உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக நிர்வாகி நிர்மல் குமார் கைது

தவெக நிர்வாகி நிர்மல் குமார் கைது

கரூர்: கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி மீது அவதூறு பரப்பிய தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார். கடந்த செப்.,27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தவெக முக்கிய நிர்வாகி ஆனந்த் தலைமறைவாக உள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக தவெக கட்சி மற்றும் விஜயை விமர்சித்திருந்தது. இந்த நிலையில், விஜய் குறித்தும், அவரது கட்சி பற்றியும் விமர்சித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ