உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாக்கை வெட்டி டாட்டூ: இருவர் கைது

நாக்கை வெட்டி டாட்டூ: இருவர் கைது

திருச்சி: திருச்சி, மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 24. இவர், அதே பகுதியில், 'ஏலியன் ஈமோ டாட்டூ ஸ்டியோ' என்ற பெயரில், பச்சை குத்தும் மையம் நடத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7v7xd5hd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர், மும்பை சென்று, 2 லட்சம் ரூபாய் செலவில், கண்ணில் ஊசி போட்டு விழியை கலராக மாற்றுவது, நாக்கின் நுனியில், 'வி' வடிவில் வெட்டி, நாக்கை இரண்டாக காண்பிக்கும் டாட்டூ என, உயிருக்கு ஆபத்தான டாட்டூ போடுவதை கற்று வந்துள்ளார்.இது, உயிருக்கு ஆபத்தானது என தெரிந்தும், திருச்சியில் தன் மையத்தில், இயற்கைக்கு முரணாக இதுபோன்ற டாட்டூவை இருவருக்கு போட்டுள்ளார். மேலும், தன் கடையில் பணியாற்றும் நண்பரான, கூத்தைப்பாரையைச் சேர்ந்த ஜெயராமன், 24, என்பவருக்கும் கண்ணில் ஊசிபோட்டு, விழியை கலராக மாற்றி, நாக்கில் பிளவு ஏற்படுத்தி உள்ளார்.

இவற்றை செய்து கொண்ட முறையையும், ஜெயராமனின் டாட்டூவுடனான முகத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் சென்று தன் டாட்டூவை காட்டி போட்டோ எடுத்து, அதையும் சமூக வலைதளங்களில் ஜெயராமன் பதிவிட்டுள்ளார்.உயிருக்கு ஆபத்தான மற்றும் தவறான வழிகாட்டுதலுக்கான இந்த வீடியோக்களை பார்த்த, திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் பகுதி சுகாதாரத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, ஹரிஹரன், ஜெயராமனை கைது செய்தனர். ஏற்கனவே, 2016ம் ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லுாரியில் பயின்ற திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மாணவர், இதுபோன்று சலுானில் ஹேர் டிரான்பிளன்டேஷன் செய்தபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சம்பர
டிச 18, 2024 04:52

அடிச்சு கொல்லவும்


KayD
டிச 17, 2024 17:37

இவனை பல டிவி சானெல் ல பெருமையா காட்டிகிட்டு இருந்தாங்க ..இவனை காட்டி இவனுக்கு பிரீ ஆ புபிளிசிட்டி கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே தறி கேட்டு இருக்கும் புள்ளைங்கோ இவனை பாத்து இப்போ வெறி கொண்டு அலையுதுங்கோ ..


Srinivasan Ramabhadran
டிச 17, 2024 10:56

இந்த செய்கை எவ்வளவு ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று இவர்களுக்கு தெரியாதா? இதே போன்ற முயற்சிகளில் இளைஞர்கள் இறங்குவதை தடை செய்ய வேண்டும்.


Sudha
டிச 17, 2024 10:29

தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை வெளியிட வேண்டாம்


swami premadananda
டிச 17, 2024 07:51

The incident in Trichy is a horrifying example of dangerous trends gaining traction among some young people. This reckless disregard for human life and safety, disguised as body modification, is deeply disturbing. Injecting ink into someones eyes and splitting their tongue is not only life-threatening but also reveals a shocking lack of understanding about basic health and hygiene. Its crucial for the younger generation to understand that true self-expression should never come at the cost of ones well-being or the well-being of others. We need to promote responsible behavior and critical thinking to prevent such dangerous acts from happening again.


THAMIZH NENJAM
டிச 17, 2024 07:10

தமிழ் நாடு சுகாதார துறை இது போன்ற மையங்கள், தமிழக அரசு அனுமதி இல்லாமல் நடத்த கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.


இளந்திரையன் வேலந்தாவளம்
டிச 17, 2024 06:39

.... உபயோகித்து இருக்கலாம்


Kayd
டிச 17, 2024 05:58

Psycho.. இந்த கலாச்சாரம் வளர விட கூடாது


Kasimani Baskaran
டிச 17, 2024 05:32

நல்ல வேலையாக இவர்களால் மூளை டிரான்பிளன்டேஷன் செய்ய முடியாது. முடிந்தால் வித்தவுட் வித்தகரின் மூளை போல கூட போலியை உருவாக்கி இன்புற்று இருப்பார்கள்..


Narmatha Narmatha
டிச 17, 2024 04:52

Narmatha Narmatha


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை