உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தவறு செய்வோரை சுட உத்தரவிட வேண்டும்

 தவறு செய்வோரை சுட உத்தரவிட வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது என்பதில், த.மா.கா., உறுதியாக இருக்கிறது. விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறக்கப்படாததால், விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். அண்ணாமலை ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். அதுபோலவே, த.மா.கா.,வும், தனித்தன்மையோடு, பலப்படுத்திக்கொள்ள நினைக்கிறது. சமீப நாட்களாக, குழந்தைகளை வெளியில் விடுவதற்கு கூட பெற்றோர் அச்சப்படும் சூழல் உள்ளது. கஞ்சா, மது, போதை பொருட்கள் தான் இதற்கு காரணம். கொலை, கொள்ளை, பலாத்காரம் தினமும் நடக்கின்றன. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில்,12 குற்றங்கள் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அரசு தனி கவனம் செலுத்தி, இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறு செய்பவர்களை சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். - ஜி.கே.வாசன் தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை