உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியை ஒழிக்க திருமா புது ஐடியா

ஜாதியை ஒழிக்க திருமா புது ஐடியா

சென்னை : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார்.

அவர் அளித்த பேட்டி:

சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு, ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முறைப்படி நடைமுறைப்படுத்துமாறு முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயருடன், ஜாதி பெயரும் நிலைப்பெற்று விட்டது. அதனாலேயே , அந்த தலைவர்கள் ஜாதி பார்த்தனர் என கூற முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர், மா. கம்யூ., மூத்த தலைவரான நம்பூதிரிபாட் ஆகியோர், ஜாதி ஒழிய வேண்டும் என குரல் கொடுத்தனர். ஈ.வெ.ராமசாமி, ராமசாமி நாயக்கர் என அறியப்பட்டார்; திரு.வி.க., முதலியார் என அழைக்கப்பட்டார்; வ.உ.சிதம்பரம் பிள்ளை என இப்போது போடுவது இல்லை. வ.உ.சி., என நிலைப்பெற்று விட்டது. எனவே, கோவை அவினாசி மேம்பாலத்திற்கு, ஜி.டி.நாயுடு பெயருக்கு பதிலாக, ஜி.டி., என்ற இனிஷியலுடன் அவரது புகைப்படத்தை போடலாம். ஜி.டி.நாயுடு என பெயரை அடையாளப்படுத்துவது, ஜாதியை வளர்ப்பதற்காக இருக்காது என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சந்திரசேகர்
அக் 15, 2025 10:29

என்னதான் அரசாங்கம் சாதியை ஒழிக்க முயற்சி எடுத்தாலும் மக்கள் மனதில் உள்ள சாதி உணர்ச்சியை அடக்க முடியாது. அரசியல் கட்சிகளே சாதியை பார்த்துதான் அந்தந்த தொகுதிக்கு ஆட்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்றனர்.


Subburamu K
அக் 15, 2025 09:24

From the birth we are identified by caste community religion through the certificates issued for joining in schools, colleges. Later on caste community religious names are entered in government service register It shows the government policy is to maintain such discrimination. Political parties are also exploiting social affiliations in elections. All are enacting drama in this subject. Only modern youths may remove such discrimination in the society


VenuKopal, S
அக் 15, 2025 09:14

தப்புத் தப்பு. குருமா அப்டி எல்லாம் செய்யமாட்டார். விட்டா பிளாஸ்டிக் சேர் க்கு வேட்டு வைத்து விடுவீர்கள் போல...


ஜெகதீசன்
அக் 15, 2025 08:52

ஜாதி என்பது ஒருவருடைய பரம்பரை மற்றும் பிரத்தியேக பழக்கவழக்கங்கள் சார்ந்த தனிப்பட்ட விஷயம். இதில் அரசுக்கு வேலையே இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மேல் ஜாதி, கீழ் ஜாதி என அரசு ஏன் பிரிக்கணும்? ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் ஜாதி வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள் தானே.


N Sasikumar Yadhav
அக் 15, 2025 08:16

இடஒதுக்கீடு என்ற பிச்சையை ஒழித்துவிட்டால் ஜாதி வித்தியாசம் போய்விடும் என சொல்வாரா கொத்தடிமை திருமாமாவளவன்


vee srikanth
அக் 15, 2025 10:38

அது எப்படி ? புத்தரின் பக்தர்கள் என்று சொல்லும் அடங்க மறு - அல்லது 4 தட்டு கும்பல்கள்


அயோக்கிய திருட்டு திராவிடன்
அக் 15, 2025 06:39

கேடு கெட்ட அறிவு கெட்ட சுய புத்தி இல்லாத நீங்க ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும்.


D Natarajan
அக் 15, 2025 05:35

ஜாதியை ஒழிக்க முதலில் ஜாதிக் கட்சிகளை தடை செய்ய வேண்டும். மேலும் தேர்தலில் ஜாதியை வைத்து ஒதுக்கப்படும் தொகுதிகளை பொது தொகுதிகளாக அறிவிக்க வேண்டும். குருமா இந்த கோரிக்கையை வைப்பாரா


Nagarethinam
அக் 15, 2025 04:43

jathoyai olikka muthalil jathik katchi irukka kootathu, theruma