உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன்

சென்னை: ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மது போதையில் அட்டகாசம் செய்தவர்களைத் தட்டிக்கேட்ட 12ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. போதையில் பொதுமக்களை அச்சுறுத்துபவர்களைக் கேள்வி கேட்பவர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்துமளவிற்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று வாய்ச்சவடால் விடும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் தான், தினந்தினம் போதைப் பழக்கத்தால் விளையும் வன்முறைக் குற்றங்களும் அதனால் சீரழியும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கட்டுக் கடங்காமல் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு செல்லும் என்ற தமிழக மக்களின் பொது நம்பிக்கைக்கு இம்மாதிரியான சம்பவங்கள் மறுக்க முடியாத ரத்த சாட்சிகளாக நிற்கிறது. தமிழகத்தில் இதுபோன்று உச்சத்தைத் தொட்டுள்ள கொலை, கொள்ளை, போதைக் கலாசாரத்தைக் கண்டும் காணாமல் கடந்து, மக்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை உருமாற்றி வரும் இந்த பொறுப்பற்ற தி.மு.க., ஆட்சியானது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது.ஏனென்றால், 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் தீர்ப்பிற்கு பிறகு, இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மே 05, 2025 19:57

பேர்தான் அறிவாலயம். அறிவாலயத்திற்கு அறிவு என்பதே எட்டாக்கனியாம். அப்படி என்றால் அங்குள்ளவர்களுக்கு மூளையே கிடையாதாம். இருக்கும் ஒரு சிலருக்கும் அது சரியாக வேலைசெய்வதில்லையாம்.


தத்வமசி
மே 05, 2025 18:59

ஊழல், கட்டபஞ்சாயத்து, மணல் கொள்ளை, கொலை-கொள்ளை, டாஸ்மாக் ஆறு, போதை பொருள் நடமாட்டம், இந்துக்களின் கோவில்களில் கெடுபிடி, கோவில்கள் இடிப்பு என்று எதை செய்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டு போடுபவர்கள் எதற்காக ஓட்டு போடுகிறார்கள் ? கேவலம் அவர்கள் கொடுக்கும் காசுக்காக. எல்லாம் இழந்த பின் காசை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள் ?


spr
மே 05, 2025 17:48

இப்படித் தேவையில்லாமல் "உதார்" விட்டே திரு அண்ணாமலை காணாமல் போனார். இவரும் அதே வேலையைச செய்கிறார். மக்களுக்கு திமுகவின் ஊழல் நன்றாகவே தெரியும் ஆனால் பாஜக அதற்கு மாற்றாக அமையுமா என்றுதான் அறியவில்லை. மத்திய அரசு தமிழக மக்களுக்குச் செய்த நல்ல செயல்கள் முழுமையாக அறியப்படவில்லை எனவே அது குறித்துப் பேசட்டும்


Barakat Ali
மே 05, 2025 16:22

அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்தவரைக்கும் அறிவாலய கும்பலுக்கு எனிமா கொடுத்துட்டு இருந்தாரு ..... நீங்க தேன்பாகு கொடுக்குறீங்க ..... நீங்க பேசுறதைக் கேட்டு அறிவாலயம் டோன்ட் கேர் சொல்லிடும் ....


அப்பாவி
மே 05, 2025 15:46

. இப்போ அரியணயிலெ அவிங்கதானே இருக்காங்க.


Oviya Vijay
மே 05, 2025 15:30

நயினார் அவர்களே... தயவுசெய்து நீங்கள் கூறிய இந்த அறிக்கையை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைக்க மறந்து விடாதீர்கள்... 2026 தேர்தல் முடிவு வரும் நாளில் ஒருவேளை நீங்கள் இதை மறந்தாலும் மறந்து போகலாம்... ஏனெனில் தேர்தல் முடிவுகளில் உங்கள் கட்சியின் நிலை கண்டு அன்றைய நாளில் நீங்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்க மறந்தாலும் மறந்திருப்பீர்... ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஒருமுறை முழங்கியது போல பிஜேபி தன் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டை ஆள முடியாது... அது 100% சதவீதம் உண்மை... 2026 தேர்தல் முடிவு வெளியாகும் நாளில் தோல்விக்கு பொறுப்பேற்று நீங்கள் உங்கள் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பீர்கள்... மீண்டும் வெற்றி பெறும் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூட தெரிவித்திருப்பீர்கள்... பொறுத்திருந்து பாருங்கள்... இது தான் நடக்கப் போகிறது...


guna
மே 05, 2025 17:14

பாவம் இந்த ஒவியரு.....இது மாதிரி முதல் ஆள மொக்கை கருத்து போட தான் லாயக்கு...


பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
மே 05, 2025 17:31

200 ஓவாய் கொத்தடிமை க்கு உண்மை நிலை புரியலையாக்கும்....


sridhar
மே 05, 2025 21:12

வாங்கும் கூலி 200 ரூபாய்க்கி ரெண்டு வரி எழுதினால் போதாதா .செம்ம போர் உங்க கருத்து .


சமீபத்திய செய்தி