்லது வளரவே விடாமல் செய்து விடுவோம்.


Kasimani Baskaran
அக் 06, 2025 04:13

ஞாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆஸ்கர் விருதுக்கு தகுதியான அந்த இரண்டு பிறவி நடிகர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்களை சிபிஐ விசாரித்தால் விபரங்கள் வெளிவரலாம். அது வரை ஒன்றும் நடக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை